ஈராக்கின் சுன்னி இஸ்லாமிய ஆயுததாரிகள் நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது தாக்குதலை ஆரம்பித்துள்ளனர். சுத்திகரிப்பு நிலையத்தின் இரு திசைகளில் இருந்து கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை தொடுத்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன.
தலைநகர் பக்தாத்தின் வடக்கில் இருந்து 210 கிலோமீற்றர் தொலைவில் பெய்ஜி (Baij நகரில் இருக்கும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத் தின் உதிரிப்பாகங்கள் வைக்கப்பட் டிருக்கும் கிடங்கொன்றில் இருந்து புகைமூட்டம் வெளிவந்தவண்ணம் இருப்பதாக சுத்திகரிப்பு நிலையத் தின் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி ராய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் பெய்ஜp எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் 75 வீதமான பகுதி ஆயுததாரிகளின் கட்டுப்பாட்டில் வந்து விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
Shia women in the city of Najaf show their willingness to join Iraqi security forces in the fight against ISIS
மறுபுறத்தில் சுன்னி கிளர்ச்சி யாளர்கள் தலைநகர் பக்தாதை நோக்கி வேகமாக முன்னேறிவரும் நிலையில் அரச படைகள் புதிய வான் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளன. ஈராக்கின் மேற்கு நகரான ரமடியிலும் (ramadi )நேற்று மோதல்கள் இடம்பெற் றுள்ளன.
ஐசிஸ் என அழைக்கப்படும் ஈராக் இஸ்லாமிய தேசம் மற்றும் அதனுடன் கூட்டுச்சேர்ந்திருக்கும் சுன்னி முஸ்லிம் போராளிகள் ஈராக்கின் இரண்டாவது மிகப்பெரிய நகரான மொசூலை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சூழலில் சலாஹ{த் தீன் மாகாணத்தின் டியாலா நகரில் ஆயுததாரிகளின் முன்னேற்றத்தை தடுக்க அரசு போராடி வருகிறது.
இந்நிலையில் சுன்னி மற்றும் குர்திஷ் தலைவர்களுடன் கடந்த செவ்வாய்க்கிழமை தொலைக் காட்சியில் தோன்றிய பிரதமர் நூரி அல் மலிக்கி நாட்டு மக்களிடம் தேசிய ஐக்கியத்திற்கு அழைப்பு விடுத்தார். அரசு அல்லாத படையி னர் தமது ஆயுதங்களை கீழே வைக்கும்படியும் அவர் கோரிக்கை விடுத்தார்.
எனினும் ஈராக் பிரதமர் அரச படையுடன் ‘ஷியா முஸ்லிம்களுக்கும் ஆயுதம் விநியோகித்து ‘ ‘ஷியா ஆயுதக் குழுவையும் உருவாக்கி வரும் நிலையில் அவர் இவ்வாறு அழைப்பு விடுப்பது நடைமுறைச் சாத்தியமற்றது என்று அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
Mehdi Army fighters – a Shia militia – march during a military-style training in Najaf
ஈராக்கில் கடந்த வாரம் கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை ஆரம்பித் தது தொடக்கம் இதுவரை நூற்றுக் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் ஐசிஸிடம் சிக்கிக் கொண்ட இராணுவத்தினரை கூட் டாக படுகொலை செய்யும் புகைப் படங்கள் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பகுபா நகரில் இடம்பெற்றுவரும் மோதலின்போது 44 கைதிகள் பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து கொல்லப்பட்டுள்ளனர். எனினும் இந்த கொலைக்கான காரணம் பற்றி உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில் ‘ ‘ஷியா முஸ்லிம்களின் புனிதஸ்தலங்களை சுன்னி ஆயுததாரிகளிடம் இருந்து பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக் கப்படும் என்று ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரவ்ஹானி நேற்று உறுதி அளித்தார்.
‘அன்புக்குரிய கர்பலா, நஜிப், கதிமியா மற்றும் சமர்ராவே உங்களை பாதுகாக்க ஈரான் மக்கள் அனைத்து நவடிக்கைகளையும் எடுப்பார்கள் என்பதை மிகப்பெரிய சக்திகள் மற்றும் அவர்களது அடி வருடிகள் மற்றும் பயங்கரவாதிகள் ஆகியோரை எச்சரிக்கிறேன்” என்று அவர் உணர்ச்சி பூர்வமாக குறிப்பிட் டார்.
இதில் ஈராக்கில் தீவிரவாதிகளுக்கு எதிராக போராடி புனிதஸ் தலங்களை பாதுகாக்க தயாராக இருப்பதாக ஈரான் மக்கள் ஜனாதிபதி ரவ்ஹானிக்கு கையொப்பத்து டன் கடிதம் அனுப்பியுள்ளதை சுட்டிக்காட்டியே அவர் மேற்படி கருத்தை வெளியிட்டார்.
மறுபுறத்தில் ஈராக் ஒரு சிவில் யுத்தத்திற்கு முகம்கொடுக்கும் அச் சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக எச்சரித்தி ருக்கும் சவு+தி அரேபியா அது பிராந்தியம் எங்கும் பாதிப்பை செலுத்தும் அபாயம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
சவூதி வெளியுறவு அமைச்சர் சவுத் அல் பைசல் ஜித்தாவில் நேற்று நடந்த நிகழ்வொன்றில் உரையாற்றும்போது, ஈராக்கில் சிறுபான்மை சுன்னி முஸ்லிம்களுக்கு எதிராக பாகுபாட்டு கொள்கையை பிரதமர் நூரி அல் மலிக்கி யின் அரசு கடைப்பிடித்து வந்ததே தற்போதைய பதற்ற சூழலுக்கு காரணம் என்று குற்றம் சுமத்தினார்.
