நைஜீரியாவில் ஜோஸ் நகரில் நடந்த இரட்டைக் குண்டுவெடிப்பில் 118 பலியாகியுள்ளனர். சனநெருக்கடி மிக்க ஒரு சந்தை மற்றும் ஒரு மருத்துவமனை ஆகியவற்றை இலக்கு வைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
மேலும் பலரது சடலங்கள் இடிபாடுகளில் புதையுண்டு கிடக்கலாம் என்ற அச்சமும் காணப்படுகிறது.
வடகிழக்கு நைஜீர்யாவில் அவசர நிலை அமலில் உள்ளது. இஸ்லாமிய கிளர்ச்சிக்காரர்களான போகோ ஹராமுடன் அங்கு அரசாங்க படைகள் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த மாதம் போகோ ஹராம் அங்கு 200 பள்ளி மாணவிகளை கடத்திச் சென்றுள்ளார்கள்.
சன நெரிசல் மிக்க சந்தை தொகுதியில் முதல் குண்டு வெடித்ததுள்ளதுடன் 30 நிமிட இடைவேளையில் வைத்தியசாலையொன்றுக்கு அருகில் மற்றுமொறு குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் பல உயிர்களை காவு கொண்ட இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் இதுவரை உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் நைஜீரியாவில் மேற்கொள்ளப்பட்ட சில தாக்குதல்கள் பொக்கோ ஹராம் ஆயுததாரிகளால் நடத்தப்பட்டவை என அந்நாட்டு அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தொடர்தாக்குதல்களினால் குறித்த பகுதிகளில் பதற்றம் நிலவி வரும் நிலையில் சில இடங்களில் இந்த தாக்குதல்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
தாக்குதல்களுக்கு கண்டனம் வெளியிட்டுள்ள அந்நாட்டு ஜனாதிபதி நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு உறுதியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
குண்டு வெடித்த இடத்தில் எடுக்கப்பட்ட காணொளியை இங்கு காணலாம்.