சீனாவில் மிகவும் பரபரப்பாக இயங்கி வந்த மெட்ரோ ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த ஒரு நடுத்தர வயது மனிதர் திடீரென தான் அணிந்திருந்த ஆடை முழுவதையும் கழட்டி நிர்வாணமாக உட்கார்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த ரயில் பெட்டியில் இருந்த பெண்கள் அலறியடித்துக்கொண்டு அடுத்த பெட்டிக்கு ஓடினர்.
சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் Ling Lu என்ற 41 வயது நபர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். ரயிலில் ஆண்கள் மற்றும் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
இந்நிலையில் Ling Lu திடீரென தனது ஆடைகள் ஒவ்வொன்றாக கழட்டி நிர்வாணமாக உட்கார்ந்தார். அவருடைய செய்கையை பார்த்த ஆண்கள் முகம் சுளித்தனர். பெண்கள் அலறியடித்துக்கொண்டு அங்கிருந்து அடுத்த பெட்டிக்கு ஓடினர்.
பின்னர் அடுத்த ஸ்டேஷன் வந்தவுடன் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த ஒருவர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். காவல்துறையினர் Ling Lu அவர்களிடம் எதற்காக நிர்வாணமாக உட்கார்ந்திருக்கின்றீர்கள் என்று கேட்டதற்கு தட்பவெப்பநிலை மிகவும் சூடாக இருக்கின்றது.
அதனால்தான் உடையின்றி இருக்கின்றேன் என்று கூறினார். பின்னர் போலீஸார் அவரை கைது செய்தனர்.
அவரை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்வதற்கு முன்னர் அவருடைய மனநலம் குறித்து அறிய அவரை மருத்துவர்கள் சோதனை செய்தனர். மருத்துவ சோதனையில் அவர் மனநலம் நன்றாக இருப்பதாக தெரியவே அவருக்கு கடுமையான தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
சீனாவில் பொதுஇடத்தில் நிர்வாணமாக இருப்பது கடுமையான குற்றமாக கருதப்படுகிறது.