ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Tuesday, February 7
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    இலங்கை செய்திகள்

    பணத்தைத் தண்ணீரில் போட வேண்டாம், ஆபத்தான கடற்பயணத்தை மேற்கொண்டு அவுஸ்திரேலியா வர வேண்டாம்”

    AdminBy AdminJuly 13, 2014No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    பணத்தைத் தண்ணீரில் போட வேண்டாம், ஆபத்தான கடற் பயணத்தை மேற்கொண்டு அவுஸ்திரேலியா வர வேண்டாம், இது அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் வேண்டுகோள். இது நாம் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும், வானொலிகளிலும் தினந்தினம் பார்த்தும் கேட்டும் வரும் ஒரு விடயம்.

    மக்களுக்கு பணத்தாசை காட்டி ஏமாற் றும் ஆட்கடத்தற்காரரிடமிருந்து காப் பாற்றுவதற்காக அவுஸ்திரேலிய அரசாங்கம் உள்ளூர் ஊடகங்களில் பெருந்தொகைப் பணத்தைச் செலவு செய்து மக்கள் விழிப் படைய இவ்வாறு விளம்பரம் செய்தால் அதே ஊடகங்கள் அத்துமீறிச் சென்று நடுக்கடலில் அல்லல்படும்  மக்களைக்  காப்பாற்றாத மனித நேயமற்றவர்கள் என அவுஸ்திரேலிய அரசிற்கு எதிராகச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

    ஆபத்தான கடற்பயணம் குறித்தும், ஆட்கடத்தற்காரர்களால் ஏமாற்றப்படுவது குறித்தும் அறிவுறுத்தல் கொடுத்து மக்களைக் காப்பாற்றுவதை விடுத்து சட்டங்களை மதியாது மீறிச் செல்லும் மக்களுக்காக ஊடகங்கள் பரிந்துரைப்பது வியப்பையே தருவதாக அமைந்துள்ளது.

    asylum-seekersஅதிலும் நடுக்கடலில் படகு பழுதானதால் அல்லல்பட்ட மக்களைக் காப்பாற்றி அவர்களுக்கு உண்ண உணவும், மருத்துவ வசதிகளும் ஏற்படுத்திக் கொடுத்து அவர்களைச் சொந்த நாட்டிற்கு பத்திரமாக அனுப்பி வைத்த பின்பும் மனித நேயமற்றவர்கள் எனும் இழி சொல்லுக்கு ஆளாக வேண்டியுள்ள நிலையே தற்போது காணப்படுகின்றது.

    உண்மையில் இலங்கையர் எவருக்கும் தற்போது அகதியாக எந்தவொரு நாட் டிற்கும் செல்ல வேண்டிய நிலை துளியளவும் இல்லை. நாட்டில் தற்போது மிகவும் அமைதியானதொரு சூழல் நிலவி வருகின்றது. கடந்த யுத்த காலத்தில் இந்தியா மற்றும் மேற்கத்தய நாடுகளுக்கு இலங்கைத் தமிழர் பலரும் அகதிகளாகச் சென்றனர்.

    அதில் ஒரு நியாயம் இருந்தது. இப்போது இன்னொரு நாட்டில் புகலிடம் தேடுவது என்பது எவ்வகையிலும் தேவையற்றதும், ஏற்றுக் கொள்ளப்படாததுமானதொரு விடயம்.

    அதிலும் இவ்வாறு புகலிடம் கோரிச் செல்லும் நூற்றுக் கணக்கானோரில் தமிழர்களுடன் சிங்கள மற்றும் இளைஞர்கள் மட்டுமல்லாது குடும்பப் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் எனப் பலரும் உள்ளடங்குகின்றனர்.

    இதிலிருந்தே இவர்கள் அகதிகளாகச் செல்லவில்லை, தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த சட்டவிரோதமாகச் செல்கிறார்கள் என்பது தெளிவாகின்றது.

    இந்நிலையில் கடந்த வாரம் இந்தியாவிலிருந்து புகலிடம் கோரி அவுஸ்திரேலியாவிற்குப் படகில் சென்ற இலங்கையர்கள் 152 பேர் படகு பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்தனர். இவர்களை அவுஸ்திரேலிய அரசு ஏற்க மறுத்தது.

    எனினும் மனிதநேயம் கொண்டு அவர்களைக் காப்பாற்றி ஒரு தொகையினரை இலங்கையிடம் கையளித்தது. ஏனையோரும் இவ்வாறு ஒப்படைக்கப்படவுள்ளனர்.

    இவ்வாறு கள்ளமாகச் சென்றவர்கள் தமக்கு இலங்கையில் வாழ முடியாத பயங்கர சூழல் நிலவுவதாக அவுஸ்திரேலிய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். இதனை அவுஸ்திரேலிய பிரதமர், அந்நாட்டு குடிவரவு குடியகல்வுத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் என எவருமே ஏற்றுக் கொள்ளவில்லை.

    அதனால் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். இவ்வாறு இவர்கள் திருப்பி அனுப்படாவிட்டால் இதுவே ஏனைய பலரையும் இதுபோன்ற பயணத்திற்கு ஊக்குவிப்பதாக அமையும் என்பது அவுஸ்திரேலிய தரப்பினரின் கருத்தாக உள்ளது.

