ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Tuesday, February 7
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    இந்தியா

    கால்களில் விழுந்து வணங்குதல்; மோடியின் கருத்து தமிழகத் தலைவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துமா?

    AdminBy AdminJune 16, 2014No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    எம்.பிக்கள் யாரும் என் காலிலோ அல்­லது ஏனைய பா.ஜ.க. தலை­வர்­களின் காலிலோ விழக்­கூ­டாது என்று பிர­தமர் நரேந்­திர­மோடி கண்­டிப்­பான உத்­த­ர­விட்­டுள்ளார். இது இந்­தி­யா­வி­லுள்ள ஏனைய தலை­வர்­க­ளுக்கு ஒரு முன்­னோடி அறி­விப்­பாகும்.

    காலில் விழுந்து வணங்கி காக்கா பிடிக்கும் வேலையில் ஈடு­ப­டக்­கூ­டாது என்­பதே அவரின் கருத்­தாகும். மூத்த தலை­வர்கள் மற்றும் பெரி­யார்­களின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெறு­வது இந்­திய பண்­பாடு. இதையே பெரி­ய­வர்­களும் மூத்த தலை­வர்­களும் எதிர்­பார்க்­கின்­றனர்.

    அதே­வேளை வயதில் குறைந்த அதி­கா­ர­மிக்க தலை­வர்­களின் கால்­க­ளிலும் சிலர் விழுந்து வணங்­கு­கின்­றனர். இதன் நோக்கம் உண்­மையில் வணக்கம் தெரி­விப்­ப­தல்ல காக்கா பிடிப்­பது தான் என்­பதே பிர­தமர் மோடி தெரி­வித்­தி­ருக்கும் கருத்தின் அர்த்தம்.

    கடந்த வாரம், லோக்­சபா தேர்­தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க. எம்.பிக்களின் கூட்டம் இந்­திய நாடா­ளு­மன்ற மைய மண்­ட­பத்தில் நடை­பெற்­றது.

    இந்த கூட்­டத்தில் உரை­யாற்­றி­ய­போதே மோடி இதனை தெரி­வித்­துள்ளார். காக்கா பிடிக்கும் வேலை­க­ளிலும், முகஸ்­துதி பாடும் வேலை­க­ளிலும் எம்.பி.க்கள் ஈடு­ப­டக்­கூ­டாது.

    தங்­க­ளது ஆற்­றலை வளர்த்­துக்­கொண்டு திற­மை­யுடன் செயற்­பட வேண்டும். மக்­களை அடிக்­கடி சந்­தித்து அவர்­க­ளின் பிரச்­சி­னை­களைக் கேட்­ட­றிந்து அதற்கு ஏற்­ற­வாறு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். அரசின் திட்­டங்­களை அடி­மட்ட மக்­க­ளுக்கு எடுத்துச் செல்­வதே அவர்­களின் முக்­கிய பணி­யாக இருக்க வேண்டும் என்று தெரி­வித்­துள்ளார்.

    ஒரு உண்­மை­யான தலை­வனின் அறி­வு­றுத்தல் இது­வாகும். இதை ஏனைய தலை­வர்­களும் பின்­பற்ற வேண்டும்.

    ஆசி­யாவின் மிகப் பெரிய நாடு­களில் ஒன்­றான இந்­தி­யாவின் பிர­தமர் நரேந்­தி­ர­மோடி இவ்­வா­றான ஒரு கொள்­கையை கொண்­டி­ருப்­பது வர­வேற்­கத்­தக்­கது. ஆனால் இந்­தி­யாவின் 29 மாநி­லங்­களில் ஒன்­றான தமிழ் நாட்டில் நடப்­ப­தென்ன? பிர­தமர் நரேந்­தி­ர­மோ­டியின் கொள்­கைக்கு எதிர்­மா­றான சம்­ப­வங்­களே அங்கு இடம் பெறு­கின்­றன என்­பது சுட்டிக் காட்­டத்­தக்­க­தாகும்.

    தமி­ழக முதல்வர் ஜெய­ல­லி­தாவின் கால்­களில் விழுந்து வணங்­கு­வதை நிரந்­தர கட­மை­யாக வைத்துக் கொண்­டி­ருக்­கின்­றனர் அ.தி.மு.கவின் அமைச்­சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் உறுப்­பி­னர்கள் ஆகியோர்.

    ஜெய­லி­தாவை விட வயதில் மூத்த தலை­வர்கள் கூட அவ­ரது கால்­களில் விழுந்து வணங்­கு­வதை வழக்­க­மாகக் கொண்­டி­ருக்­கின்­றனர். இதில் சிரேஷ்ட அமைச்­சர்கள் பலரும் அடங்­கு­கின்­றனர்.

