லாஸ்வேகாஸ்: அமெரிக்காவில் பீட்சா கடையில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 2 போலீசார் உள்பட 5 பேர் பலியாயினர்.அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நேற்று காலை ஒரு பீட்சா கடை முன்பாக வந்த ஆண், பெண் ஆகிய 2 பேர் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டனர்.
இதில் பீட்சா கடையில் சாப்பிட்டு கொண்டிருந்த 2 போலீசார் மீது துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்து ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு போலீஸ்காரர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதற்கிடையே, துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள், ‘புரட்சிக்கான நேரம் வந்து விட்டது’ என்று கோஷமிட்டபடியே அருகில் இருந்த வால்மார்ட் நிறுனத்திற்குள் நுழைந்தனர். அங்கும் அந்த நபர்கள் ஒருவரை சுட்டு கொன்றனர்.
அதற்குள் தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அந்த பகுதி முழுவதையும் துப் பாக்கி முனையில் போலீ சார் சுற்றி வளைத்தனர்.இதனையடுத்து, அந்த மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் தங்களையும் சுட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த சம்பவத்தால், வால்மார்ட், பீட்சா உள்ளிட்ட கடைகளில் இருந்த வாடிக்கையாளர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். போலீசார் இரண்டு பேரின் உடல்கள் உள்பட 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து லாஸ்வேகாஸ் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Las Vegas police killer’s online gun rant