நாட்டில் சிங்களவர்களுக்கு எதிரான மிகப்பெரிய கிளர்ச்சி விரைவில் உருவாக்கப்படவுள்ளது. ஜிஹாத் தீவிரவாதத்திற்கு எதிராக போராட சிங்களவர்கள் தயாராகவுள்ளனர்.
நாட்டில் தமிழ்த் தீவிரவாதிகள் நல்லதொரு பாடத்தினை கற்றுக்கொண்டுள்ளனர். முஸ்லிம்களும் எம்மிடம் பாடம் கற்றுக்கொள்ள தயாராகின்றனர். அவர்களுக்கும் பாடம் கற்பித்துக்கொடுக்க சிங்களவர்கள் தயாராகவே உள்ளனர் என்று ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
ஹர்த்தாலை அனுஷ்டித்து முஸ்லிம்களின் பலத்தைக் காட்டுவதால் சிங்களவர்கள் அஞ்சப்போவதில்லை. முஸ்லிம்கள் சட்டத்தை கையில் எடுத்தால் சிங்களவர்களும் சட்டத்தை கையில் எடுக்க வேண்டும்.
முஸ்லிம்களுக்குஅடங்கிப்போக நாம் கோழைகள் இல்லை என்றும் அவர் கூறினார்.ஜாதிக ஹெல உறுமய கட்சியினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்;
இலங்கையில் சிங்கள மக்களுக்கு எதிராக மிகப் பெரியதொரு முஸ்லிம் சக்தி இயங்கி வருகின்றது. ஜிஹாத் போராட்டம் என்ற பெயரில் இலங்கையின் புனிதத் தன்மையினை அழித்து, இஸ்லாமிய மத வாதத்திற்குள் நாட்டை கட்டுப்படுத்த இவர்கள் முயற்சிக்கின்றனர்.
நாட்டில் சிங்கள மக்கள் பாதிக்கப்பட்டமைக்கும் அவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டமைக்கும் எவரும் குரல் கொடுக்கவில்லை. ஆனால், முஸ்லிம்கள் தாக்கப்பட்டதாக குறிப்பிட்டு ஊடகங்களும் சர்வதேசமும் அலறிக் கொண்டிருக்கின்றது.
அளுத்கமவில் போயா தினத்தன்று பொது பலசேனா அமைப்பினர் கலகத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்துகின்றனர். இது பொது பலசேனா ஏற்பாடு செய்த கூட்டமில்லை. அனைத்து பௌத்த அமைப்புகளும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த பொசன் தின பூசை வழிபாடு.
இதில் பொது பலசேனா அமைப்பு கலந்து கொண்டமைக்காக அவர்களை குற்றம் சுமத்துவது எவ்விதத்திலும் நியாயமில்லை. கடந்த இரண்டு கிழமைக்கு முன்னர் முஸ்லிம்களால் தாக்கப்பட்ட பௌத்த மதகுரு தொடர்பில் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையிலேயே இதில் பலர் கலந்து கொண்டிருந்தனர். எல்லாரும் அளுத்கம சம்பவம் தொடர்பில் பேசுகின்றனர்.
ஆனால், அளுத்கமவில் இருந்து இரண்டு கிலோ மீற்றர் தூரத்தில் தர்க்கா நகரில் மூவாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம் இனவாதிகள் ஆயுதங்களுடன் சிங்களவர்களைத் தாக்கியுள்ளனர்.
வீடுகளையும் கடைகளையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இது எவரது பார்வையிலும் படவில்லை. உண்மையிலேயே பிரச்சினை ஏற்பட்டது தர்க்கா நகரிலேயே. முஸ்லிம் இனவாதிகள் பௌத்தர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதன்போது பொலிஸார் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.
இன்று முஸ்லிம்கள் உரிமை கொண்டாடிக் கொண்டிருக்கும் அவர்களின் உடைமைகள் சேதமாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடும் தர்கா நகர் முன்னர் தனிச் சிங்கள பிரதேசம்.
