ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Saturday, September 30
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»கட்டுரைகள்»14 இலச்சம் ரூபா கொள்ளையிட்ட பொலிஸ் கான்ஸ்டபில் மாட்டியது எப்படி??
    கட்டுரைகள்

    14 இலச்சம் ரூபா கொள்ளையிட்ட பொலிஸ் கான்ஸ்டபில் மாட்டியது எப்படி??

    AdminBy AdminJune 28, 2014Updated:July 5, 2014No Comments7 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    அது கடந்த 23 ஆம் திகதி திங்கட்கிழமை. வெள்­ள­வத்தை பொலிஸ் நிலையம் பர­ப­ரப்­பாக இயங்­கிக்­கொண்­டி­ருந்த நேர­மது. வெள்­ள­வத்தை லில்லி அவ­னி­யூவில் நிர்­மாண நிலையம் ஒன்றை நடத்தி வரும் வர்த்­தகர் ஒருவர் தயக்­கத்­துடன் பொலிஸ் நிலை­யத்­துக்குள் வரு­கின்றார்.

    முறைப்­பா­டொன்றை அளிக்க வேண்டும் என தெரி­வித்து வெள்­ள­வத்தை பொலிஸ் நிலை­யத்தின் குற்­ற­வியல் பிரி­வுக்கு நேர­டி­யாக செல்­கின்றார்.

    அங்கு சென்ற அந்த வர்த்­தகர் குற்­ற­வியல் பிரி­வுக்கு பொறுப்­பான பொறுப்­பதிகாரி பொலிஸ் பரி­சோ­தகர் நாக­வத்­த­விடம் முறைப்­பாட்­டினை தெரி­விக்கின்றார்.

    ‘ சேர்…வங்­கிக்கு வைப்­பி­லிட எடுத்துச் செல்­லப்­பட்ட 13 இலட்­சத்து 65 ஆயிரம் ரூபா பணம் அடை­யாளம் தெரி­யா­தோரால் கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ளது’ என முறைப்­பாட்டை ஆரம்­பிக்க பொலிஸார் குறுக்குக் கேள்­வி­களை தொடுத்து முறைப்­பாட்டை நெறிப்­ப­டுத்தி பதிவு செய்­து­கொண்­டுள்­ளனர்.

    அதன் படி இந்த கொள்ளை முச்­சக்­கர வண்­டியில் வந்த சீ.ஐ.டி.என தங்­களை அறி­முகம் செய்­து­கொண்ட இரு­வரால், மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தையும் அது கடந்த 21 ஆம் திகதி சனிக்­கி­ழமை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­மையும் பொலிஸ் முறைப்­பாட்டுப் புத்­த­கத்தில் பதி­வா­னது.

    முறைப்­பா­ட­ளிக்­கப்­பட்ட அந்த நேரத்தில் கொழும்பு தெற்­குக்குப் பொறுப்­பான உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் நிஸாந்த டீ சொய்சா வெள்­ள­வத்தை பொலிஸ் நிலை­யத்தில் மேற்­பார்வை நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருந்­துள்ளார்.

    பொது­வாக முறைப்­பா­டொன்று பதி­வா­னதும் அது தொடர்பில் பிராந்­தி­யத்­துக்குப் பொறுப்­பான உதவி பொலிஸ் அத்­தி­யட்­சரின் கவ­னத்­துக்கு கொண்டுவரப்­பட­வேண்டும் என்ற ஒரு நடை­முறை பொலிஸ் திணைக்­க­ளத்தில் பின்­பற்­றப்­ப­டு­கின்­றது.

    அதன் படி இந்த விட­ய­மா­னது உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் நிஸாந்த டீ சொய்சா, வெள்­ள­வத்தை பொலிஸ் நிலை­யத்­தி­லேயே இருந்­ததால் உட­ன­டி­யாக அவரின் கவ­னத்­துக்கு சென்­றது.

