யாழ் பல்கலைக்கழக மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை அம்மாணவன் தற்காலிகமாக தங்கியிருந்த நாச்சிமார் கோவிலடி பகுதியில் அமைந்துள்ள வீட்டிலிருந்தே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.
இறந்தவர் வவுனியா சுந்தர புரதம் சாஸ்திரிகூழங்குளத்தினை சேர்ந்த சிவலிங்கம் யசோதரன்(வயது-24) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
யாழ் பல்கலைக்கழக கலைப்பீடத்தில் புவியியல் துறை மாணவனாக மூன்றாம் வருடத்தில் கல்வியை தொடர்ந்து வந்த இவர் படிப்பை தற்போது நிறைவு செய்யும் நிலையில் இருந்துள்ளார்.
இவரது மரணம் தொடர்பில் வீட்டின் உரிமையாளர் தகவல் தருகையில் இரவு தன்னிடம் இறந்தவர்(மாணவன்) நாளை (இன்று) வீடு செல்வதாக கூறியதாகவும் நேற்று மதியம் தனக்கு பல உதவிகளை செய்ததுடன் தனக்கு உள்ள நோய் தொடர்பாக பிரஸ்தாபித்ததாகவும் தெரிவித்தார்.
கடந்த சில வருடங்களுக்கு முதல் இனந்தெரியாத நோய் ஒன்றினால் அவதிப்பட்டு வந்ததாகவும் அதற்கான சிகிச்சையை பெற முயன்று வந்தும் உள்ளார்.
மேலும் தனது முகநூலில் இறக்கும் போது பதிவேற்றம் ஒன்றினையும் தரவேற்றி வைத்து விட்டு சென்றுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட மாணவன் தங்கியிருந்த வீட்டின் முற்றத்தில் நின்ற மாமரத்தில் நைலோன் கயிற்றின் உதவியுடன் தூக்கில் இட்டுள்ளார். மேலும் சவர அலகினால் தனது இரு கைகளையும் கிறியுள்ளார்.
இதன் காரணமாக சடலம் மீட்கப்பட்ட இடத்தில் இரத்தம் காணப்படுகின்றது. சடலம் தற்போது உள்ள இடத்தில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.