இன்றைய இளைய தலைமுறையினரிடம் அவர்களின் ஆரோக்கியம் குறித்த எம்மாதிரியான விழிப்புணர்வு இருக்கிறது என்று ஒரு ஆய்வைத் தொடங்கினால், அவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் சொல்லும் ஒரு வார்த்தை நீரிழிவு .
அந்த அளவிற்கு இன்றைய இளைய சமுதாயத்தின் ஆரோக்கியத்தை அச்சுறுத்தும் வகையில் வளர்ந்து கொண்டிருக்கிறது சர்க்கரை நோய். இந்நிலையில் இந்த நோயை கட்டுப்படுத்துவது எப்படி?
அதனை குணப்படுத்துவது எப்படி? என்று தன்னுடைய முப்பது ஆண்டு கால அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் சென்னையில் இயங்கி வரும் எஸ் எல் .என் .டயாபெடிக் மையத்தின் இயக்குநரும், சர்ச்சரைநோய் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவ நிபுணருமான டாக்டர் எஸ் லட்சுமி நாராயணன்.
நீரிழிவு நோய் ஒரு நோய் அல்ல அது ஒரு குறைபாடு மட்டுமே என்ற ஒரு விள க்கத்தையும் மருத்துவதுறை தருகிறது. அதே தருணத்தில்,‘ நீரிழிவு நோயை குணப்படுத்த இயலாது. அதனை கட்டுப்படுத்தத்தான் முடியும்‘ என்ற ஒரு விளக்கத்தையும் மருத்துவ துறை தருகிறது. இவற்றில் எது சரி? எது தவறு?
நிரிழிவு என்பது ஒரு குறைபாடு தான். எப்படியெனில் தெற்காசியர்களான நாம் அரிசியை உணவாக உண்கிறோம். அதில் இருக்கும் கார்போஹைட்ரேட்டுகள் சர்க்கரையாக மாற்றப்பட்டு, அதாவது குளுக்கோஸாக மாற்றப்பட்டு உடலின் இயங்குசக்திக்காக செலவிடப்படுகிறது.
உடலில் இரத்தத்தில் கலந்து பல பகுதிகளுக்கு பயணிக்க இன்சுலின் என்னும் ஹார்மோன் உதவிபுரிகிறது. இந்நிலையில் இந்த இன்சுலின் எனும் ஹார்மோன் சரியாக இயங்கவில்லை என்றால் இதைத்தான் சர்க்கரை நோய் என்று குறிப்பிடுகின்றோம்.
சர்க்கரை அதிகமாகும் போது கொல ஸ்டரோல் என்னும் கொழுப்பும் அதிகமாகிறது. இதனால் ஏராளமான ஆர்கன்ஸ் பாதிக்கப்படுகிறது. இரத்த நாளங்கள் பாதிக்கப்படுகிறது. நம்முடைய மெட்டோபாலிஸம் பாதிக்கப்படுகிறது.
நீரிழிவு நோய் கால் என்னும் உடலுறுப் பைப் பாதிப்பதன் மருத்துவ பின்னணி என்ன?
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படாத சர்க்கரை நோய், நோய் தொற்றை உண்டாக்கி முதலில் காலை பாதிக்கிறது. அங்கு ஏதேனும் அடிப்பட்டு புண் ஏற்பட்டால் கூட அதனை குணப்படுத்துவதற்கு நீண்ட நாட்களை எடுத்துக்கொள்கிறது.
குறிப்பாக அப்பகுதியில் இருக்கும் உணர்ச்சி நரம்புகளை இந்த அதிகப்படியான சர்க்கரை மழுங்கடித்துவிடுகிறது. இதனால் அங்கு நடைபெற வேண்டிய இயல்பான இரத்த ஓட்ட அளவையும் குறைத்துவிடுகிறது. இந்த மூன்று காரணங்களால் தான் கால் பாதிக்கப்படுகிறது.
சர்க்கரை நோயால் பார்வையிழப்பு, மாரடைப்பு, காலிழப்பு, ஆண்மை குறைவு போன்ற இழப்புகள் உண்டு என்கிறார்களே உண்மையா?
