அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் காரில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவரை பாதுகாப்பு போலீஸார் ஒருவர் சந்தேகப்பட்டு அருவருப்பான முறையில் சோதனை செய்ததற்காக $25000 நஷ்ட ஈடு கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள புளோரிடோ மாகாணத்தில் போதைப்பொருள் கடத்துவதாக வந்த தகவலை அடுத்து சாலையில் செல்லும் வாகனங்களை பாதுகாப்பு போலீஸார் சோதனை செய்துகொண்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியே காரில் Zoe Brugger என்ற 29 வயது பெண் வந்துகொண்டிருந்தார்.
அவரை காரில் இருந்து இறங்க சொல்லிய போலீஸ் அதிகாரி அவருடைய டீசர்ட்டை தூக்கி பிராவை குலுக்கு காண்பிக்க சொல்லி வற்புறுத்தினார். பிராவுக்குள் போதை மருந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தான் அவ்வாறு செய்யச்சொல்வதாக போலீஸார் வற்புறுத்தியதால் வேறு வழியின்றி Zoe Brugger பிராவை குலுக்கு காண்பித்தார்.
இந்த சம்பவம் அந்த வழியாக சென்ற மற்றொரு நபரால் வீடியோ எடுக்கப்பட்டு இணையத்தில் பதிவு செய்யப்பட்டது. தனக்கு அவமானம் ஏற்படுத்தும் வகையில் போலீஸார் நடுரோட்டில் அநாகரீகமான முறையில் தன்னை சோதனை செய்ததாக Zoe Brugger, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி, பொது இடத்தில் ஒரு பெண்ணை அநாகரீமான முறையில் சோதனை செய்தது போலீஸாரின் குற்றம் என்று தீர்ப்பளித்து அந்த பெண்ணுக்கு $25000 நஷ்ட ஈடு வழங்கும்படி அதிரடியாக தீர்ப்பளித்தார்.
மலேசிய விமான விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிய பிரிட்டன் தம்பதி!
19-07-2014
ஒருசில நிமிடங்கள் மட்டுமே தாமதமாக விமான நிலையத்திற்கு வந்ததால் மலேசிய விமான விபத்தில் இருந்து உயிர் தப்பிய பிரிட்டன் தம்பதி குறித்து ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூர் செல்வதற்காக Schiphol விமான நிலையத்திற்கு…
Barry மற்றும் Izzy Sim என்ற தம்பதிகள் தங்களுடைய ஒருவயது குழந்தையுடன் வந்தனர். அவர்கள் சில நிமிடங்கள் தாமதமாக விமான நிலையத்திற்கு வந்ததால், விமானத்தில் இடமில்லை என்றும், அடுத்து இரண்டு மணிநேரம் கழித்து கிளம்பும் அடுத்த செல்லுமாறு விமான நிலையில் அறிவுறுத்தியுள்ளனர்.
தாங்கள் அவசரமாக செல்லவேண்டும் என்றும் இந்த விமானத்தில் தங்களை பயணம் செய்ய அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டு, விமான அதிகாரிகள் சம்மதிக்கவில்லை.
விமான அதிகாரி சம்மதம் தெரிவிக்காத காரணத்தினாலே அந்த தம்பதிகள் இன்று உயிருடன் இருக்கின்றனர். MH17 கிளம்பிய மூன்று மணிநேரம் கழித்து மற்றொரு விமானத்தில் அவர்கள் செல்வதற்கு விமான நிலையத்தில் காத்திருந்த நேரத்தில்தான் MH17 உக்ரைனில் ஏவுகணையால் வீழ்த்தப்பட்ட தகவல் அவர்களுக்கு தெரிந்தது.
அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தம்பதிகள் சாவின் நுனிவரை சென்று தப்பித்துவிட்டதாக கூறினர். தாங்கள் சரியான நேரத்திற்கு விமான நிலையம் வந்திருந்தால் இந்நேரம் தங்கள் உயிர் பிரிந்திருக்கும் என்றும், கடவுள்தான் எங்களை விமான நிலைய அதிகாரி வடிவில் காப்பாற்றியுள்ளார் என்றும் Izzy Sim அவர்கள் தெரிவித்தார்.