ரம்பாவுக்கும் கனடா தொழில் அதிபர் இந்திர பத்மநாதனுக்கும் 2010 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு சம்பா என பெயரிட்டுள்ளனர்.
ரம்பா தற்போது கனடாவில் கணவருடன் வசித்து வருறார். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதையும் அவர் நிறுத்தி விட்டார்.
கணவருடன் ரம்பாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளிவந்திருந்த நிலையில், மீண்டும் ரம்பா சினிமாவில் நடிக்கப் போகிறார் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், குஷ்பு சில தினங்களுக்கு முன் குடும்பத்தினருடன் விடுமுறையை கொண்டாட கனடாவிற்கு சென்றிருந்தார்.
குஷ்பு கனடா வந்துள்ள தகவல் ரம்பாவுக்கு தெரியவர நேரில் போய் தனது வீட்டுக்கு அழைத்து சென்று விருந்து கொடுத்தார்.
இதனையடுத்து குஷ்பு தனது டுவிட்டரில் கருத்து வெளியிட்டிருந்தார். கனடாவில் ரம்பா வீட்டுக்கு சென்றேன். அங்கு ரம்பாவும் அவரது கணவரும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள். அவர்களுக்குள் கருத்து வேறுபாடு என்றும் பிரியப்போகிறார்கள் என்றும் செய்தி பரப்புவது ரொம்ப தவறு. இது போன்ற வதந்திகளை பரப்பாதீர்கள் என அந்த செய்தியில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
கத்தியில் அஜீத்
துப்பாக்கி பட வெற்றிக்கு பிறகு விஜய் – முருகதாஸ் கூட்டணி மீண்டும் கத்தி படத்தில் இணைந்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். தீபாவளிக்கு இப்படம் வெளிவர இருப்பதால் துரித வேகத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இதில் முக்கிய செய்தி என்னவென்றால், கத்தி படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க தமிழ் சினிமாவின் முக்கிய புள்ளியை அணுகியுள்ளார் முருகதாஸ்.
பொலிவுட் பிரபலங்கள் வரை யோசித்த முருகதாஸ், திடீரென்று அஜீத்தை அணுகினால் என்ன என்று யோசனை வந்தவுடன் அதனை செயல்படுத்த முனைப்பு காட்டி வருகின்றார்.
இதனையடுத்து விஜய், அஜீத்தை இணைத்து படம் எடுக்க தயார் என்றும் முருகதாஸ் அறிவித்துள்ளார்.
விஜய் – அஜீத் இருவரும் ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் சேர்ந்து நடித்தார்கள். அதன் பிறகு தனித்தனியாக நடிக்க ஆரம்பித்தனர். தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக இருக்கின்றனர்.
இந்தி, மலையாளம், தெலுங்கு படங்களில் பெரிய ஹீரோக்கள் சேர்ந்து நடிக்கிறார்கள். ஆனால் தமிழ் படங்களில் அது போன்ற நிலைமை இல்லை.
இந்நிலையில் கத்தி படத்தில் விஜய் – அஜீத்தை மீண்டும் இணைய வைக்கும் முருகதாஸின் முயற்சி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
காஜலின் இரகசியம்
சூர்யா நடித்த அஞ்சான் படத்தின் டீசர் நேற்று வெளியாகியது. சூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்கி, தயாரித்து வரும் படம் அஞ்சான். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.
மேலும் மனோஜ் பாஜ்பாய், வித்யுத் ஜம்வால், ராஜ்பல் யாதவ், திலீப் தஹில் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன் இசையமைத்திருக்கின்றார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவை செய்திருக்கின்றார்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் இப்படத்தை ஒகஸ்ட் மாதம் 15ஆம் திகதி சுதந்திர தினத்தன்று வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதற்கான வேலைகளில் மும்முரமாக களமிறங்கியுள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விருதுகள் வழங்கும் விழாவில் கமல்ஹாசன், ஷாருக்கான் ஆகியோர். சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். அவர்கள் முன்னிலையில் சூர்யாவின் அஞ்சான் டீசர் வெளியிடப்பட்டது.
அஞ்சான் படத்தின் பாடல் வெளியீடு, இம்மாதம் 17ஆம் திகதி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அஞ்சான் படத்தின் மூலம் சூர்யா பாடகராகவும் அறமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.