இங்கு ஒரு முஸ்லிம் கூட அன்று இருக்கவில்லை. இன்று தமது உரிமை கொண்டாடும் அனைத்து கடைகளும் சிங்களவர்களுக்கு சொந்தமானது. இவர்களின் ஆக்கிரமிப்பும் இனத்தீவிரவாத கொள்கையுமே அங்குள்ள சிங்கள மக்களை அழித்து தனி முஸ்லிம் பிரதேசமாக உருவாக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இந்த கலவரத்தின் போது மூன்று ஜிஹாத் தீவிரவாதிகள் பெற்றோல் குண்டுத் தாக்குதலில் கைது செய்யப்பட்டனர். எனினும், யாரும் அதை கண்டுகொள்ளவில்லை.
ஊடகங்கள்கூட இவர்களின் பெயரையோ, உண்மை நிலைமையினையோ குறிப்பிடவில்லை. இன்று ஊடகங்களும் அமைப்புகளும் முஸ்லிம் தீவிரவாதிகளின் வலைக்குள் விழுந்து விட்டது.
சிங்கள மக்கள் பன்சலைகளிலும் வீதியிலும் முஸ்லிம் தீவிரவாதிகளினால் தாக்கப்பட்டபோது கண்டு கொள்ளாத ஊடகங்கள் முஸ்லிம்கள் தாக்கப்பட்டவுடன் பக்கம் பக்கமாக எழுதுகின்றனர்.
முஸ்லிம்கள் செய்த தவறுகளை மறந்து சிங்கள மக்கள் மீது அனைத்து பழியையும் சுமத்திவிட்டு இன்று இவர்கள் அப்பாவிகள் போல் நடிக்கின்றனர். தம்மை நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர். உண்மையிலேயே இந்தப் பிரச்சினை ஏற்பட முஸ்லிம் மதவாதிகளே காரணம்.
தமது பௌத்த மதப் பூஜையில் கலந்து கொண்ட மக்கள் மீது பெற்றோல் குண்டுகளையும் தாக்குதலையும் நடத்தி, அமைதியை சீரழித்து, பிரச்சினையினை ஆரம்பித்தது முஸ்லிம்களே. சிங்களவர்கள் மீது குற்றம் சுமத்தி இவர்கள் தப்பிக்கப் பார்க்கின்றனர். இதற்கு நாம் இடமளிக்கப் போவதில்லை.
முஸ்லிம்களுக்கு நாம் அஞ்சமாட்டோம். இன்று ஹர்த்தாலை அனுஷ்டித்து முஸ்லிம்களின் பலத்தை நிரூபிப்பதன் மூலம் சிங்கள மக்களை அச்சமடையச் செய்யலாம் என நினைக்கின்றனர்.
சிங்கள மக்கள் எதற்கும் அஞ்சப் போவதில்லை. பள்ளிவாசல்களிலும் வீடுகளிலும் முஸ்லிம் மதவாதத்தினையும் தீவிரவாதத்தினையும் பரப்பி மக்களை சிங்களவர்களுக்கு எதிராக செயற்பட வைக்கவே ஜிஹாத் வாதிகள் முயற்சிக்கின்றனர்.
இதற்கு ஒரு போதும் நாம் அஞ்சப்போவதில்லை. இந்த நாட்டில் தமிழ் தீவிரவாதிகள் நல்லதொரு பாடத்தினை கற்றுக் கொண்டுள்ளனர். முஸ்லிம்களும் எம்மிடம் பாடம் கற்றுக்கொள்ள தயாராகினால் அவர்களுக்கும் பாடம் கற்பித்துக் கொடுக்க சிங்களவர்கள் தயாராகவே உள்ளனர்.
முஸ்லிம்களின் பலத்தை எம்மிடம் காட்ட வரவேண்டாம். அதேபோல் அப்பாவி முஸ்லிம்களையும் இவர்களது தீவிரவாதத்தில் பரப்ப முயற்சிக்கின்றனர். இதற்கும் இடமளிக்கமாட்டோம்.
அன்று தீவிரவாதிகளிடம் இருந்து முஸ்லிம்களை காப்பாற்றியதற்கு இன்று எம்மையே அழிக்க திட்டமிட்டுள்ளனர். எனவே, சிங்கள மக்கள் எச்சரிக்கையாகவும் தயாராகவும் இருக்க வேண்டும்.
