கேகாலை பகுதியில் கணனி மூலம் ஆபாசக் காட்சிகளைக் காண்பித்து தமது பாடசாலை மாணவிகள் எட்டுப் பேரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய பாடசாலை அதிபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த அதிபர்சிறுமிகளை தமது காரியாலய அறைக்கு அழைத்து ஆபாசக்காட்சிகளைக் காட்டி பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து கேகாலை சிறுவர் மற்றும் மகளிர் விவகாரப் பொலிஸ் பிரிவினர் அதிபரை கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமிகளை வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். மேற்படி சந்தேக நபரிடமிருந்து ஆபாசக்காட்சிகள் அடங்கிய பெண்டரைவ் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கேகாலைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யுவதி மீது பாலியல் வல்லுறவு;காதலன் உட்பட ஆறு பேர் கைது
07-06-2014
17 வயதுடைய தனது காதலியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் யுவதியின் காதலன் உள்ளிட்ட ஆறு பேர் கைதுசெய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடப்பு பகுதியைச் சேர்ந்த யுவதியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த யுவதி உடப்பு பகுதியில் முடி வெட்டும் நிலையம் ஒன்றில் பணி புரியும் இளைஞர் ஒருவருடன் காதல் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டிருந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த யுவதி கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் தனது காதலனைச் சந்திப்பதற்காக அவர் பணிபுரியும் இடத்திற்கு சென்றுள்ளார்.
இதன் போதே அங்கிருந்த தனது காதலன் உள்ளிட்ட ஆறு பேர் தன்னை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக அந்த யுவதி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும் அவர்கள் பிரதேசத்தை விட்டு தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட யுவதி வைத்திய பரிசோதனைக்காக சிலாபம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.