வியாழக்கிழமை Denguin மற்றும் Lescar (Pyrénées-Atlantiques) பகுதிகளிற்கு நடுவில் ஒரு TGV யும் ஒரு TER ம் விபத்திற்குள்ளாகி உள்ளது. இதில் நாற்பது பேர் காமடைய நால்வர் உயிர் ஆபத்திலுள்ளது. இதில் ஒரு குழந்தையும் ஒரு 10 வயதுச் சிறுவனும் அடங்குவார்கள். தொடருந்துகளிற்கான சமிக்ஞை அமைப்புப் பழுதடைந்ததை…
அடுத்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் இந்தப் பகுதியின் சமிக்ஞை அமைப்புக்கள் முழுவதும் மீளாய்வு செய்யப்படுவதாகவும் பிரான்சின் போக்குவரத்து அமைச்சர் Frédéric Cuvillier தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தப்பகுதியில் நடாத்தப்பட்டு வரும் திருத்த வேலைகளிற்கும் எந்தத் தொடர்பும் உள்ளதா இல்லையா என்பது இன்னமும் ஆராயப்படவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
திருத்தவேலைகளால் அந்தப் பகுதியில் மிகவும் மெதுவாகவே மணிக்கு 30கிலோமீற்றர் வேகத்தில் வந்து கொண்டிருந்த TGV யினைப் பின்பக்கதால் வந்த TER மோதி உள்ளது.
இந்த விபத்து நேற்று 17h30 இற்கு ஏற்பட்டுள்ளது. Tarbes மற்றும் PAU பகுதிகளை ஒரே வழித்தடத்தில் இணைக்கும் இந்த இரண்டு தொடருந்துகளுமே விபத்திற்குள்ளாகி உள்ளன. TGV யின் பின்னால் வந்த TER மிக வேகமாகப் பின்பக்கத்தால் மோதியுள்ளது.
இந்தப் பகுதியின் சமிக்ஞை வேலை செய்யாமல் விட்டவுடன் அங்கு சிவப்பு சமிக்ஞைகள் எரியத் தொடங்கி உள்ளன. சிவப்பு விளக்கு எச்சரிக்கை எரியத் தொடங்கியவுடன் குறிக்கப்பட்ட மிகவும் குறைந்த மணிக்கு 30 கிலோமீற்றர் வேகத்திற்குத் தொடருந்துகள் வரவேண்டும் என்பது சட்டம்.
இதனை TGV முறையாகச் செய்துள்ளது. ஆனால் பின்னால் வந்த TER இந்தச் சிவப்பு விளக்கு எச்சரிக்கையை மதிக்காது அதிக வேகத்தில் வந்தமையாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இது மிகவும் அரிதான ஒரு விபத்து. இங்கு தொழில்நுட்பம் தவறிழைத்ததா அல்லது ஒரு தனிமனிதத் தவறா என்பது ஆராயப்படவேண்டியது எனப் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார். ‘கடும் வெப்பம் காரணமாகச் சமிக்ஞையில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக நாம் மெதுவாகவே செல்ல வேண்டி உள்ளது என TGV யினுள் அறிவித்தனர்.
அந்த நேரத்தில் அந்தப் பகுதியில் 35°C வெப்பநிலை இருந்தது. அப்படி இருந்தபோது மிகவும் ஒரு பெரிய அதிர்வு ஒன்று தொடருந்தினுள் ஏற்பட்டது அருகிலிருந்தவர் தலையிலிருந்து இரத்தம் வழிந்தது.’ எனப் பயணி ஒருவர் தனது அச்சம் மிக்க அனுபவத்தைத் தெரிவித்தார்.