அளுத்கமை பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் குறித்து கடும் சீற்றமும் அதிருப்தியும் அடைந்திருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் – அது குறித்து, தற்போது பொலிவியா நாட்டில் ‘ஜி.77’ நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை தொலைபேசி மூலம் அவசரமாகத் தொடர்புகொண்டு பேசினார் என நம்பகரமாக அறிய வந்தது.
தமது கடும் விசனத்தை வெளியிட்ட ரவூப் ஹக்கீம், இனிமேலும் அரசில் தொடர்ந்து அமைச்சராக நீடிக்க முடியாது என்பதை ஜனாதிபதிக்குக் கோடி காட்டினார் என்றும் கூறப்பட்டது.
இது குறித்து இன்று திங்கள் அல்லது செவ்வாய் அவர் ஒரு தீர்க்கமான முடிவு எடுப்பார் என்றும் அவருடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிநாடு போயிருக்கும் இச்சமயத்தில் அவரது சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷவும் நாட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. (மலரும்)