பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ராம்லீலா இயக்குனர் சஞ்சய்லீலா பஞ்சாலி, தனது அடுத்த படத்தில் நடிக்க தீபிகா படுகோனேவை ரூ.8 கோடி கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளார்.
இதன்மூலம் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை தீபிகா படுகோனே என கூறப்படுகிறது.
பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோன், ராம்லீலா படத்தில் நடிக்க ஐந்து கோடி ரூபாய் சம்பளம் வாங்கினார். தற்போதைய புதிய படத்திற்கு ரூ.8 கோடி சம்பளம் வாங்கியிருப்பதால் மற்ற போட்டி நடிகைகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பாலிவுட்டின் பிற நடிகைகளான காத்ரீனா கைப், சோனாக்ஷி சின்ஹா, ப்ரியங்கா சோப்ரா கரீனா கபூர் ஆகிய நடிகைகள் 4 முதல் 5 கோடி வரை சம்பளம் வாங்கிவரும் வேளையில் தீபிகாவின் சம்பளம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
ரஜினியுடன் தீபிகா படுகோன் நடித்த கோச்சடையான் தோல்வியடைந்த போதிலும், தீபிகாவின் மார்க்கெட் குறையவில்லை. மேலும் இந்த புதிய படத்தில் மீண்டும் ரன்வீர் கபூருடன் ஜோடி சேரவிருப்பதால், இருவரின் கெமிஸ்ட்ரி பாலிவுட் ரசிகர்களால் கவரப்படும் என்பதே தீபிகாவின் சம்பள உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.
தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து வரும் நயன்தாரா, அனுஷ்கா ஆகியோர் ரூ.2 கோடி வரை சம்பளம் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது