கடந்த வாரம் இந்தப் பத்தியில், ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் TNA LTTEஅலுவலகம் நடத்தும் விசாரணையின் முன்பாக ஆதாரங்களை வழங்கி உண்மை, பொறுப்புக்கூறல், மற்றும் நல்லிணக்கம் என்பனவற்றை முன்னேற்றுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு (ரி.என்.ஏ) தலைமையேற்க வேண்டும் என ஆலோசனை வழங்கியிருந்தது பலத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது.
எதிர்பார்த்தபடியே, தமிழீழ விடுதலைப் புலிகளின்(எல்.ரீ.ரீ.ஈ) வெளிநாட்டு செயற்பாட்டாளர்கள், அவர்களின் ஆதரவாளர்கள் மற்றும் அவர்களின் சக பயணிகள் இந்த ஆலோசனையையிட்டு ஆத்திரம் அடைந்துள்ளார்கள்.
புலிகள் இப்போது பூனைகளாக மாறி மனித உரிமைகள் எனும் தாரக மந்திரத்தை இசைத்து வருகிறார்கள் என்று சொல்லப்படுவதற்கு மாறாக எல்.ரீ.ரீ.ஈ மற்றும் எல்.ரீ.ரீ.ஈ சார்பு சக்திகளின் இந்த பிரதிபலிப்பு, புலிகள் தன்மீதுள்ள கோடுகளை மாற்றவில்லை என்பதை வெளிக்காட்டுகிறது.
ஐநா விசாரணையில் “உண்மை, முழுவதுமான உண்மை மற்றும் உண்மையை தவிர வேறெதுவும் அல்ல” வெளிவர வேண்டும், அதன்மூலம் உருவாகும் உண்மையான பொறுப்புக்கூறலையும் மற்றும் நல்லிணக்கத்தையும் நாம் வரவேற்கிறோம் என தார்மீக அறநெறியின் உயர்தளத்தின் உச்சியில் நின்று அறைகூவல் விடுப்பதாக காட்டிக் கொள்ளும் ரி.என்.ஏ….
அரசியல் பண்டிதர்கள்கூட, அவர்களால் போலித்தனமாக வலியுறுத்தப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ யின் குற்றங்களைப் பற்றி சுயபரிசோதனை மேற்கொள்ளவோ அல்லது அதில் கவனம் செலுத்தவோ தங்களுக்கு ஒருபோதும் நேர்மையான ஆர்வம் கிடையாது என்கிற உண்மையை மறைப்பதற்காகவே இவ்வாறு கூறுகிறார்கள்.
மிகவும் சுவராஸ்யமானதாகவும் மற்றும் உண்மையாகவும் உள்ள விடயம் என்னவென்றால் ஏராளமான ஸ்ரீலங்காவாசிகளும் மற்றும் ஸ்ரீலங்கா வம்சாவளி மக்களும் எல்.ரீ.ரீ.ஈ – ரி.என்.ஏ ஆகியோரின் அந்தப் பதிலை பற்றிய முன்கூட்டிய கணிப்பு சம்பந்தமான கருத்துக்களை விவரித்து ஏராளமான மின்னஞ்சல்களை எனது சொந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பியிருந்தார்கள்.
அந்த மின்னஞ்சல்கள் மொத்தமும் எல்.ரீ.ரீ.ஈ மற்றும் ரி.என்.ஏ இடையில் உள்ள தொடர்புகளைப் பற்றி பேசியதுடன், இத்தகைய தொடர்புகள் இருப்பதானால் ஐநா விசாரணையில் எல்.ரீ.ரீ.ஈயை வெளிப்படுத்துவது ரி.என்.ஏ க்கு சாத்தியமல்ல என்றும் தெரிவித்திருந்தார்கள்.
அதில் மேலும் நுணுகி காணத்தக்கதாக இருந்தது, 2009ம் ஆண்டுக்குப் பிறகு ரி.என்.ஏ யின் நடத்தை பல வட்டாரங்களிலும், புலிகள் ஐந்து வருடங்களுக்கு முன்பு இராணுவ ரீதியாக தோற்கடிக்கப் பட்டிருந்தாலும், ரி.என்.ஏ இன்னமும் அவர்களது கைப்பாவையாகவும் மற்றும் எடுபிடியாகவுமே இருக்கிறார்கள் என்கிற வலிமையான எண்ணத்தை மீள உருவாக்குதற்கே உதவியாக இருந்தது.
இநத அஞ்சல்களை வாசிக்கும்போது, எல்.ரீ.ரீ.ஈயுடன் இணைந்து நடந்ததின் காரணமாக ரி.என்.ஏ மீது எந்த அளவிற்கு வெறுப்புணர்வு எற்பட்டிருந்தது என்பதை என்னால் உணரமுடிந்தது.
மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோற்றம் பற்றி ஏராளமான தவறான தகவல்கள் உள்ளதையும் என்னால் கண்டறிய முடிந்தது. பல அமைப்புகளை கட்டமைத்து ஒரு அமைப்பாக ரி.என்.ஏ யினை எல்.ரீ.ரீ.ஈ உருவாக்கி அதை வளர்த்தார்கள் என்று சொல்லப்படுகிறது. எனினும் அது மிகச் சரியானது அல்ல.
ஆரம்பத்தில் ரி.என்.ஏ ஒரு புலிகளின் உருவாக்கம் அல்ல என்கிற பிரசித்தமான நம்பிக்கைக்கு மாறாக, அது எல்.ரீ.ரீ.ஈ யின் எச்சரிக்கையான மறைமுக பின்துணையுடன் சுயாதீனமாக உருவாக்கப்பட்டது. அதன்பின் எல்.ரீ.ரீ.ஈ அதனை கண்காணித்து தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது.
இந்தக் கட்டத்தில் திரும்பவும் ரி.என்.ஏயின் பிறப்பு மற்றும் அதன் ஆரம்பகால வளர்ச்சி தொடர்பான கதை ஒன்றை இது சம்பந்தமாக எனது முன்னைய எழுத்துக்களை மிகப் பெரிய அளவில் சார்ந்து இதுபற்றி விவரிக்க முயற்சிக்கிறேன்.
தோற்றம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோற்றம் கிழக்கை சார்ந்துள்ளது. TNA unityஅதை தூண்டிய காரணி ஒக்ரோபர் 10, 2000 ல் நடநத பாராளுமன்ற தேர்தல். வடக்கு – கிழக்கு தேர்தல் முடிவுகள் பொதுவாகத் தமிழர்களுக்கும் மற்றும் குறிப்பாக சில தமிழ் கட்சிகளுக்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
பழம்பெரும் அரசியல்வாதியான ஆர்.சம்பந்தன் உட்பட அரசியல் ரீதியாக உணர்வு மிக்க திருகோணமலை மாவட்டத்திலிருந்து ஒரு தமிழர்கூட தெரிவாகவில்லை. மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தமிழர் விடுதலைக் கூட்டணியை (ரி.யு.எல்.எப்) சேர்ந்த இரண்டு தமிழர்கள் தெரிவானார்கள்.
ஆளும் பொதுஜன முன்னணி(பி.ஏ)யில் இருந்து மற்றொரு தமிழர் தெரிவு செய்யப்பட்டார். அம்பாறை மாவட்டத்திலிருந்து ஈபிடிபி ஆதரவு வழங்கிய சுயேச்சையான ஒரு தமிழர் தெரிவானார்.
ஆறு ஆசனங்கள் உள்ள வன்னி மாவட்டத்தில் பிஏ மற்றும் ஐதேக என்பனவற்றிலிருந்து இரண்டு சிங்களவர்களும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த ஒரு முஸ்லிமும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தை சேர்ந்த (ரெலோ) இரண்டு தமிழர்களும் மற்றும் தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகத்தை (புளொட்) சோந்த ஒரு தமிழரும் தெரிவானார்கள்.
ஒன்பது ஆசனங்கள் உள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில் போனஸ் ஆசனம் உட்பட நான்கு ஆசனங்களை ஈபிடிபி கைப்பற்றியது. ரி.யு.எல்.எப் மூன்றை வென்றது. தமிழ் காங்கிரஸ் ஒன்றையும் மற்றம் ஐக்கிய தேசியக் கட்சி ஒன்றையும் வென்றன. யாழ்ப்பாணத்தில் 42 வருடங்களுக்குப் பின்பு ஐதேக வெற்றி பெற்றது.
1952ல் சேர். பொன்னம்பலம் இராமநாதனின் மருமகன் சுப்பையாபிள்ளை நடேசன் ஐதேக சார்பில் வெற்றி பெற்றிருந்தார். இப்பொழுது தியாகராஜா மகேஸ்வரன் வெற்றி பெற்றிருந்தார். தேசிய பட்டியல் ஆசனத்தை கைப்பற்றும் அளவிற்கு போதுமான வாக்குகளை எந்த ஒரு தமிழ் கட்சியும் பெறவில்லை.
2000ம் ஆண்டு தேர்தலில் வடக்கு – கிழக்கில் இருந்து தமிழர்களின் பிரதிநிதித்துவம் குறைந்ததாக காணப்பட்டது. அதற்கு மேலும் சிங்கள ஆதிக்கம் உள்ள தேசிய கட்சிகள் மற்றும் ஈபிடிபி போன்ற அரச சார்பான தமிழ் கட்சிகள் சிறப்பான முடிவுகளைப் பெற்றிருந்தன.
அரச சார்பற்ற தமிழ் அரசியற் கட்சிகள் தோல்வியடைந்ததுக்கான ஒரு காரணம் அவற்றின் ஒற்றுமையின்மை, தமிழ் வாக்குகள் சிதறடிக்கப்பட்டது மற்றும் கற்பனை அல்லது எழுச்சியூட்டும் அரசியல் நிகழ்ச்சி நிரலின் குறைபாடு என்பன ஏனைய காரணங்கள்
பல படிமுறையான
வடக்கினைப் போல கிட்டத்தட்ட ஒரே படிமுறையாக இல்லாது இன ரீதியாக பல படி முறைகளைக் கொண்ட கிழக்கின் ஆபத்தான நிலமை கடுமையாக உணரப்பட்டது.
நிலமையை ஆய்வு செய்யும் ஒரு கருத்தரங்கு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டது. முன்னாள் டெய்லி மிரர் பத்திரிகையின் பத்தி எழுத்தாளர் தாரகி எனப்படும் தர்மலிங்கம் சிவராம் அதற்கு தலமை தாங்கினார்.
பல கல்விமான்கள், ஊடகவியலாளர்கள், ஆசிரியர்கள்,தொழில் நிபுணர்கள் சமூக சேவையாளர்கள், பட்டப்படிப்பை தொடர்பவர்கள். மற்றும் அரசியல் பிரதிநிதிகள் அதில் பங்கேற்றார்கள்.
எதிர்கட்சியில் உள்ள பல்வேறு தமிழ் அரசியல்கட்சிகள், வாக்குகள் சிதறுவதை தடுப்பதற்காக ஒரே குடையின் அமைப்பின்கீழ் ஒன்றுபட வேண்டும் என இந்த கருத்தரங்கில் தீர்மானிக்கப் பட்டது. அத்தகைய அமைப்பு பரந்தளவிவில் எல்.ரீ.ரீ.ஈக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அங்கு உணர்த்தப்பட்டது.
இந்த தீர்மானத்துக்கு எல்.ரீ.ரீ.ஈயின் அனுமதியையும் பெறவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த பணியினை நடைமுறைப் படுத்துவதை ஒருங்கிணைப்பு செய்வதற்காக மூன்று இணைத் தலைவர்களைக் கொண்ட ஒழுங்மைப்பு குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.
இது மூன்று அம்சங்களைக் கொண்டிருந்தது. முதலாவதாக எல்.ரீ.ரீ.ஈ யின் அனுமதியையும் மற்றும் அவர்களின் உள்ளார்ந்த ஆதரவையும் பெறுவது. இதில் எதிர்க் கட்சியில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளை கொலை செய்வதில்லை என்ற பாதுகாப்பையும் உத்தரவாதத்தையும் எல்.ரீ.ரீ.ஈயிடமிருந்து பெறுவது அவசியமாக இருந்தது.
இதற்குப் பதிலாக தமிழ் கட்சிகள் புலிகளின் உயர்ந்த நிலையை ஏற்றுக்கொள்வதுடன் எந்த பேச்சு வார்த்தையிலும் தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகளாக அவர்களை ஒப்புக்கொள்வது என்றும் தீர்மானிக்கப் பட்டது.
இரண்டாவதாக ஈபிஆர்எல்எப், புளொட், மற்றும் ரெலோ போன்ற போராளி வரலாறு உள்ள அரசியல் கட்சிகள் ஆயுதங்களை கை விடுவதுடன், எல்.ரீ.ரீ.ஈயை வேட்டையாடுவதில் அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதில்லை என்றும் அறிவிக்க வேண்டும்.
அவர்களுடன் தொடர்புடைய ஒட்டுக்குழுக்களான ராசிக் குழு(ஈபிஆர்எல்எப்),மோகன் குழு(புளொட்) ரஞ்சன் குழு(ரெலோ) போன்றவற்றுடன் இந்த இயக்கங்கள் தீவிர தொடர்பைக் கொண்டிருந்தன. இவை அனைத்தும் கிழக்கிலேயே இருந்தன.
