ஓமந்தை பகுதிக்குட்பட்ட பறநட்டகல் சந்தியில் இன்று (04.07) காலை 11.30 மணியளவில் டொல்பின் வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,
அக்கரைபற்றிலிருந்து யாழ்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த கார்ரக வாகனம் (TOYOTA TOWACE) நொச்சி மோட்டைக்கும் ஓமந்தை பகுதிக்குமிடையில் பறநட்டகல் சந்தியின் வளைவில் வேககட்டுபாட்டை இழந்து வீதியின் அருகிலுள்ள மரத்தில் மோதியதிலே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்தில் ஸ்தலத்திலே ஒருவர் பலியானதுடன் படுகாயமடைந்த நிலையில் மூவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
வைத்தியசாலையில் படுகாயமடைந்தவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலதிக விசாரணையை ஓமந்தை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.