இந்தோனேஷியாவில் உள்ள எரிமலை ஒன்று மிகப்பயங்கரமாக வெடித்து சுமார் 12 மைல்கள் உயரத்திற்கு புகையை வெளிப்படுத்தியது. இந்த அதிர்ச்சி காட்சியை பயணிகள் விமானத்தில் இருந்த ஒரு பயணி தனது செல்போன் மூலம் புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது உலகம் முழுவதும் பெருவாரியான இணையதள உபயோகிப்பாளர்களால் பகிரப்பட்டு வருகிறது. சமூக வலைத்தளங்களிலும் இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தோனேஷியாவில் உள்ள Mount Sangeang Api என்ற எரிமலை நேற்று முதல் வெடிக்க தொடங்கியுள்ளது. சுமார் 12 மைல்கள் உயரத்திற்கு புகை வெளியாகியுள்ளதால் அந்த பகுதியே இருள் அடைந்ததுபோல் இருக்கின்றது.
இந்த அதிர்ச்சி காட்சியை பார்த்த விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்த ஒரு பயணி புகைப்படங்களும், வீடியோவும் எடுத்து இணையதளத்தில் பதிவு செய்தார். இவர் பயணம் செய்த விமானம் Bali என்ற நகரில் இருந்து Labuan Bajo என்ற நகருக்கு செல்லும்போதுதான் இந்த அரிய புகைப்படங்களை அவர் எடுத்துள்ளார்.
Mount Sangeang Api என்ற இந்த எரிமலை முதன்முதலாக 1512ஆம் ஆண்டு தீக்குழம்புகளை வெளிப்படுத்தியது. அதன்பின்னர் இதுவரை 20 முறை இந்த எரிமலை வெடித்துள்ளதாக கூறப்படுகிறது.