அமெரிக்க மொன்டானா மாநிலத்தில் 3 போயிங் 737 விமானங்களின் பாகங்களை ஏற்றிச்சென்ற புகையிரதமொன்று தடம் புரண்டுள்ளது.
தடம்புரண்ட 19 புகையிரத பெட்டிகளில் 3 பெட்டிகள் விமான பாகங்கள் சகிதம் கிளார்க் போர்க் ஆற்றுக்குள் விழுந்துள்ளன.அந்தப்புகையிரத பெட்டிகளை மீட்கும் நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது எவரும் காயமடையவில்லை. மேற்படி புகையிரதம் தடம்புரண்ட சம்பவத்துக்கான காரணத்தை கண்டறிய பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.