வவுனியா பிரதேச செயலாளர் பிரிவில் மாத்திரம் 31 இடங்களில் 2,863.5 ஏக்கர் காணி படையினரின் தேவைகளுக்காக சுவீகரிக்கப்பட்டுள் ளதாக வவுனியா உதவி பிரதேச செய லாளர் திருமதி சா. கர்ணன் தெரிவித்ததாக வன்னி மாவட்ட கூட்டமைப் பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
இக் காணிகளில் 2,412.75 ஏக்கர் அரச காணிகள் என்றும் 450.75 ஏக் கர் காணிகள் தனியாருக்குச் சொந்தமானது என்றும் இவற்றில் வேலங்குளத்திலுள்ள 2,223 ஏக்கர் காணி விமானப் படையினரின் தேவைகளுக்காக சுவீகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வவுனியா மாவட்டத் தில் பாதுகாப்பு அமைச்சின் தேவைக ளுக்காக சுவீகரிக்கப்பட்டுள்ள காணி களின் மொத்த அளவு எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள வவுனியா மாவட்ட குழுக்கூட்டத்தில் தெரிவிக்கப்படும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மேலும் தெரிவித்தார்.
வவுனியா பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தின்போது வவுனியா பிரதேசத்தில் இராணுவத் தேவைக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகள் தொடர்பாகவும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனால் விபரம் கோரப்பட்டபோதே வவுனியா உதவி பிரதேச செயலாளர் திருமதி சா. கர்ணன் இப்பட்டியலை வெளியிட்டார்.
தொடர்ந்தும் பட்டியலை சமர்ப்பித்த அவர், காணி முறைப்பாடுகள் தொடர்பில் 30 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவ்வாறு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை காணி சுவீகரிப்பு உத்தியோகத்தருக்கு தாம் மேலதிக நடவடிக்கைக்காக அனுப்பி வைத்துள்ளதாகவும் இதுவரை வவுனியா மாவட்டத்தில் பல தனியார் மற்றும் அரச காணிகள் இராணுவ தேவைக்காக சுவீகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தவகையில் வவுனியா நகரில் பொலிஸ் நிலையத்திற்காக 0.25 ஏக்கர் நிலமும் பூங்கா வீதியில் நெல் சந்தைப்படுத்தும் சபைக்குரிய இடத்தில் விசேட அதிரடிப்படைக்காக 1.5 ஏக்கர் நிலமும் பட்டானிச்சூர் புளியங்குளத்தில் தனியார் காணி 2 ஏக்கர் இராணுவத் தேவைக்காவும்….
மூன்று முறிப்பு கிராம சேவகர் பிரிவில் இராணுவ நலன்புரி நிலையத்திற்காக 0.25 ஏக்கர் நிலமும் இராணுவ மற்றும் விமானப்படையின் தலைமைப்பீடத்திற்காக 240 ஏக்கரும் மேலுமொரு படைப்பரிவுக்காக 38 ஏக்கர் காணியுமாக தனியார் காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளதுடன், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்காக 28 ஏக்கர் நிலமும் சுவீகரிக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்காக சுவீகரிக்கப்பட்ட காணியில் சிலருக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது. சிலர் அதனை பெறவில்லை எனவும் உதவி பிரதேச செயலாளர் தெரிவித்திருந்தார்.
இதேவேளை வவுனியா நகர் வடக்கு கிராம சேவகர் பிரிவில் கலாசார மண்டபம் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்டுள்ளது.
இதன் நிலப்பரப்பு 0.5 ஏக்கர் ஆகும். இத்துடன் பேயாடிகூழாங்குளத்தில் 56 ஆவது படையணிக்காக சுவீகரிக்கப்பட்ட காணியின் அளவு 20.5 ஏக்கராகும். மகாரம்பைக்குளம் கிராம சேவகர் பிரிவில் பொலிஸ் தேவைக்காக சுவீகரிக்கப்பட்ட காணியின் அளவு 6 ஏக்கராகும்.
காத்தார் சின்னகுளம் கிராமத்தில் விஜயபாகு ரெஜிமெண்டுக்காக 4 ஏக்கர் காணியும் சுவீகரிக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்திருந்தார்.