ரஜினியுடன் லிங்கா, அஜீத்துடன் ஒரு படம் மற்றும் தெலுங்கில் ருத்ரமாதேவி, பாஹுபாலி என பிசியாக இருக்கும் நடிகை அனுஷ்காவிற்கு திருமண ஏற்பாடுகள் வெகு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அனுஷ்காவின் பெற்றோர் ஒருசில மாப்பிள்ளைகளின் பட்டியலை அனுஷ்காவிடம் கொடுத்து அவர்களில் ஒருவரை தேர்ந்தெடுக்க சொல்லி வற்புறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை அனுஷ்கா தனக்கு வரப்போகிற கணவர் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். ‘ஒருவர் நல்லவரா? கெட்டவரா என்பதை கண்களை வைத்து கண்டுபிடித்துவிடலாம். உதடுகள் பொய் சொன்னாலும் கண்கள் அந்த பொய்யை காட்டிக்கொடுத்துவிடும்.
எனவே எனக்கு வரப்போகிற கணவர் நல்லவரா என்பதை அவர் கண்களை பார்த்தவுடனே நான் புரிந்துகொள்வேன். மேலும் கண்களை மறைத்து கூலிங் கிளாஸ் போடும் ஆண்களிடம் நான் பழகவே மாட்டேன்” என்று கூறியுள்ளார்.
மேலும் ஆண்களுக்கு கண்கள் பெரிதாக இருந்தால் அவர்களிடம் பொய் குறைவாக இருக்கும் என்கிறது சாஸ்திரம். எனவே பெரிய கண்களையுடைய ஒருவரைத்தான் நான் திருமணம் செய்துகொள்வேன். என்று கூறியுள்ளார்.
யோகா ஆசிரியையான அனுஷ்கா, தனது வருங்கால கணவர் குறித்து இன்னும் என்னென்ன எதிர்ப்பார்ப்புகள் வைத்துள்ளாரோ? என்று கோலிவுட், டோலிவுட் படவுலகம் கிசுகிசுக்கிறது.