    இதனை அடுத்து வெள்­ள­வத்தை பொலிஸ் நிலை­யத்தின் குற்­ற­வியல் பிரி­வுக்கு பொறுப்­பான நாக­வத்­தவை அழைத்த உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் நிஸாந்த டீ சொய்சா, சம்­பவம் தொடர்பில் நட­வ­டிக்­கை­யினை உடன் ஆரம்­பிக்­கு­மாறு கூறி ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார்.

    இதனை அடுத்து குற்­ற­வியல் பிரிவின் பொறுப்­ப­தி­காரி நாக­வத்த தலை­மை­யி­லான பொலிஸ் குழு சம்­பவம் இடம்­பெற்­ற­தாக முறைப்­பாட்டில் தெரிவிக்கப்­பட்ட  வெள்­ள­வத்தை, லில்லி அவ­னியூ பிர­தே­சத்­துக்கு சென்­றது. அங்கு சென்று ஆரம்­பக்­கட்ட விசா­ர­ணை­களை மேற்­கொண்­டது.

    இந் நிலையில் வர்த்­தகர் தனது முறைப்­பாட்டில் தனது  உத­வி­யா­ளரும்  உற­வி­ன­ரு­மான நபர் முச்­சக்­கர வண்­டி­யி­லேயே கடத்­தப்­பட்­ட­தா­கவும் அவர்களின் கைகளில் துப்­பாக்கி இருந்­த­தா­கவும் கடத்­தப்­பட்­டதும்   கைக­ளுக்கு விலங்­கி­டப்­பட்­டுள்­ள­தா­கவும் குறிப்­பிட்­டி­ருந்த நிலையில்  சீ.ஐ.டி.என தங்களை  காட்டிக்­கொண்­ட­தா­கவும்  தெரி­வித்­ததால் அந்த விட­யங்­களை மைய­மாக வைத்தே ஸ்தல விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தி­ருந்­தனர்.

    இந்தவேளையில் பொலி­ஸா­ருக்கு அப்­போது முக்­கி­ய­மான தகவல் ஒன்று கிடைத்­துள்­ளது. லில்லீ அவ­னியூ பிர­தே­சத்தில் இருந்த ஒரு முச்­சக்­கர வண்டிச் சாரதி அந்த துரும்­பினை பொலி­ஸா­ருக்கு வழங்­கி­யி­ருந்தார்.

    ‘ சேர்…தனுக ரால­ஹா­மியும் சஞ்­சீவ ரால­ஹா­மியும் நீங்கள் குறிப்­பிடும் தினம் நண்­பகல் 12.30 அளவில் கஞ்சா சுற்­றி­வ­ளைப்­பொன்றை மேற்­கொள்­ள­வென எனது முச்­சக்­கர வண்­டியை எடுத்துச் சென்­றனர். மாலையில் கொண்­டு­வந்து தந்­தனர். தரும் போது எனக்கு 5000 ரூபா பணமும் தந்­தனர்.’ என அந்த முச்­சக்­கர வண்டி சாரதி குறிப்­பிட்டார்.

    இந்த தகவல் கிடைக்கும் வரை குற்­ற­வாளி தொடர்பில் அனு­மானம் ஒன்­றுக்கு வந்­தி­ராத வெள்­ள­வத்தை பொலிஸார் அந்த தக­வலை அடுத்து சந்­தேக நபர்கள் அநேக­மாக பொலி­ஸா­ராக தான் இருக்க வேண்டும் என்ற அனு­மா­னத்­துக்கு வந்­தனர்.

    வெள்­ள­வத்தை பொலிஸ் நிலை­யத்­துக்கு உட்­பட்டு சேவை மேற்­கொண்­டி­ருந்த பொலிஸ் கான்ஸ்­ட­பிள்­க­ளான தனிக (84350), சஞ்­சீவ நிலந்த (3228) ஆகியோர் தொடர்பில் குற்­ற­வியல் பிரிவின் பொறுப்­ப­தி­காரி நாக­வத்த விசா­ரிக்­க­லானார்.

