நைஜீரியாவில் உள்ள பள்ளியில் இருந்து போகோஹராம் தீவிரவாதிகள் 200க்கும் மேற்பட்ட மாணவிகளை கடந்த மாதம் கடத்தி சென்றனர். 15 முதல் 18 வயதுள்ள கடத்தப்பட்ட மாணவிகளை தீவிரவாதிகள் துணி துவைக்கவும், சமையல் செய்யவும் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமா முதல் பாகிஸ்தானின் மலாலா வரை பலர் கடத்தப்பட்ட மாணவிகளை விடுவிக்குமாறு தீவிரவாதிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் நைஜீரிய ராணுவத்துடன் இணைந்து உலக நாடுகளின் ராணுவமும் மாணவிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் நைஜீரியாவின் புகழ்பெற்ற 23 வயது பாப் பாடகி Adokiye, சமூக வலைத்தளத்தில் நேற்று தீவிரவாதிகளுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார். கடத்தப்பட்ட மாணவிகளையும் விடுவித்தால் தனது கன்னித்தன்மையை போகோஹராம் தீவிரவாதிகளுக்காக இழக்கத்தயார் என்று அறிவித்துள்ளார்.
தன்னை தினமும் 5 முதல் 10 தீவிரவாதிகள் எத்தனை நாள் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும், அதற்கு பதிலாக மாணவிகளையும் விடுவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சமூக வலைத்தளத்தில் Adokiye தெரிவித்த கருத்தை பலர் பாராட்டியுள்ளனர். ஒருசிலர் பப்ளிசிட்டிக்காக Adokiye இவ்வாறு தெரிவித்துள்ளதாக கமெண்ட் போட்டுள்ளனர்.
இந்நிலையில் உலக நாடுகளின் மீட்புப்படைகள் மாணவிகள் இருக்குமிடத்தை நெருங்கிவிட்டதாகவும் மிக விரைவில் அவர்கள் மீட்கப்படுவார்கள் என்று நைஜீரிய அரசு தெரிவித்துள்ளது.