இலங்கைக்குள் அதிகளவிலான முஸ்லிம் இனவாத தீவிரவாதிகள் உருவாகிவிட்டார்கள். இன்று முகப்புத்தகத்தில் வெளிப்படையாகவே சிங்களவர்களுக்கு எதிரான கருத்துகளை பரப்பி தமது தீவிரவாத குழுக்களின் எண்ணிக்கையினை பரப்புகின்றனர்.
இன்னும் 15 வருடத்தில் சிங்கள இனம் அழிக்கப்படும், தலைகளை கொய்து எறிவோம் என முஸ்லிம் இனவாதிகள் எழுதுகின்றனர். இது ஜிஹாத் தீவிரவாதம் இல்லையா? சிங்கள நாட்டில் சிங்களவர்களை அழிக்க நினைப்பது முஸ்லிம் தீவிரவாதம் இல்லையா?
இதை ஏன் எந்தவொரு அமைச்சரும் கண்டு கொள்ளவில்லை. எதிர்க்கட்சி முஸ்லிம் தீவிரவாதிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கின்றனர். இன்று ரணில் விக்கிரமசிங்க தமிழ், முஸ்லிம் வாக்குகளை நம்பி அவர்களின் தீவிரவாதத்தை பாதுகாத்து சர்வதேச அளவில் பேசுகின்றார்.
ஆனால், சிங்கள வாக்குகள் இன்றி எதிர்க்கட்சி எதையும் செய்ய முடியாது. அதேபோல் இன்று நாட்டில் பிரச்சினை உள்ளது. அது நாட்டில் முஸ்லிம் தீவிரவாதிகள் அமைதியை கெடுக்கின்றமை. முஸ்லிம்களின் கொள்கையும் உடையும் 1991 இல்தான் இங்கு பரப்பப்பட்டது. இன்று முஸ்லிம்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டு தீவிரவாத கொள்கை பரப்பப்பட்டுள்ளது.
அரசாங்கம் சட்டத்தை இயற்றியுள்ளது. அனைத்து மக்களுக்காகவுமே. சிங்கள, தமிழ் மக்களுக்கு ஒரு சட்டமும் முஸ்லிம்களுக்கு தனிச் சட்டமும் செயற்பட முடியாது. காத்தான்குடி, தர்காநகர், பேருவளை, மாவனெல்லயில் முஸ்லிம்கள் தலைக்கவசம் அணிந்து மோட்டார் வாகனம் செலுத்துவதில்லை.
முஸ்லிம்கள் ஷரிஆ சட்டப்படியே செயற்படுகின்றனர். தமது மதத்தையும் தீவிரவாத கொள்கையையும் பரப்ப முஸ்லிம்கள் சட்டத்தை கையில் எடுத்தால் எமது நாட்டையும் பௌத்த சிங்கள மக்களையும் பாதுகாக்க சிங்கள மக்களும் சட்டத்தை கையில் எடுக்க வேண்டும். இன்று நாட்டில் தலிபான் நங்கூரம் போடப்பட்டு வருகின்றது. சிங்கள, தமிழ் மக்களை இலக்கு வைத்து தலிபான் தீவிரவாதம் செயற்படுகின்றது.
ஹக்கீம் வெட்கம் இல்லாதவர். இதற்கு முஸ்லிம் அமைப்புகளும் அமைச்சர்களும் துணை போயுள்ளனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு தீவிரவாதக் கட்சி. இன்று ஹக்கீம் அரசாங்கத்தில் இருப்பது வெட்கமாக உள்ளதெனக் கூறுகின்றார். ஆனால், அவரை யாரும் அரசாங்கத்தில் இருக்க வேண்டும் என வலியுறுத்தவில்லை.
உண்மையிலேயே ஹக்கீம் வெட்கம் இல்லாதவர். அன்று முஸ்லிம்களை விடுதலைப் புலிகள் விரட்டியபோது பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்தது வெட்கப்படும் செயல் இல்லையா? இன்று அமைச்சுப் பதவியினை வகித்துக்கொண்டு சர்வதேச விசாரணையினைக் கூறுவது வெட்கமாக இல்லையா? அரசாங்கத்தில் இருந்து அவராக வெளியேறினால் அவருக்கே சிறந்தது.
இல்லையேல் நாம் வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்படலாம் எனவும் அவர் தெரிவித்தார்.