மூன்றாவதாக ரி.யு.எல்.எப் மற்றும் தமிழ் காங்கிரஸ் போன்ற போராளிகள் அல்லாத கட்சிகள் முன்னாள் போராளிக் குழுக்களுடன் சேர்ந்து ஒரு பொது அமைப்பாக வேலை செய்வதற்கு சம்மதிக்க வேண்டும். முன்னாள் போராளிகளின் கரங்கள் இரத்தக் கறை பூண்டதாக இருப்பதால் அவர்களுடன் இணைய இரு கட்சிகளும் தயக்கம் காட்டின.
தவிரவும் ரி.யு.எல்.எப் ஒரு ஆயுதம் ஏந்தாத ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டிருந்தது. மேலும் தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழரசுக் கட்சி – ரி.யு.எல்.எப் என்பனவற்றின் இடையே நீண்டகாலமாக போட்டி மிக்க ஒரு கசப்பான வரலாறு இருந்து வந்துள்ளது.
அந்த நேரத்தில் ரி.யு.எல்.எப் வலுவான பிளவுபடாத அமைப்பாக இருந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அப்போது பிளவு ஏற்படவில்லை. தற்சமயம் பலவீனமான ரி.யு.எல்.எப் விரசிங்கம் ஆனந்தசங்கரியின் கீழுள்ள அதேவேளை முந்தைய கட்சி அங்கத்தவர்களில் பெரும்பாலானோர், இப்போது இலங்கை தமிழரசுக் கட்சி(ஐ.ரி.ஏ.கே) அங்கமாக உள்ளனர்.
அனுபவம்
ரி.யு.எல்.எப்கூட 1989ல் அது பெற்ற அனுபவம் காரணமாக எச்சரிக்கை அடைந்திருந்தது. புதுதில்லி கொடுத்த அழுத்தத்தின் விளைவாக போராளி அமைப்புகளான ஈழத் தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈஎன்டிஎல்எப்),ரெலோ மற்றும் புளொட் என்பன ரி.யு.எல்.எப் சார்பு சூரியன் சின்னத்தின் கீழ், ரி.யு.எல்.எப் வேட்பாளர்களுடன் இணைந்து போட்டியிட்டார்கள்.
எனினும் ரி.யு.எல்.எப்பின் அசல் வேட்பாளர்கள் யாரும் வெற்றிபெறவில்லை. அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் மட்டும் தேசியல் பட்டியல் மூலம் தெரிவானார் (அவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார்).
வன்னியில் உள்ள எல்.ரீ.ரீ.ஈயினர் இந்த பேச்சுவார்த்தை நடவடிக்கைகளில் நேரடியாக பங்கேற்கவில்லை. ஆனால் முன்னாள் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட அரசியற் பொறுப்பாளராக இருந்த கரிகாலன் இதற்கு ஆதரவு அளித்திருந்தார்.
பேச்சுக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே ஆரையம்பதி பிரதேச சபை தலைவரர் ரெலோவை சேர்ந்த றொபேட்டை எல்.ரீ.ரீ.ஈ கொலை செய்தது (இந்த றொபேட் வேறு நபர், யாழ்ப்பாணத்தில் வைத்து 2002ல் எல்.ரீ.ரீ.ஈ கொலை செய்த ஈபிஆர்எல்எப் பினை சேர்ந்த றொபேட் அல்ல இவர்). இதன் விளைவாக ரெலோ ஒற்றுமை பேச்சுக்களில் இருந்து வெளியேற விரும்பியதால் இந்தக் கொலை ஒரு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியது.
எனினும் குழு தனது முயற்சிகளை முன்னெடுத்து கிழக்கு எல்.ரீ.ரீ.ஈ தலைமையிடம் முறையீடு செய்தது. அப்போது கிழக்கு பிராந்திய இராணுவ தளபதியாக இருந்தவர் வேறு யாருமல்ல, கேணல் கருணா என்கிற விநாயகமூர்த்தி முரளீதரன்தான்.
அந்தக் கொலை அரசியல் பிரிவு மற்றும் புலனாய்வு பிரிவு என்பனவற்றுக்கு இடையே ஏற்பட்ட தொடர்பாடல் இடைவெளி காரணமாக தவறுதலாக நடைபெற்ற ஒன்று என எல்.ரீ.ரீ.ஈ விளக்கமளித்தது.
அதை தொடர்ந்து ரெலோ மற்றும் ஈபிஆர்எல்எப் என்பவற்றை சேர்ந்த முன்னணி நபர்கள் இரகசியமாக கரிகாலனை சந்தித்து விடயங்களை கலந்துரையாடினார்கள். அவர்களுக்கு உறுதிமொழி வழங்கப்பட்டது. அதேபோல ரி.யு.எல்.எப் பிரமுகர்களும் எல்.ரீ.ரீ.ஈ தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்கள்.
