ஜப்பானில் உள்ள 53 வயது நபர் ஒருவர் பெண்களின் உள்ளாடை மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆடைகளை திருடி அதை ரகசியமாக வீட்டில் தனக்கு அணிந்து பார்க்கும் பழக்கும் உடையவராக இருந்துள்ளார். தற்போது அவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
ஜப்பானின் Mihama என்ற பகுதியை சேர்ந்த 53 வயது Hirose என்பவர் ஜப்பானில் உள்ள Wakayama National College of Technology என்ற கல்வி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவர் தன்னுடைய நிறுவனத்தில் பயிலும் மாணவிகளின் உள்ளாடைகள், ஸ்போர்ட்ஸ் ஆடைகள் முதலியவற்றை திருடும் பழக்கத்தை சுமார் ஐந்துவருடகாலமாக உடையவராக இருந்துள்ளார்.
மாணவிகளின் உள்ளாடைகள் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆடைகள் திடீர் திடீரென காணாமல் போவது குறித்து புகார் வந்ததால் இதுகுறித்து விசாரணை செய்த ஜப்பான் போலீஸார், இந்த திருட்டு வேலையை செய்தது மாணவிகள் கல்வி பயிலும் இன்ஸ்ட்டியூட்டில் வேலை செய்யும் Hirose தான் என்று தகவல் கிடைத்தது.
தகவல் அறிந்ததும் போலீஸார் இவருடைய வீட்டை அதிரடியாக சோதனை செய்தனர். அவருடைய வீட்டில் சுமார் 600 பெண்கள் அணியும் ஆடைகள் இருந்தன.
அவற்றில் பெரும்பாலானவை பெண்களின் உள்ளாடைகள் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் போலீஸார் Hirose அவர்களிடம் நடத்திய விசாரணையில் அடிக்கடி பெண்களின் உள்ளாடைகளை திருடி அதை தனிமையில் அணிந்து பார்த்து மகிழ்ச்சி அடைந்ததாகவும், இந்த பழக்கம் தன்னிடம் பல வருடங்களாக இருந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.