சர்க்கரை நோய் என்பது மெட்டாபாலிக் கம் வாஸ்குலர் டீஸிஸ் என்று மருத்துவத்துறை யினர் குறிப்பிடுகிறார்கள். அதிலும் மைக்ரோ வாஸ்குலர் என்றும், மேக்றோ வாஸ்குலர் என்றும் இதனைப் பிரித்து கூறலாம்.
உடலில் உள்ள சர்க்கரையின் அளவு, கொலஸ்ட்ராலின் அளவு ஆகியவற்றை சுமந்து செல்லும் இரத்த குழாயின் அளவு ஆகியவற்றில் மாறுபாடும், குறைபாடும் இருந்தால் இந்த இழப்புகள் ஏற்படும்.
அத்துடன் கண், இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இரத்த குழாய்கள் செல்வதால் இந்த பாதிப்பு உறுதியாகிறது. ஒரு சிலருக்கு ஒரே தருணத்தில் இம்மூன்று பாதிப்புகளும் வரலாம்.
கண், சிறுநீரகம், கால் ஆகியவற்றைத் தொடர்ந்து இதயம், மூளை போன்றவற்றையும் இந்த சர்க்கரைத் தாக்கத்தொடங்கும்.
குறிப்பாக சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு இதயத்தில் வலி ஏற்பட்டால் கூட தெரியாது. வலி என்பது ஒரு எச்ச ரிக்கை மணி. அதனை கூட சர்க்கரை நோய் தடுத்துவிடும் என்பதால் சர்க் கரை நோய்க்கு நாம் கண்டிப்பாக சிகிச்சை மேற்கொள்ளவேண்டும்.
நீரிழிவிற்காக நாம் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள் பின்விளைவுகளை ஏற்படுத்துபவை என்றும், இதனால் சிறுநீரக பாதிப்புகள் உருவாகின்றன என்றும் ஒரு சாரார் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்களே இதன் உண்மையான பின்னணி என்ன?
சர்க்கரை நோய்க்கான மாத்திரைகளால் சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது என்பது ஏற்றுக் கொள்ளதக்கதல்ல. அதையும் மீறி பாதிக் கப்படுகிறது என்றால் சர்க்கரை நோய்க்கு வழங்கப்படும் மாத்திரைகளின் வீரியத்தை சற்று குறைத்து தர லாம். அதுமட்டுமல்ல சிறுநீரக பாதிப்பு இருக்கிறது என்றால் சில மாத்திரைகளை பயன்படுத்தவே இயலாது. அதனை மருத்துவர்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்.
நீரிழிவால் கால் இழப்பு ஏற்ப டுவதை தடுப்பது எப்படி?
முதலில் சர்க்கரையின்அளவை கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும். ஆகாரத்திற்கு முன், ஆகாரத்திற்கு பின், அதனைத் தொடர்ந்து மூன்று மாதத் தொருக்கொரு முறை எடுக்கப்படும் பரி சோதனை ஆகியவற்றை தொடர்ந்து மேற் கொள்ளவேண்டும்.
இரத்த ஓட்டம் குறைவதால் தான் கால் பாதிக்கப்படுகிறது. இதனால் காலை முகம் போல் பாதுகாக்கவேண்டும். காலை தினமும் நல்ல நீரில் சுத்தம் செய்யவேண்டும். எப்போதும் காலில் காலணிகளை அணிந்து கொண்டு நடகக்வேண்டும்.
காலில் சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டால் கூட அதற்குரிய மருத்துவ சிகிச்சையை தவறாமல் எடுத்துக்கொள்ளவேண்டும். கால் நகங்களை நீக்கும் போதும் மருத்துவர்கள் வழங்கும் அறிவுரையின் படி நடக்க வேண்டும்.
நீரிழிவிற்காக விசேட காலணிகளை அணிந்து கொள்ளவேண்டும் என்று வலியுறுத்துகிறார்களே இதனை உறுதியாக பின்பற்ற வேண்டுமா?