    எனினும் அப்­போது அவ்­விரு கான்ஸ்­ட­பிள்­களும் விடு­மு­றையில் இருந்­த­மையால் பொலி­ஸாரின் சந்­தேகம் மேலும் அதி­க­ரித்­தது. கடத்தல் மற்றும் கொள்ளை இடம்­பெற்ற நேரம், முறைப்­பாட்­டாளர்  குறிப்­பிட்ட கடத்தல் காரரின் அங்க அடை­யாளம், முச்­சக்­க­ர­வண்­டியின் நிறம், முச்­சக்­க­ர­வண்டி சாரதியின் உறு­திப்­ப­டுத்தல் உள்­ளிட்ட விட­யங்­களை கருத்தில் கொண்ட பொலிஸார் சந்­தேக நபர்கள் இந்த கான்ஸ்­ட­பிள்­க­ளா­கவே இருக்க வேண்டும் என்ற முடி­வுக்கு வந்­தனர்.

    இது தொடர்பில் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் நிஸாந்த டீ சொய்­சா­வுக்கு தெரி­யப்­ப­டுத்­தப்­பட்ட நிலையில் சந்­தேக நபர்கள் இரு­வ­ரையும் கைது செய்வதற்­கான ஆலோ­சனை வழங்­கப்­பட்­டது.

    இந் நிலையில் தம்­முடன் இது­வரை ஒன்­றாக கட­மை­யாற்­றிய குறித்த இரு மோசடி கான்ஸ்­ட­பிள்­க­ளையும் வெள்­ள­வத்தை பொலி­ஸாரே கைது செய்­தனர்.

    இதனை அடுத்து அவ்­வி­ரு­வ­ரையும் உடன் அமு­லுக்கு வரும் வகையில் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் நிஸாந்த சில்வா பணி இடை நிறுத்தம் செய்து விசா­ர­ணை­களை மேறகொண்டார். .இதன் போது தான் நடந்­தது என்ன என்­பது வெளிச்­சத்­துக்கு வந்­தது.

    யோகா, தெஹி­வளை, வெள்­ள­வத்தை பகு­தியை சேர்ந்த ஒரு வர்த்­தகர். இவ­ருக்கும் கான்ஸ்­ட­பிள்­க­ளான தனுக,சஞ்­சீவ ஆகி­யோ­ருக்கு இடையில் நல்ல பிணைப்பு இருந்து வந்­துள்­ளது.

    ‘ நீங்கள் வெள்­ள­வத்தை தானே… அந்த பகு­தியில் உண்­டியல் முறை மூலம் சட்ட விரோ­த­மாக பண பறி­மாற்று வேலையில் ஈடு­படும் ஒருவர் இருக்கின்றார். அவர் பணத்தை கொண்டு செல்லும் போது நான் உங்­க­ளுக்கு கூறு­கின்றேன்.

    நீங்கள் அதனை கைப்­பற்­றுங்கள். நாங்கள் அதனை பிரித்­தெ­டுக்­கலாம்’ என யோகா அவ்­விரு கான்ஸ்­ட­பிள்­க­ளுக்கும் ஆலோ­ச­னை­யினை முன்­வைக்க அந்த திட்­டமே செய­லுரு பெற்­றுள்­ளது என்­பதை கான்ஸ்­ட­பிள்­களை விசா­ரணை செய்த பொலிஸார் தெரிந்­து­கொண்­டனர்.

    இதனை அடுத்து உடன் செயற்­பட்ட பொலிஸார்   யோகாவையும் கைது செய்து மூவ­ரையும் தடுத்து வைத்து விசா­ரணை செய்த போது சம்­பவம் தொடர்பி­லான அனைத்து விட­யங்­க­ளையும் வெளிப்­ப­டுத்­திக்­கொண்­டனர்.

    கடந்த 21 ஆம் திகதி குறித்த நிர்­மாண கடையின் உரி­மை­யாளர், தனது உற­வி­னரும் உத­வி­யா­ள­ரு­மான  யாழ்ப்­பா­ணத்தை சேர்ந்த அருள் ராஜிடன் 13 இலட்­சத்து 65 ஆயிரம் ரூபா பணத்தைக் கொடுத்­தி­ருந்தார். பணத்தை கொடுத்­து­விட்டு அவர் பிறி­தொரு வேலை தொடர்பில் திரு­கோ­ண­ம­லைக்கு சென்றுள்ளார்.