    இப்போது இலங்கையர் பலரே இவ்வாறு படகுகள் மூழ்குவதாகத் தமது நாட்டிற்குள் சட்டவிரோதமாக வருவதால் இலங்கை கடற்பரப்பில் கடலோரக் கண்காணிப்பிற்காக அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு புதிய இரு அதிகவே கடற்படைக் கப்பல்களையும் வழங்கியுள்ளது.

    அவுஸ்திரேலியாவின் குவின்ஸ்லாந்து கோலட் கடற்கரையில் வந்து சிக்குண்டு தவித்த இளம் திமிங்கிலத்தை கடற்பரப்பில் சேர்க்க முயற்சி எடுத்த அதிகாரிகள், நடுக்கடலில் தத்தளித்த மனிதர்களுக்கு உதவி செய்யவில்லை என்பதாக உள்ளூரில் செய்திகளை வெளியிட்ட பத்திரிகைகள் அந்நாட்டு அரசாங்கம் அம்மக்களுக்குச் செய்த உதவியை முழுமையாக மறைத்திருந்தமை துரதிஷ்டமான விடயம்.

    இலங்கைக்குத் தாம் திருப்பி அனுப்பப்பட்டால் அங்கு துன்புறுத்தப்படுவோம் என அவுஸ்திரேலிய குடிவரவு அதிகாரிகளிடம் புகலிடக்காரர்கள் தெரிவித்தமை முற்றிலும் பொய்யான கூற்றாகும்.

    தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஆட்கடத்தல் காரர்களிடம் பணத்தைக் கொடுத்து சட்டவிரோதமான, ஆபத்தான பயணம் எனத் தெரிந்திருந்தும் துணிந்து செல்லும்போது பிடிபட்டால் திரும்பிவர நேரும் என்பதை இவர்கள் நிச்சயம் முன்கூட்யே அறிந்திருப்பார்கள்.

    திருப்பி அனுப்பப்பட்ட அனைவருமே சாதாரண விசாரணைகளுக்கு மட்டுமே உட்படுத்தப்பட்டனர் என்பதே உண்மை. அவுஸ்திரேலிய அரசு விளம்பர எச்சரிக்கையைத் தொடர்ச்சியாக விட்டுவரும் நிலையில் இருநாட்டுச் சட்டங்களுக்கும் மதிப்பளியாது செல்வதனை எவரும் ஊக்குவிக்கக் கூடாது.

    இதனால் வரும் ஆபத்துக்களை எடுத்துரைப்பதே இப்போதுள்ள அவசியத் தேவையாகும் என்பதுடன் அரசாங்கம் ஆட்கடத்தல் காரர்களைக் கண்டு பிடித்து அவர்களுக்குச் சரியான தண்டனையை வழங்க வேண்டும்.

    Post Views: 578

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    யாழில் மோட்டார் சைக்கிள் ஹயஸ் வாகனத்துடன் மோதி விபத்து ; ஒருவர் பலி

    February 6, 2023

    நிலக்கரி கொள்வனவுக்கு ரூ.456 கோடி தேவை

    February 5, 2023

    கோடீஸ்வரர் கொலை: கந்தானையில் ஒருவர் கைது

    February 5, 2023

    Leave A Reply Cancel Reply

    July 2014
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031  
    « Jun   Aug »
    Advertisement
    Latest News

    ஜன்னல் சீட்டுக்காக பஸ், ட்ரெயின்ல இல்ல.. Flight -ல நடந்த சண்டை.. முட்டி மோதிக் கொண்ட பெண்கள்!!

    February 7, 2023

    பெட்ரோல் பங்கில் பணத்தை தூக்கி ரோட்டில் வீசிய கார் உரிமையாளர்.. கண்ணீருடன் பொறுக்கி எடுக்கும் பெண் ஊழியர்.. உலகளவில் அதிர்ச்சி சம்பவம்.!

    February 7, 2023

    தமிழ்நாடு: எடப்பாடி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் – ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் புதிய திருப்பம்

    February 6, 2023

    சாமியார் தோற்றத்தில் நடிகை தமன்னா…! ரசிகர்கள் ஷாக்…!

    February 6, 2023

    துருக்கி-சிரியா நில நடுக்கம் பலி எண்ணிக்கை 2,300 ஆக உயர்வு…!

    February 6, 2023
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • ஜன்னல் சீட்டுக்காக பஸ், ட்ரெயின்ல இல்ல.. Flight -ல நடந்த சண்டை.. முட்டி மோதிக் கொண்ட பெண்கள்!!
    • பெட்ரோல் பங்கில் பணத்தை தூக்கி ரோட்டில் வீசிய கார் உரிமையாளர்.. கண்ணீருடன் பொறுக்கி எடுக்கும் பெண் ஊழியர்.. உலகளவில் அதிர்ச்சி சம்பவம்.!
    • தமிழ்நாடு: எடப்பாடி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் – ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் புதிய திருப்பம்
    • சாமியார் தோற்றத்தில் நடிகை தமன்னா…! ரசிகர்கள் ஷாக்…!
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version