ஐசிஸ் போராளிகளுக்கு உதவுவதாக ஈராக் அரசு சவூதி அரேபியா மீது குற்றம் சுமத்தியுள்ளமை குறிப் பிடத்தக்கது.
இந்நிலையில் ஈராக் நேரப்படி நேற்று அதிகாலை எண்ணெய் சுத்தி கரிப்பு நிலையம் மீதான தாக்கு தலை ஆயுததாரிகள் ஆரம்பித்த தாக ராய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த மோதலில் ஒரு சில எண்ணெய்த்தளங்களும் அழிக்கப் பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பெய்ஜp சுத்திகரிப்பு நிலையத்தின் மூன்று வாயில்களூாடாக ஆயுததாரி கள் தாக்குதலை ஆரம்பித்துள்ள னர்.
‘ஆயுததாரிகளால் சுத்திகரிப்பு நிலையத்திற்குள் நுழைய முடிந் திருக்கிறது” என்று சுத்திகரிப்பு நிலையத்திற்குள் இருக்கும் பெயரை வெளியிடாத அதிகாரி ஒருவர் ராய்ட்டருக்கு விபரித்துள் ளார். ‘அவர்கள் தற்போது உற்பத்தி பிரிவுகள், நிர்வாகக் கட்டிடம் மற் றும் நான்கு கண்காணிப்பு கோபு ரங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இது சுத்தி கரிப்பு நிலையத்தில் 75 வீதமான பகுதியாகும்” என்று அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
Alleged ISIS militants in the town of Baiji in recent days
பெய்ஜி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் வெளிநாட்டு தொழி லாளர்கள் ஏற்கனவே அங்கிருந்து அகற்றப்பட்டு விட்டபோதும் உள் நாட்டு தொழிலாளர்கள் அங்கு தொடர்ந்தும் பணியில் ஈடுபட்டுள்ள னர்.
ஈராக்கின் ஒட்டுமொத்த எண்ணெய் உற்பத்தியில் பெய்ஜி சுத்திகரிப்பு நிலையத்தில் கால்பங்கிற்கும் அதிகமான எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த உற்பத்தி கள் அனைத்தும் பெட்ரோல், சமை யல் எண்ணெய் மற்றும் மின் உற் பத்தி நிலையங்களுக்கான எரிபொ ருள் என்று உள்ளுர் பாவனைக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாக அதி காரிகள் ஏ.பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டுள்ளனர்.
மேற்கில் அன்பார் மாகாண தலை நகர் ரமடியில் ஆதிக்கம் செலுத்தும் ஐசிஸ் போராளிகள் அங்கிருக்கும் பழங்குடியினரோடு சேர்ந்து அருகில் இருக்கும் நகரங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களை தாக்கி முன்னேறி வருவதாக குறிப்பிட் டுள்ளனர்.
மறுபுறம் நாட்டின் வட பகுதியில் கடந்த திங்கட்கிழமை ஆயுததாரிக ளால் கைப்பற்றப்பட்ட யுத்த ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த டெல் அபார் நகரின் ஒரு பகுதியை மீட்டிருப்பதாக ஈராக் அரசு குறிப்பிட்டுள்ளது.
Kurdish fighters are resisting the militants in the north
ஆயுததாரிகளுக்கு எதிரான யுத்தத்தில் முன்னேற தவறிவரும் அரச படையின் நான்கு தளபதிகளை பிரதமர் மலிக்கி அதிரடியாக பதவி நீக்கியுள்ளார். இதில் ஐசிஸ் போராளிகள் முன்னேற்றம் கண்ட முதல் மாகாணமான நின்வாஹ்வின் கட்டளை தளபதியும் நீக்கப்பட்டுள் ளார்.
இதனிடையே ஈராக் இஸ்லா மிய தேசம் ஆயுததாரிகள் பக்தாதை நெருங்கி வரும் நிலையில் தலை நகரில் இருக்கும் மக்கள் உணவு மற்றும் குடிநீரை சேமிக்க ஆரம் பித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன. மோசமான மோதலுக்கு முகம் கொடுக்கும் அச்சத்தில் தலைநகரில் உணவுப் பொருட்களின் விலையும் அதிகரித்து வருவதாக கூறப்படு கிறது.
தலைநகர் பக்தாதிலிருந்து 45 நிமிட பயண தூரத்தில் இருக்கும் பகுபா நகரில் இரு தரப்பு மோதல் வெடித்துள்ளது. இதனால் நகரில் இருக்கும் மக்கள் குறிப்பாக ஆயிரக்காணக்கான ‘ஷியா முஸ்லிம் கள் வெளியேறி வருகின்றனர். இந் நிலையில் சுன்னி போராளி கள் வடக்கு மற்றும் மேற்கு பகுதிக ளால் பக்தாதை நெருங்கியுள்ளனர்.
Baghdad has been hit by new car bomb attacks since the Sunni offensive started
The government has insisted that food supplies are not in danger and that ISIS will not be able to take Baghdad
Young Iraqis have been volunteering to serve in the battle with the militants
Correspondents have warned that Iraq could be on the brink of outright sectarian war between Sunnis and Shias (seen marching here)
Half a million people are in temporary camps after fleeing violence in the north
SIS in Iraq
ISIS grew out of an al-Qaeda-linked organisation in Iraq
- Estimated 10,000 fighters in Iraq and Syria
- Joined in its offensives by other Sunni militant groups, including Saddam-era officers and soldiers, and disaffected Sunni tribal fighters
- Exploits standoff between Iraqi government and the minority Sunni Arab community, which complains that Shia Prime Minister Nouri Maliki is monopolising power
- ISIS led by Abu Bakr al-Baghdadi, an obscure figure regarded as a battlefield commander and tactician