    முன்னர் தமிழ் நாட்டின் முத­ல­மைச்­ச­ராக இருந்­த­வரும் தற்­போது சிரேஷ்ட அமைச்­ச­ராக இருக்கும் ஒருவரும் கூட ஜெய­ல­லி­தாவின் கால்­களில் விழுந்து வணங்­கு­வதை வழக்­க­மாகக் கொண்­டி­ருக்­கின்றார்.

    இவ்­வாறு கால்­களில் விழுந்து வணங்­கு­ப­வர்­களை ஜெய­ல­லிதா தடுத்து நிறுத்­து­கின்­றாரா? அல்­லது அதனை விரும்­பு­கி­றாரா என்­பது தெரி­ய­வில்லை. அமைச்­சர்­களும் ஏனைய முக்­கி­யஸ்­தர்­களும் (குறிப்­பாக ஆண்கள்) தனது கால்­களில் விழுந்து வணங்­கு­வதை விருப்­பத்­துடன் ஏற்றுக் கொள்­கின்றார் என்­பது போலவே அவ­ரது செயற்­பா­டுகள் தெரி­கின்­றன.

    ஒரு தலை­வரின் சாத­னை­மிக்க செயற்­பா­டுகளுக்கு அவரைப் புகழ்­வ­திலும் அவ­ருக்கு மரி­யாதை செய்­வ­திலும் தவ­றில்லை. ஆனால் ஏன் காலில் விழுந்து வணங்க வேண்டும்? தமது காரி­யங்கள் நடக்க வேண்டும் என்­ப­தற்­கா­கவும், பதவி சுக­போ­கங்­க­ளுக்­கா­கவும் ஒரு­வ­ரது கால்­களில் விழுந்து வணங்­கு­வது சரி­தானா?

    images5தமி­ழக தலை­வர்கள் இதைப் பற்றி ஏன் சிந்­திக்­கி­றார்­க­ளில்லை. சுய­ம­ரி­யாதை, விடு­தலை, சுயகௌரவம், வீரம், விவேகம் பற்­றி­யெல்லாம் பிற­ருக்கு உப­தேசம் செய்­கி­றார்கள்.

    ஆனால் சுய­கௌ­ர­வத்தை இழந்து இன்­னொ­ரு­வரின் கால்­களில் விழுந்து எவ்­வாறு வணங்­கு­கின்­றார்கள்? இதைப்­பற்றி சிந்­தித்துப் பார்ப்­ப­தில்­லையா? என்று தமி­ழ­கத்தின் சுய­ம­ரி­யா­தை­மிக்க தலை­வர்கள் கேட்­கின்­றனர்.

    கூடங்­குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்­டத்­துக்கு தலைமை தாங்கி நடத்தி வந்த உத­ய­குமார் சிக்­கலில் மாட்டிக் கொண்­டி­ருக்­கிறார். கூடங்­கு­ளத்தில் அணு­உலை அமைக்­கக்­கூ­டாது. அதனால் பிர­தே­சத்­தி­லுள்ள மக்கள் பாதிக்­கப்­ப­டு­வர்கள் என்று நீண்ட போராட்­டத்தை நடத்தி வந்­தவர் உத­ய­குமார்.

    இந்த அணு உலை எதிர்ப்புப் போராட்­டத்தை நடத்­து­வ­தற்கு பெருந்­தொ­கை­யான நிதி செல­வி­டப்­பட்­டுள்­ளது. இந்த செல­வு­க­ளுக்­கான நிதி எங்­கி­ருந்து வந்­தது? யார் கொடுத்­தது என்­ப­துதான் உத­ய­கு­மா­ருக்கு ஏற்­பட்­டுள்ள சிக்­க­லாகும்.

    கூடங்­குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்­டத்தை நடத்­து­வ­தற்­காக உத­ய­கு­மா­ருக்கு 38,720 அமெ­ரிக்க டொலர்கள் இரு தவ­ணை­களில் கிடைத்­துள்­ள­தாக இந்­திய மத்­திய உள­வுத்­துறை தெரி­வித்­துள்­ளது. இது தொடர்­பான அறிக்­கையை உள­வுத்­துறை பிர­தமர், நிதியமைச்சர், உள்­துறை அமைச்சர் உள்­ளிட்­டோ­ருக்கு அனுப்பி வைத்­துள்­ளது.

