ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Thursday, September 28
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»செய்திகள்»ஈ–மெயில் மூலம் கணவரின் 2–வது திருமணத்தை நிறுத்திய கனடா பெண்…..!!
    செய்திகள்

    ஈ–மெயில் மூலம் கணவரின் 2–வது திருமணத்தை நிறுத்திய கனடா பெண்…..!!

    AdminBy AdminJuly 10, 2014No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    இலங்கையை சேர்ந்தவர் சாந்திவாசன் (வயது 33). இவர் கனடாவில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சாந்திவாசன் வேலை செய்யும் நிறுவனத்தில் இலங்கையை சேர்ந்த சீதா என்பவரும் வேலை செய்தார்.

    அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னர் இருவரும் திருமணம் செய்தனர். தற்போது அவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் சாந்திவாசனுக்கும், சீதாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கணவன்– மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் குறை சொல்லி திட்டினர். இதில் ஆத்திரம் அடைந்த சாந்திவாசன், ‘திருச்சியில் எனது முன்னாள் காதலி இருக்கிறாள்.

    அவளை திருமணம் செய்ய போகிறேன், உன்னால் என்ன செய்ய முடியும்?’ என கூறியுள்ளார். ‘நீ எப்படி திருமணம் செய்கிறாய் என பார்த்து விடுகிறேன்’ என சீதாவும் சவால் விடுத்துள்ளார்.

    இதையடுத்து திருச்சி வந்த சாந்திவாசன் தனது முன்னாள் காதலியான சங்கமி (26) என்பவரை சந்தித்துள்ளார். பின்னர் கடந்த 4–ந்தேதி சங்கமியை பதிவு திருமணமும் செய்தார். தொடர்ந்து முறைப்படி திருமணம் செய்ய பெண் வீட்டார் ஏற்பாடு செய்தனர்.

    இதன்படி நேற்று காலை சாந்திவாசன்–சங்கமி திருமணம் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் நடக்க இருந்தது.

    கனடாவில் இருந்த சீதாவிற்கு திருமண விஷயம் தெரியவந்தது. உடனடியாக அவர் தனது கணவரின் 2–வது திருமணத்தை தடுத்து நிறுத்துமாறு  ஈ–மெயில் மூலம் மூலம் திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு  புகார் அனுப்பினார். புகார் மீது நடவடிக்கை எடுக்கும்படி கண்டோன்மென்ட் போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார்.

    நேற்று முன்தினம் ஆர்.எம்.எஸ். காலணி, அசோக் நகரில் உள்ள சங்கமி வீட்டிற்கு சென்ற கண்டோன்மென்ட் சப்–இன்ஸ்பெக்டர் அழகம்மாள் அங்கிருந்த சாந்திவாசனிடம் விசாரணை நடத்தினார்.

    அப்போது கனடாவில் சீதாவுடன் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்ததாகவும், தங்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர் எனவும் சாந்திவாசன் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து நேற்று நடக்க இருந்த திருமணத்தை போலீசார் நிறுத்தினர். சங்கமியை போலீஸ் நிலைத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். கனடாவில் இருக்கும் சீதாவை தொடர்பு கொண்டு திருச்சிக்கு வந்து புகார் தரும்படி போலீசார் கூறினர்.

    விசா கிடைப்பதில் சிக்கல் இருப்பதால் தன்னால் இந்தியாவிற்கு வர முடியாது என சீதா கூறி உள்ளார். இதனால் சாந்திவசான் மீது வழக்கு பதிவு செய்வது குறித்து போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    இணையதளம் மூலம் நாடு விட்டு நாடு காதல் திருமணங்கள் நடந்து வரும் நிலையில் அதே இணையதளம் மூலம் காதல் கணவரின் 2–வது திருமணத்தை பெண் ஒருவர் தடுத்து நிறுத்தி இருப்பது திருச்சி பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    Post Views: 56

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    காதலனை தோழிக்கு விருந்தாக்க ஆசைப்பட்ட காதலி.. அந்த நேரத்தில் அப்படி.. கட் ஆன ‘அந்த’ உறுப்பு

    September 27, 2023

    பொலிஸாரிடம் தப்பி ஓடிய இரு இளைஞர்கள் பரிதாப உயிரிழப்பு.

