ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுவதற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கு முல்லைத்தீவு இராணுவ முகாமில் வைத்து, இளம்பெண்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டுள்ளது.
ஹிர்தாரமணி என்ற தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனத்துக்காகவே, 68-3வது பிரிகேட் தலைமையகத்தில், கேடந்த திங்கட்கிழமை நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக- சிறிலங்கா இராணுவத்தினரே நேர்முகத் தேர்வுகளை நடத்தியுள்ளனர்.
முல்லைத்தீவைச் சேர்ந்த சுமார் 160 தமிழ்ப் பெண்கள் இந்த நிறுவனத்துக்காக ஆட்சேர்ப்புச் செய்யப்படவுள்ளதாக சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.
வடக்கில், அரச சேவை வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்புச் செய்து வந்த சிறிலங்கா இராணுவம், தற்போது தனியார் நிறுவனங்களுக்கான ஆட்சேர்ப்பையும் துவங்கியுள்ளது.