    இந்தப் பணம் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து அனுப்­பப்­பட்­டுள்­ள­தென்றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக அமெ­ரிக்கா, ஜேர்­மனி ஆகிய நாடு­க­ளி­லி­ருந்தே இந்த நிதி வழங்­கப்­பட்­டுள்­ளது. என்ன கார­ணத்­துக்­காக அணு உலை எதிர்ப்புப் போராட்­டத்தை உத­ய­குமார் ஊடாக முன்­னெ­டுத்­தன என்­பதே தற்­போ­துள்ள கேள்­வி­யாகும்.

    அணு உலை திட்­டத்தை தடுத்து நிறுத்த அந்த நாடுகளிலுள்ள சில நிறுவனங்கள் எதற்காக முயற்சி செய்­தன?

    இந்­தி­யாவின் வளர்ச்­சியை விரும்­பாத சில சக்­தி­களே இவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

    இந்­தி­யாவின் வளர்ச்­சியை விரும்­பாத சில சக்­திகள் தொண்டு நிறு­வ­னங்கள் ஊடாக இவ்­வா­றான தடை­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு முனை­வ­தாக தற்­போது தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன. கூடங்­குளம் அணுஉலை மாத்­தி­ர­மல்ல வேறு­பல திட்­டங்­க­ளுக்கும் தடை­களை ஏற்­ப­டுத்தி வரு­வ­தாகக் கூறப்­ப­டு­கி­றது.

    குறிப்­பாக பழங்­குடி மக்கள் மற்றும் ஆதி­வா­சி­களை பயன்­ப­டுத்தி வளர்ச்சித் திட்­டங்­க­ளுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வரு வதாகவும் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது.

    article-2120782-12583E04000005DC-67_634x640அத்துடன் இந்தியாவிலிருந்து செயற்பட்டு வரும் பல்வேறு தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள் பற்றியும் சந்தேகம் எழுந்துள்ளன. இது பற்றி விசாரணை கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதே வேளை தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு உதயகுமார் மறுப்புத் தெரிவித்துள்ளார். தன்மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் சுமத் தப்பட்டுள்ளதாகவும் அதற்கு எதிராக மானநஷ்ட வழக்கு தொடருவேன் எனவும் உதயகுமார் அறி வித்துள்ளார். எது எப்படியோ விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டால் பல உண்மைகள் வெளிவரும்.

    நல்லதம்பி நெடுஞ்செழியன்

    Post Views: 782

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    தமிழ்நாடு: எடப்பாடி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் – ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் புதிய திருப்பம்

    February 6, 2023

    `இறங்கும் அதானி, ஏறும் அம்பானி’… உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் நுழைந்தார் அம்பானி!

    February 6, 2023

    மருமக பொண்ணுக்கு 500 கிலோ மாலை.. தாய்மாமன் சீருன்னா சும்மாவா.. அசர வைக்கும் வீடியோ..!

    February 6, 2023

    Leave A Reply Cancel Reply

    June 2014
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30  
    « May   Jul »
    Advertisement
    Latest News

    ஜன்னல் சீட்டுக்காக பஸ், ட்ரெயின்ல இல்ல.. Flight -ல நடந்த சண்டை.. முட்டி மோதிக் கொண்ட பெண்கள்!!

    February 7, 2023

    பெட்ரோல் பங்கில் பணத்தை தூக்கி ரோட்டில் வீசிய கார் உரிமையாளர்.. கண்ணீருடன் பொறுக்கி எடுக்கும் பெண் ஊழியர்.. உலகளவில் அதிர்ச்சி சம்பவம்.!

    February 7, 2023

    தமிழ்நாடு: எடப்பாடி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் – ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் புதிய திருப்பம்

    February 6, 2023

    சாமியார் தோற்றத்தில் நடிகை தமன்னா…! ரசிகர்கள் ஷாக்…!

    February 6, 2023

    துருக்கி-சிரியா நில நடுக்கம் பலி எண்ணிக்கை 2,300 ஆக உயர்வு…!

    February 6, 2023
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • ஜன்னல் சீட்டுக்காக பஸ், ட்ரெயின்ல இல்ல.. Flight -ல நடந்த சண்டை.. முட்டி மோதிக் கொண்ட பெண்கள்!!
    • பெட்ரோல் பங்கில் பணத்தை தூக்கி ரோட்டில் வீசிய கார் உரிமையாளர்.. கண்ணீருடன் பொறுக்கி எடுக்கும் பெண் ஊழியர்.. உலகளவில் அதிர்ச்சி சம்பவம்.!
    • தமிழ்நாடு: எடப்பாடி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் – ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் புதிய திருப்பம்
    • சாமியார் தோற்றத்தில் நடிகை தமன்னா…! ரசிகர்கள் ஷாக்…!
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version