    September 27, 2023

    உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இடம்பெற்றது என்ன? 2005 முதல் அரசியல் கொலைகளை செய்தவர்கள் யார்? சிறையிலிருந்து சுரேஸ் சாலேக்கு பிள்ளையான் தெரிவித்த செய்தி என்ன? ஆசாத் மௌலான தெரிவித்துள்ள புதிய தகவல்கள்

    September 24, 2023

    Leave A Reply Cancel Reply

    July 2014
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031  
    « Jun   Aug »
    Advertisement
    Latest News

    தாயின் ஐடியுயை காட்டி காதலனுடன் விடுதியில் தங்கிய மகள்

    September 28, 2023

    3 ரயில்களில் மோதி இருவர் மரணம்: 4 யானைகள் பலி

    September 28, 2023

    இன்னுமொரு கோட்டாபாயவாக மாற விரும்பும் பீல்ட் மார்ஷ் சரத் பொன்சேக்கா…! நல்லாட்சி காலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பதவி கிடைக்காமைக்கு அதுவே காரணம்

    September 28, 2023

    பேயா.. கொஞ்சம் முன்னாடி வாங்க.. உங்க காலை பார்க்கனும்.. ஹைகோர்ட்டை அதிர வைத்த நீதிபதி!

    September 28, 2023

    ரூ.29.50 லட்சம் ரூபாயை ஏமாற்றிய ஏஆர் ரகுமான்!!.. சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் டாக்டர்கள் கொடுத்த பரபரப்பு புகார்

    September 28, 2023
    • ஹிட்லர் இறந்த போது அவருடன் இருந்த பெண் யார் தெரியுமா?ஹிட்லர் இறந்த நாளன்று நடந்த அதிர்ச்சிகரமான சம்பவங்கள்!
    • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
    • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
    • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்
    • ஆபாச பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்த குற்றச்சாட்டு – டிரம்ப் கைது செய்யப்படுவாரா?

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • தாயின் ஐடியுயை காட்டி காதலனுடன் விடுதியில் தங்கிய மகள்
    • 3 ரயில்களில் மோதி இருவர் மரணம்: 4 யானைகள் பலி
    • இன்னுமொரு கோட்டாபாயவாக மாற விரும்பும் பீல்ட் மார்ஷ் சரத் பொன்சேக்கா…! நல்லாட்சி காலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பதவி கிடைக்காமைக்கு அதுவே காரணம்
    • பேயா.. கொஞ்சம் முன்னாடி வாங்க.. உங்க காலை பார்க்கனும்.. ஹைகோர்ட்டை அதிர வைத்த நீதிபதி!
    Recent Comments
      Quick Links
      • முகப்பு
      • இந்தியா
      • உலகம்
      • வெளிநாட்டு
      • சினிமா
      • விளையாட்டு
      • ஆரோக்கியம்
      • சுற்றுலா
      • வினோதம்
      • அரசியல்
      Quick Links
      • கட்டுரைகள்
      • தொடர் கட்டுரைகள்
      • கவிதைகள்
      • கலைகள்
      • வீடியோ
      • புகைப்பட தொகுப்பு
      • தொழில்நுட்பம்
      • வேலைவாய்ப்பு
      • கல்வி
      Quick Links
      • ஆரோக்கியம்
      • அந்தரங்கம்
      • ஆன்மீகம்
      • சுற்றுலா
      • சிறப்பு செய்திகள்
      • வினோதம்
      BRAKING NEWS
      • ஹிட்லர் இறந்த போது அவருடன் இருந்த பெண் யார் தெரியுமா?ஹிட்லர் இறந்த நாளன்று நடந்த அதிர்ச்சிகரமான சம்பவங்கள்!
      • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
      • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
      • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்
      • ஆபாச பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்த குற்றச்சாட்டு – டிரம்ப் கைது செய்யப்படுவாரா?
      2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

      swissreplicas.to

      bestwatchreplica.co
      replica watches

      swiss replica website

      fake rolex for sale
      relogios replicas
      Go to mobile version