    இந் நிலை­யி­லேயே அன்­றைய தினம் நண்­பகல் 12.30 மணி­ய­ளவில் ஒரு பையில் பணத்தை போட்­டுக்­கொண்டு தனியார் வங்கி ஒன்றை நோக்கி அருள் ராஜ் சென்­று­கொண்­டி­ருந்த போது முச்­சக்­கர வண்­டியில் வந்த இருவர் அவரை மறித்து தாம் சீ.ஐ.டி.யினர் எனக் கூறி விசா­ர­ணைக்­காக வரு­மாறு பல­வந்­த­மாக ஆட்­டோவில் ஏற்­றி­யுள்­ளனர்.

    விசா­ர­ணை­களை மேற்­கொள்ளும் உயர் பொலிஸ் அதி­காரி ஒரு­வரின் தகவல் பிர­காரம் இந்த கடத்­தலின் போது யோகாவும் லில்லி அவ­னி­யூ­விற்கு வந்­துள்ளார். அவர் அடை­யாளம் காட்­டிய நப­ரையே பொலிஸ் கான்ஸ்­ட­பிள்கள் இரு­வரும் கடத்­தி­யுள்­ளனர்.

    இந் நிலையில் கடத்­தப்­பட்ட அருள்ராஜை, ஆட்­டோ­வுக்குள் ஏற்­றி­யதும் ஒரு பொலிஸ் கான்ஸ்­டபிள் அவரின் கைக­ளுக்கு விலங்­கிட்­டுள்ளார். அத்­துடன் அவரை அப்­ப­டியே மரீன் டிரைவ் பகு­திக்கு அழைத்துச் சென்று ஆட்­டோவில் வைத்தே விசா­ரணை செய்­துள்­ளனர்.

    ‘ நீங்கள் உண்­டியல் மூலம் பண­மாற்றும் சட்­ட­வி­ரோத நட­வ­டிக்கை ஒன்றில் ஈடு­ப­டு­கின்­றீர்கள் தானே’ என அதட்டிக் கேட்ட இரு பொலிஸ் கான்ஸ்­ட­பிள்­க­ளி­டமும் இப்­ப­ணத்­தொகை தனது முத­லா­ளி­யுடை­யது என்­பதை அப்­பா­வித்­த­ன­மாக அருள் ராஜ் கூறி­யுள்ளார்.

    இதனை அடுத்து திரு­கோ­ண­ம­லையில் இருந்த முத­லா­ளிக்கு அருள் ராஜ் மூலம் கான்ஸ்­ட­பிள்கள் தொலை­பேசி அழைப்பை ஏற்­ப­டுத்த வைத்­துள்­ளனர்.

    அழைப்பு இணைக்­கப்­பட்­டதும் தொலை­பே­சியில் மறு முனையில் பேசு­ப­வரின் குரல் எல்­லோ­ருக்கும் கேட்கும் வண்ணம் ‘லவூட்ச் பீக்­க­ரையும் ‘ செயற்­ப­டுத்­தியே உரை­யா­டலை தொட­ரு­மாறு பணித்­துள்­ளனர்.

    இந் நிலையில் அருள் ராஜ் தமிழில் நடந்­த­வற்றை கூற முத­லாளியோ முச்­சக்­கர வண்­டியின் இலக்­கத்தை பார்த்துக் கொள்­ளு­மாறு அருள் ராஜிடம் கூறியுள்ளார். இந்த விடயம் பொலிஸ் கான்ஸ்­ட­பிள்­க­ளுக்கு புரிந்­துள்­ளது.

    உட­ன­டி­யாக கான்ஸ்­ட­பிள்கள் தாங்கள் சீ.ஐ.டி.எனவும் உண்­டியல் முறை மூலம் பண கொடுக்கல் வாங்கல் தொடர்பில் அருள் ராஜை கைது செய்­வ­தா­கவும் தெரி­வித்­துள்­ள­துடன் முத­லா­ளியையும் உடன் கொழும்­புக்கு வந்து சீ.ஐ.டி.தலைமை­ய­கத்­துக்கு வரு­மாறு கூறவே முத­லா­ளியும் சற்று பயந்­துள்ளார்.

