எதிர்வரும் 8ம் திகதி இடம்பெறவுள்ள கும்பாபிஷேக நிகழ்வை முன்னிட்டு மட்டக்களப்பு புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளியம்மனின் ஆலயத்தில் எண்ணைக் காப்புச் சாத்தும் நிகழ்வு மற்றும் கிரியைகள் இன்று அதிகாலை ஆரம்பமானது.
இவ் எண்ணைக் காப்புச் சாத்தும் நிகழ்வு நாளை சனிக்கிழமை மாலை 4 மணி வரை இடம்பெறவுள்ளது. இதில் இன்றைய தினம் ஆயிரக்கணக்கான மெய்யடியார்கள் கலந்துகொண்டனர்.
இவ் பக்திபூர்வமான நிகழ்வில் முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் கலந்துகொண்டார் இடம்பெறவுள்ள கும்பாபிஷேக நிகழ்வை முன்னிட்டு கிரிஜைகள் தொடர்ந்தும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.
இன்றைய தினம் இந் நிகழ்வுகள் Battinews.com இணையத்தளத்தினால் நேரடி ஔிபரப்பும் செய்யப்பட்டது.
இந் நாட்களில் ஆலய பரிபாலன சபையினரால் அன்னதானமும் வழங்கப்படுகின்றது.