காதலை நிறைய பாத்தாச்சு. ஆனா லும், அழகிய வண்ணங்கள் காதலில் அப்படியே இருக்கு. நான் ஓவியனாக இருந்திருந்தால் தூரிகை எடுத்திருப்பேன். இசைக் கலைஞனாக இருந்திருந்தால் வாசித்துக் காட்டியிருப்பேன்.
சினிமா இயக்குநராக இருப்பதனால் படம்பிடித் துக் காட்டுகின்றேன். அது தான் “இது நம்ம ஆளு” என்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். அவர் வழங்கிய நேர்காணல் பின்வருமாறு,
பிரிஞ்சவங்களை சேர்த்துப் படம் எடுத்து எங்களைத் தூண்டுறீங்க?
“படத்துல ஒரு இடத்தில சூரிக்கிட்டே நயன் கேட்பாங்க.” இந்த சிம்பு எப்படின்னு. சூரி சொல்வார் கொஞ்சம் ‘சென்சிட்டிவ்’, கொஞ் சம் ‘பொஸிட்டிவ்’. அவன் நல்லா இருந்தா நாலு பேர் நல்லா இருப்பாங்க.
பிடிச்சவங்க மூஞ்சியில சிரிப் பைப் பார்க்கணும்னா அவன் என்ன வேணாலும் பண்ணுவான். எதையும் தலையில் ஏத்திக்கமாட் டான். ஒரே வரியில் சொல்லனும்னா ஒரு அல்பத்தனம். சின்னத்தனம் எட்டிப்பார்க்காத மனுஷன்னா இவன் தான்னு சொல்வார்.
மறுபடியும் அவர் மைனஸ் சொல்லுங்கன்னு கேட்பாங்க. “’கான்ட்ரவர்சி’ மன்னன் தண்ணி அடி ச்சா அலைப்பறை கொடுப்பான் பாருங்க.. சொன்ன நேரத்திற்கு வரமாட்டான். அவன் நினைச்ச நேரத்துக்குத்தான் வருவான்.
இப்பல்லாம் மாறிட்டேன்னு சொல்றான். போகப் போகத்தான் தெரியும். நமக்கெல்லாம் அடிக்கடி கோபம் வரும்னா. அதுமாதிரி அவனுக்கு அடிக்கடி காதல் காதல் வரும்னு சொல்வார்.
“அவரை இம்ப்ரஸ் பண்றது எப்படின்னு அடுத்தக் கேள்வி வரும்” அவனை இம்ப்ரஸ் பண்றதுங்கிற கதையே வேண்டாம். காதல்ங்கிற ஒரு விதை போதும். அவுட்டாகிடுவான்னு” சூரி சொல்வார். இப்படித்தான் கதையே போகும். இவங்க இரண்டு பேரோட காதல்தாங்க கதை.
“ரெண்டு பேரும் திரும்ப சேர்ந்து வந்த பீல் எப்படியிருக்கு?”
“ட்ரெய்லரை காட்டினால் சூர்யா, ஆர்யா, சந்தானம், சசிகுமார், சுசீந்தின்னு எல்லா ரும் பாராட்டித் தள்ளிட்டாங்க. நயனுக்கு ‘வட்ஸ் அப்ல’ டிரெய்லரை அனுப்பினால், “எனக்கு ஒரு நல்ல படம் கொடுத்திட்டீங்க சார்னு” உருகினாங்க.
அவங்க ரெண்டு பேருக்கும் தனித்தனியா 20 நிமிஷம் தான் கதை சொல்லியிருப்பேன். அந்த 20 நிமிஷமும் ரெண்டு பேரும் சிரிச்சுக்கிட்டே தான் இருந்தாங்க.
இதில் பல இடங்களில் அவங்க வாழ்க்கையை திரும்பிப் பார்த்தாங்கன்னு நினைக்கிறேன். அவங்க லைப் இதில் இருக்கும் போது நாம் நடிப்புக்குக் கஷ்டப்படத் தேவையில்லை. அது தான் நடந்தது. நிறைய தடவை ‘மொனிட்டர்’ போகும் போதே ஷாட் ஓகே பண்ணியிருக்கிறேன். “ஓகே…. ஷாட்டுக்குப் போகலாமா”ன்னு கேட்டால் எடுத்தாச்சு சொல்லுவேன்.
கெமரா மேன் பாலசுப்பிரமணியம் கெமராவை ஆன்ல வச்சுகிட்டே இருப்பாரு. நடுவே எங்க சிரிச்சாலும் அவங்க விளையாடினாலும் அது படமாகிக்கிட்டே இருக்கும். நயன் சொந்தக்காரங்ககிட்ட போன்ல பேசுறதைக் கூட அந்த வெள்ளைச் சிரிப்புக்காக எடுத்து வைப்போம்.
நிறைய பேர் என்னிடம் “அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிடுவாங்களா?”ன்னு கேட்டுட்டே இருக்காங்க. அது அவங்க சொந்த விஷ யம் .எனக்கு அவங்க மைலா, சிவா”
“சூரி முதல் தடவையா சிம்பு கூட சேர்ந்திருக்காரே….”
சூரி நமக்கு செட்டாவாரான்னு சிம்புக்கு சந்தேகம் இருந்தது. சந்தானத்தை நானும் என்னை சந்தானமும் நல்லா புரிஞ்சிருக்கோமேன்னு சொன்னார். முதல் நாளிலேயே அந்த ‘டவுட்’ விலகிடுச்சு.
தூக்கிக் கட்டின வேட்டியும், பெரிய மீசையும், புழுதி அப்பின காலுமா சூரியை பார்க்க முடியாது. ஐ.டி பையன் இரண்டு பேருக்கும் ஒரே பேச்சு. நக்கல், கிண்டல் தான். இனிமே சூரி ‘ஓல் ரவு ண்டர்’.
Thagadu Thagadu Audio Launch