    ஆரம்­பத்தில் அது உண்­டியல் பணம் அல்­ல­வென மறுத்­துள்ள முத­லாளி பின்னர் சீ.ஐ.டி.யினர் என தம்மை அறி­மு­கப்­ப­டுத்­திய இரு­வரும் அது தொடர்பில் நன்கு அறிந்­தி­ருப்­பதைக் கண்டு ‘ சேர்…அதிலே 10 இலட்சம் ரூபா இருக்கு…. நீங்கள் 5 இலட்சம் எடுத்­துக்­கொண்டு எனக்கு 5 இலட்­சத்தை விட்­டு­விட்டு எனது உத­வி­யா­ளரை அனுப்­பி­விடுங்கள்’ என பேரம் பேசி­யுள்ளர்.இதனை அடுத்து தொலை­பேசி அழைப்­பா­னது துண்­டிக்­கப்­பட்­டுள்­ளது.

    இதன் போது முச்­சக்­க­ர­வண்­டியின் பின் ஆச­னத்தில் இருந்த பொலிஸ் கான்ஸ்­டபிள் கைத்­துப்­பாக்கி ஒன்­றையும் காட்டி அருள்ராஜை மிரட்டி பணப் பையை தனது கைக­ளுக்கு எடுத்­துள்­ள­துடன் அதில் உள்ள அனைத்து பணத்­தொ­கை­யி­னையும் எடுத்­துக்­கொண்­டுள்ளார்.

    இதனை அடுத்து புறக்­கோட்­டையை நோக்கி முச்­சக்­க­ர­வண்­டியை செலுத்­தி­யுள்ள இவ்­விரு பொலிஸ் கான்ஸ்­ட­பிள்­களும் பம்­ப­லப்­பிட்­டி பிர­தே­சத்தில் உள்ள எரி­பொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் எரி­பொருள் நிரப்­பி­யுள்­ளனர்.

    இதன் போது இவ்­விரு கான்ஸ்­ட­பிள்­களும் அந்த முச்­சக்­கர வண்­டியை எரி­பொருள் நிரப்பு நிலை­யத்­துக்கு கொண்டு செல்­வது, அதில் அருள் ராஜ் உள்ளே இருக்க எரி­பொருள் நிரப்­ப­ப்ப­டு­வது என அனைத்துக் காட்­சி­களும் எரி­பொருள் நிரப்பு நிலைய சீ.சீ.ரீ.வீ.கம­ராவில் துல்­லி­ய­மாக பதி­வா­கி­யுள்­ளது.

    எவ்­வா­றா­யினும் புறக்­கோட்டை பஸ் நிலை­யத்­துக்கு அருள் ராஜை அழைத்து வந்­துள்ள இவ்­விரு கான்ஸ்­ட­பிள்­களும் அவரை அங்கு இறக்­கி­விட்டு ‘ இனி மேல் வெள்­ள­வத்தை பக்கம் உன்னை காணவே கூடாது’ என மிரட்டி யாழ் .போகு­மாறு 2000 ரூபா பணத்தை மட்டும் கொடுத்­து­விட்டு மீண்டும் வெள்­ள­வத்தை திரும்­பி­யுள்­ளனர்.

    வெள்ளவத்­தைக்கு வந்த இவ்­விரு கான்ஸ்­ட­பிள்­களும் முச்­சக்­கர வண்டி சொந்­தக்­கா­ர­ரிடம் 5000 ரூபாவை கொடுத்து வண்­டி­யையும் கைய­ளித்­துள்­ளனர். பொலி­ஸாரின் தக­வலின் படி இவ்­விரு கான்ஸ்­ட­பிள்­களில் ஒருவர் ரம்­புக்­க­ணையை சேர்ந்­தவர் எனவும் மற்றை­யவர் காலி, அஹங்­க­மவை சேர்ந்­தவர் எனவும் அறிய முடிந்­தது.

