முச்சக்கர வண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்தி அதில் அநாகரிகமான முறையில் நடந்து கொண்ட குற்றச்சாட்டின் பேரில் பாடசாலை மாணவர்கள் அறுவர் உட்பட முச்சக்கர வண்டி சாரதியை ஞாயிற்றுக்கிழமை (06) கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த முச்சக்கர வண்டியினையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
நீர்கொழும்பு கல்விக் கோட்டத்தில் உள்ள இரண்டு பாடசாலைகளைச் சேர்ந்த 15 மற்றும் 16 வயதுகளையுடைய மூன்று ஜோடி மாணவர்களே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடோல்கலே பிரதேசத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் முச்சக்கர வண்டியில் வைத்து ஜோடியாக இருந்து காதல் லீலையில் ஈடுபட்டுள்ள போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் குறித்த முச்சக்கர வண்டியை ஒரு மணித்தியாலத்திற்கு 300 ரூபா வாடகைக்கு அமர்த்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாணவர்கள் அறநெறி பாடசாலைக்கு செல்வதாக வீட்டாரிடம் தெரிவித்து விட்டு வந்து காதல் லீலையில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளிக் போது தெரிய வந்துள்ளது.