தர்மலிங்கம் சித்தார்த்தன்
மேலும் இரண்டு முடிச்சுகள் இருந்தன. தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான புளொட் இந்த ஐக்கியத்தை விரும்பியது, ஆனால் புளொட்டின் கோட்டையான வவுனியாவில் உள்ள புளொட் அங்கத்தவர்கள் ரெலோவுடன் (அதுவும் கூட வவுனியாவில் வலிமையாக இருந்தது) இணைவதை விரும்பவில்லை.
அதேபோல ரெலோ உயர் மட்டமும் வன்னியில் தனது ஆதரவு சிதைவடைந்து விடும் என்பதால் புளொட்டுடன் ஐக்கியமாவதை விரும்பவில்லை. இறுதியாக புளொட் அல்லது அதன் அரசியல் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(டிபிஎல்எப்) வெளியேறுவதை தெரிவு செய்தது.
விரோதம்
இரண்டாவது இலங்கை தமிழரசுக் கட்சிமீதும் அதன் வாரிசான ரி.யு.எல்.எப் மீதும், தமிழ் காங்கிரசுக்கு நீண்ட காலமாக இருந்துவரும் விரோதம். அனைத்துக் கட்சிகளும் இணைந்து ரி.யு.எல்.எப் சூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்குப் பதிலாக தமிழ் காங்கிரசின் சின்னமான சைக்கிள் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என தமிழ் காங்கிரஸ் விரும்பியது.
அப்போது தமிழ் காங்கிரசில் மருத்துவர் யோகலக்சுமி பொன்னம்பலம் தான் ஆதிக்கமுள்ளவராக இருந்தார், ஏனெனில் அவரது கணவரான குமார் பொன்னம்பலம் ஜனவரி 2000ல் கொல்லப்பட்டு விட்டார். அவரது இல்லத்தில் நடைபெற்ற நீண்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு, அவர் இணைவதற்கும் சூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கும் சம்மதித்தார்.
இதேபோல ரி.யு.எல்.எப் இல் இருந்த சில பிரபலங்களும் காங்கிரஸ் மற்றும் முன்னாள் போராளிக் குழுக்கள் என்பனவற்றுடன் இணைவதற்கு தயக்கம் காட்டினார்கள், ஆனால் படிப்படியாக அவர்களை வெற்றி கொள்ளவோ அல்லது மௌனமாக்கவோ முடிந்தது.
இந்த கலந்துரையாடல்கள் தொடர்ந்த போதும் சமாந்தரமான இரண்டு விடயங்களி;ன் நடவடிக்கைகளும் தொடர்ந்தன. ஒன்று திடீர் நிகழ்வாக துண்டுப் பிரசுரங்கள் விநியோகிப்பது மற்றும் ஊடகங்களுக்கு அறிக்கை விடுவது போன்ற செயல்கள் இதுவரை கேட்டிராத அமைப்புகளான சங்கிலியன்படை,குளக்கோட்டான்படை, மற்றும் பண்டாரவன்னியன் படை போன்றவற்றால் நடத்தப்பட்டு வந்தன.
இதில் சங்கிலியன் யாழ்ப்பாணத்தை ஆண்ட அரசன், குளக்கோட்டான் திருகோணமலை அரசன் மற்றும் பண்டாரவன்னியன் அடங்காப்பற்று என்ற இடத்தின் குறுநில மன்னன்.
இந்த துண்டுப்பிரசுரங்கள் மற்றும் அறிக்கைகள் யாவும் தமிழர்களின் ஒற்றுமையை வலியுறுத்தியதுடன் இதற்கு ஒத்துழைக்காதவர்கள்மீது தண்டனை செயற்படுத்தப்படும் என்றும் அச்சுறுத்தின.
சமாந்தரமான மற்றைய நடவடிக்கை கொழும்பை தளமாக கொண்ட சில முக்கிய தமிழர்கள் ஒட்டு மொத்த தமிழர் ஒற்றுமையை ஏற்படுத்த மேற்கொண்ட அர்த்தமுள்ள முயற்சிகள் ஆகும்.
இந்த தமிழர்களில் முன்னணி வணிகர்கள், தொழில் நிபுணர்கள், மற்றும் சமூக சேவையாளர்கள் ஆகியோர் அடங்கியிருந்தார்கள். அவர்களில் சிலர் மட்டக்களப்பில் ஒற்றுமை முயற்சிக்காக சகாக்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வந்தார்கள். இந்த ஒற்றுமைப் பேச்சு வார்த்தைகளில் இந்த கொழும்பு வாழ் தமிழர்களின் முயற்சியும் ஒரு பெரிய பங்கினை வகித்தது.
(தொடரும்)