    அத்­துடன் ரம்­புக்­க­னையை சேர்ந்த கான்ஸ்­டபிள் வெள்­ள­வத்தை பொலிஸ் நிலை­யத்தில் நீண்­ட­கா­ல­மாக பணி புரி­பவர் எனவும் அறிய முடிந்­தது.

    இந் நிலையில் கொள்­ளையின் பின்னர் ரம்­புக்­க­ணையை சேர்ந்த கான்ஸ்­டபிள் 6 நாள் விடு­மு­றையில் சென்­றுள்­ள­துடன் மற்­றை­யவர் தனது அம்­மா­வுக்கு சுக­மில்லை என கூறி விடு­முறை எடுத்துச் சென்­றுள்ளார்.

    இவ்­வா­றா­ன­தொரு நிலையில் யாழ். போகு­மாறு பணிக்­கப்­பட்ட அருள் ராஜ் அங்கு செல்­ல­வில்லை. மாறாக தனது மாமா­வான முத­லா­ளிக்கு மீண்டும் அழைப்பை ஏற்­ப­டுத்தி நடந்­த­வற்றை குறிப்­பிட்­டுள்ளார். இந் நிலையில் தான் திரு­கோண மலை­யி­லி­ருந்து திரும்­பிய முத­லாளி வெள்­ள­வத்தை பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ளார்.

    பணத்தை கொள்­ளை­யிட்­டுள்ள இவ்­விரு கான்ஸ்­ட­பிள்­களும் பணப்­பையை குப்பை கூலம் ஒன்றில் எறிந்­துள்­ள­தாக விசா­ர­ணை­களை மேற்­கொண்ட உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் குறிப்­பிட்டார்.

    பணப்­பையை எறிந்­து­விட்டு வெள்­ள­வத்­தையில் வர்த்­தகர் யோகா மற்றும் கான்ஸ்­ட­பிள்கள் இரு­வரும் ஒன்று கூடி பணத்தை பிரித்­தெ­டுத்­துள்­ளனர். யோகா­வுக்கு 5 இலட்சம் ரூபாவை கொடுத்­துள்ள கான்ஸ்­ட­பிள்கள் ஏனை­ய­வற்றை தாம் பிரித்து எடுத்­துக்­கொண்­டுள்­ளனர்.

    இந் நிலை­யி­லேயே கொள்­ளை­யி­டப்­பட்ட பணத்­தொ­கையில் பெரும்­பா­லான பகுதி மீட்­கப்­பட்­டுள்­ளன. அதா­வது கான்ஸ்­ட­பிள்­களின் உத்­தி­யோக பூர்வ விடு­தியில் கான்ஸ்­டபிள் ஒரு­வ­ருக்கு சொந்­த­மான அலுமாரியிலி ருந்தும் 3 இலட்­சத்து 95 ஆயிரம் ரூபாவும் மற்­றைய கான்ஸ்­ட­பிளின் அலுமாரியிலிருந்தும் 3 இலட்சம் ரூபாவும் மீட்­கப்­பட்­டுள்­ளன.

    அத்­துடன் வர்த்­த­க­ரான யோகா­வி­ட­மி­ருந்து 5 இலட்சம் ரூபா மீட்­கப்­பட்­டுள்­ளது. இத­னை­விட முச்­சக்­கர வண்­டியும் கைப்­பற்­றப்­பட்­டுள்­ள­துடன் அவ­ருக்கு வழங்­கப்­பட்­ட­தாக கூறப்­படும் 5 ஆயிரம் ரூபாவும் பொலி­ஸாரால் மீட்­கப்­பட்­டுள்­ளது.

    கைது செய்­யப்­பட்­டுள்ள வர்த்­தகர் யோகா கொள்­ளை­யி­டப்­பட்ட பணத்­துக்கு சொந்­தக்­கா­ர­ரான முத­லா­ளியின் முன்­னைய நண்­பர்­களில் ஒருவர் என தெரி­ய­வந்­துள்­ளது. அத்­துடன் பணத்தை பறி­கொ­டுத்த வர்த்­த­கரும் உண்­டியல் முறை நிதி பரிமாற்றல் நட­வ­டிக்­கை­யுடன் தொடர்­பு­டை­யவர் என்­பது விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளதால் அது தொடர்­பிலும் வேறு ஒரு விசா­ர­ணையை பொலிஸார் முன்­னெ­டுத்­துள்ளனர்.

