ஈக்வடார் நாட்டில் உள்ள Portoviejo என்ற நகரில் கடந்த 40 வருடங்களாக கேப்ஸ் ஒன்றின் ஓட்டுனராக பணிபுரிந்து வந்த 62 வயது நபர் ஒருவர் சமீபத்தில் தான் அழைத்து சென்ற பயணி ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரிடம் இருந்த சொற்ப பணத்திற்காக கொலைகாரன் இந்த கொலையை செய்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கொலை அந்த காரில் மறைவாக வைக்கப்பட்டிருந்த கேமிராமில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில் பதிந்துள்ள கொலைகாரனை போலீஸார் தேடி வருகின்றனர்.
கடந்த 2ஆம் தேதி Portoviejo நகரில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள ஒரு இடத்திற்கு செல்லவேண்டும் என்று 62 வயது கார் ஒட்டுவர் ஒருவரை மர்ம மனிதன் ஒருவன் கேட்டுள்ளான். பயண தூரத்திற்கான கட்டணத்தை பேசிமுடித்துவிட்டு காரில் அந்த பயணியை அழைத்து சென்றுள்ளார் டிரைவர்.
அந்த பயணி குறிப்பிட்ட அந்த இடம் வந்தவுடன் திடீரென துப்பாக்கியை எடுத்து டிரைவரின் பின்னந்தலையில் சுட்டுக்கொன்றுவிட்டு டிரைவரிடம் இருந்த சொற்ப பணத்தை திருடிக்கொண்டு அந்த மர்ம மனிதன் சென்றுவிட்டான்.
இந்த காட்சி அங்கிருந்த வீடியோவினால் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸார் அந்த வீடியோவை கைப்பற்றி புலன்விசாரணை செய்து வருகின்றனர்.
கடந்த 20 நாட்களுக்கு மேல் ஆகியும் கொலைகாரன் பிடிபடாததால், தற்போது அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டு கொலைகாரனை பிடிக்க உதவுமாறு அந்த பகுதி பொதுமக்களிடம் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடந்த 40 ஆண்டுகளால் ஓட்டுனர் பணி செய்துவரும் கொலை செய்யப்பட்ட டிரைவர் மிகுந்த அமைதியானவர் என்றும் யாருடனும் எந்த வம்புக்கும் செல்லாதவர் என்றும் அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.