நீரிழிவு நோயால் கால் பாதிக்கப்பட்டிருதால், அதற்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் பாதிப்புக்கு ஏற்றவாறு எம்.சி.ஆர் என்ற காலணிகளை அணிந்துகொள்ளுமாறு பரிந்துரைக்கிறார்கள்.
இதனை உறுதியாக நோயாளிகள் பின்பற்ற வேண்டும். இதனால் காலில் ஏற்படும் கூடுதல் அழுத்தம் தவிர்க்கப்படும். காலில் ஏற்பட்ட இழப்புகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும். அதனையும் கடந்து காலில் புண்கள் ஏற்படாதவாறு இவை பாதுகாக்கும். அத்துடன் புண் இருந்தால் அதனை குணப்படுத்தவும் இத்தகைய காலணிகள் பயன்படும்.
நீரிழிவால் காலில் ஏற்பட்ட புண் களுக்கு சத்திரசிகிச்சை என்பது சரியான தீர்வா?
மருந்துகளால் குணமாக்க முடியாமல் புண்கள் பெரிய அளவில் இருந்தால் அப்பகுதியில் உள்ள தோல்கள் இயல்பை விட கூடுதலாக கடினமாகிவிடும். இதனை சத்திர சிகிச்சை செய்யும் மருத்துவ நிபுணர்கள் அதற்குரிய சத்திர சிகிச்சைகளை செய்து அதனை தூய்மைப்படுத்துவர். குறிப்பாக ட்றாபிக் அல்சர் என்ற புண்களுக்கு சத்திர சிகிச்சை தான் சரியான தீர்வாக அமையும்.
நீரிழிவால் பாதிக்கப்பட்ட காலிலிருந்து சீழ்கள் அகற் றும் போது எதனை கருத்தில் கொள்ளவேண்டும்?
காலில் புண்கள் இருந்தால், உள்பகுதியில் பிளப்ஸ் (சீழ்) இருக்கும். நோயாளிக்கு காய்ச்சல் இருக்கும். சர்க்கரை கட்டுக்குள் இருக்காது. காலில் வீக்கம் இருக்கும். இப்படியிருந்தால் சீழ் எந்தபகுதியில் இருக்கிறது என்பதை முதலில் கண்டறிய வேண்டும்.
அதன் பின்னரே அதனை தகுந்த மருத்துவ முறையின் படி நீக்கவேண்டும். நீக்கிய பின் அங்கு ஏற்படும் புண்களுக்கு உரிய சிகிச்சைகளை மேற்கொள்ளவேண்டும்.
நீரிழிவு நோய்க்கான நவீன சிகிச்சைகள் குறித்து..?
நீரிழிவு நோய்க்கு சிகிச்சைக்கு முன்பெல் லாம் கன்வென்சனல் இன்சுலின் என்ற ஒன்று இருந்தது. ஆனால் தற்போது ஜெனிட்டிக்இன்ஜினியரிங் என்ற துறையின் வளர்ச்சி காரணமாக புதிது புதிதாக இன்சுலின் மருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
வாய் வழியாக சாப்பிடும் மாத்திரைகளிலும்ஏராளமானமாற்றங்கள் வந்துவிட்டன. அதனால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த இயலாது என்ற நிலை தற்போது இல்லை.
ஆனாலும் நீரிழிவு நோயாளிகளின் எண் ணிக்கை குறைந்தபாடில்லை. பரம்பரை, உடலு ழைப்பு குறைவு, உணவு முறை மாற்றம், நகரமயமாதல் போன்ற பல காரணங்கள் இருக்கிறது. இருந்தாலும் சர்க்கரையை கட்டுப் பாட்டுக்குள் வைத்திருப்பது முக்கியமாக கருதப்படுகிறது. மேலதிக சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ளவேண்டிய அலைபேசி எண் 00919841006030 மற்றும் மின்னஞ்சல் முகவரிssllnn2002@yahoo.co.in
டாக்டர் எஸ். லட்சுமி நாராயணன் M.D.,சர்க்கரை நோய் சிகிச்சை நிபுணர்.
சந்திப்பு: புகழ்