    முறை­பாடு கிடைக்கப் பெற்று 24 மணி நேரத்­துக்குள் தமது பொலிஸ் நிலை­யத்­தி­லேயே கட­மை­யாற்றி மோசடி நட­வ­டிக்­கையில் ஈடு­பட்ட இவ்­விரு கான்ஸ்­ட­பிள்­க­ளையும் வெள்­ள­வத்தை பொலி­ஸாரே கைது செய்­த­மை­யா­னது விஷே­ட­மா­ன­தாகும்.

    இந்த சம்­ப­வத்தால் எந்­த­வொரு வர்த்­த­கரும் அச்­சத்­துக்கு உள்­ளாக வேண்­டி­ய­தில்லை என குறிப்­பிட்ட பிர­தே­சத்­துக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர், கப்பம் உள்­ளிட்ட எந்­த­வொரு மோச­டி­யு­ட­னும் தொடர்­பு­டைய பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் எவ­ரேனும் இருப்பின் அது தொடர்பில் தகவல் தரு­மாறும் கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனவும் குறிப்­பிட்டார்.

    அத்­துடன் இவ்­விரு பொலிஸ் கான்ஸ்­ட­பிள்­க­ளி­னதும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு பொறுப்புக் கூற­வேண்­டிய அவர்­களை வழி நடத்தும் அல்­லது நெறிப்­ப­டுத்தும், அவர்­களை கண்­கா­ணிக்க வேண்­டிய பொறுப்­பு­வாய்ந்த உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு எதி­ரா­கவும் ஒழுக்­காற்று நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தாக அறி­ய­மு­டி­கின்­றது.

    கைது செய்­யப்­பட்­டுள்ள சந்­தேக நபர்கள் மூவரும் நேற்று முன்தினம் புதுக்­கடை நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட நிலையில் அவர்கள் எதிர்­வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    இந் நிலையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸ் குழு சந்தேக நபர்களான கான்ஸ்ட பிள்கள் இதற்கு முன்னர்

    இதுபோன்ற மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனரா என தேடி வருகின்றது. இதற்காக சந்தேக நபர்களின் தொலைபேசி விபரப்பட்டியல், வங்கிக் கணக்குகளை சோதனையிட நடவடிக்கைகள்முன்னெடுக் கப் பட்டுள்ளன.

    சிவில் உடையிலேயே இவ்விரு கான்ஸ்டபிள்களும்இந்த கொள்ளையை மேற்கொண்டுள்ளதுடன்அதற்குபயன்படுத்தப்பட்ட கைத் துப்பாக்கியும் கை விலங்கும் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திலிருந்து களவாடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

    24 மணி நேரத்துக்குள் குற்றவாளிகளை கைது செய்த இந்த நடவடிக்கையானது, மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனா நாயக்க, கொழும்பு மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மத்துரட்ட, கொழும்பு தெற்குக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரேமலால் ரணகல ஆகியோரின் கண்காணிப்பில் ….

    கொழும்பு தெற்குக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சர் நிஸாந்த டீ சொய்சாவின் விஷேட ஆலோசனைக்கு அமைய வெள்ள வத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பெட்ரிக் எப்.யூ.வுட்லரின் வழிநடத்தலின் கீழ் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவுக்கு பொறுப்பான அதிகாரி பொலிஸ் பரிசோதகர் நாகவத்த, பொலிஸ் பரிசோதகர் கும்புரேகம உள்ளிட்ட பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

    –எம்.எப்.எம்.பஸீர்–

    Post Views: 56

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    இன்னுமொரு கோட்டாபாயவாக மாற விரும்பும் பீல்ட் மார்ஷ் சரத் பொன்சேக்கா…! நல்லாட்சி காலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பதவி கிடைக்காமைக்கு அதுவே காரணம்

    September 28, 2023

    அரசியலில் உதிர்ந்து செல்லும் ராஜபக்ஷர்கள்

    September 25, 2023

    புல­னாய்வு நெருக்­கடி

    September 24, 2023

    Leave A Reply Cancel Reply

    June 2014
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30  
    « May   Jul »
    Advertisement
    Latest News

    பிரபுதேவா நடிக்கும் ‘முசாசி’ படக்குழுவினரை சந்தித்த இலங்கை பிரதமர்

    September 30, 2023

    பாகிஸ்தானில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் அடிதடி!!-வீடியோ

    September 30, 2023

    ரூ.1.25 கோடிக்கு விற்பனையான விநாயகர் லட்டு – ஹைதராபாத்தில் வினோதம்!

    September 30, 2023

    நான் நம்பிக்கை இழந்துவிட்டேன் – உலகம் என்னை கைவிட்டுவிட்டது – அரகலய ஆர்ப்பாட்ட வீடியோவை வெளியிட்ட குற்றசாட்டுக்குள்ளான – 13 மாதங்கள் இலங்கையில் மறைந்துவாழும் பிரிட்டிஸ் பெண்

    September 30, 2023

    காணாமல்போன பெண்ணின் சடலம் தலை, கை, கால்கள் அற்ற நிலையில் மீட்பு – வெளியான அதிர்ச்சி தகவல் !

    September 30, 2023
    • ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை: கனடாவுடன் உளவு தகவல்களை பகிரும‘Five Eyes Intelligence Alliance’ பற்றி தெரியுமா?
    • ஹிட்லர் இறந்த போது அவருடன் இருந்த பெண் யார் தெரியுமா?ஹிட்லர் இறந்த நாளன்று நடந்த அதிர்ச்சிகரமான சம்பவங்கள்!
    • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
    • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
    • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • பிரபுதேவா நடிக்கும் ‘முசாசி’ படக்குழுவினரை சந்தித்த இலங்கை பிரதமர்
    • பாகிஸ்தானில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் அடிதடி!!-வீடியோ
    • ரூ.1.25 கோடிக்கு விற்பனையான விநாயகர் லட்டு – ஹைதராபாத்தில் வினோதம்!
    • நான் நம்பிக்கை இழந்துவிட்டேன் – உலகம் என்னை கைவிட்டுவிட்டது – அரகலய ஆர்ப்பாட்ட வீடியோவை வெளியிட்ட குற்றசாட்டுக்குள்ளான – 13 மாதங்கள் இலங்கையில் மறைந்துவாழும் பிரிட்டிஸ் பெண்
    Recent Comments
      Quick Links
      • முகப்பு
      • இந்தியா
      • உலகம்
      • வெளிநாட்டு
      • சினிமா
      • விளையாட்டு
      • ஆரோக்கியம்
      • சுற்றுலா
      • வினோதம்
      • அரசியல்
      Quick Links
      • கட்டுரைகள்
      • தொடர் கட்டுரைகள்
      • கவிதைகள்
      • கலைகள்
      • வீடியோ
      • புகைப்பட தொகுப்பு
      • தொழில்நுட்பம்
      • வேலைவாய்ப்பு
      • கல்வி
      Quick Links
      • ஆரோக்கியம்
      • அந்தரங்கம்
      • ஆன்மீகம்
      • சுற்றுலா
      • சிறப்பு செய்திகள்
      • வினோதம்
      BRAKING NEWS
      • ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை: கனடாவுடன் உளவு தகவல்களை பகிரும‘Five Eyes Intelligence Alliance’ பற்றி தெரியுமா?
      • ஹிட்லர் இறந்த போது அவருடன் இருந்த பெண் யார் தெரியுமா?ஹிட்லர் இறந்த நாளன்று நடந்த அதிர்ச்சிகரமான சம்பவங்கள்!
      • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
      • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
      • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்
      2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

      swissreplicas.to

      bestwatchreplica.co
      replica watches

      swiss replica website

      fake rolex for sale
      relogios replicas
      Go to mobile version