பொட்டம்மான் வைச்ச பொட்டைப்பற்றிப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சொனன கதையையும் இஞ்ச ஒருக்கால் சொல்லவேணும். ‘அப்ப (1977 இல) தமிழீழத்தைப் பெற்றுத் தருவினம் எங்கட தமிழ்த்தலைவர்கள் எண்ட நம்பிக்கையிலயும் அவை சொன்ன சொல்லுக்கு மதிப்புக் குடுத்துமே தமிழ் இளைஞர்கள் தங்கட ரத்தத்தால இவைக்குப் பொட்டு வைச்சவை.
அப்பிடி வீரத்திலகத்தை வெற்றிப் பெருமிதத்தோட வாங்கித் தேர்தலில வெற்றி வாகை சூடிப்போட்டு, ‘அரசாங்கம் ஏமாத்துது. ஒண்டையும் செய்யிறதுக்கு அரசாங்கம் விடுகுதில்லை’ எண்ட நொட்டிச் சாட்டுச் சொல்லிறதுக்கு ஒரு தலைமை தமிழர்களுக்குத் தேவையில்லை.
அப்பிடிச் சொல்லிக் கொண்டே பாராளுமன்றச் சம்பளத்தை எடுக்கிறதுக்கும் ஊர் சுத்திக்கொண்டிருக்கிறதுக்கும் நாங்கள் ( தமிழ் இளைஞர்கள்) ஒண்டும் இளிச்சவாயர்கள் இல்லை. அதாலதான் நாங்கள் மற்றப்பொட்டை (மண்டையில் போடுறது) வைச்சனாங்கள்.
அதையும் யோகேஸ்வரனுக்கும் அமிர்தலிங்கத்துக்கும் ரத்தப்பொட்டு வைச்ச பொட்டுவைக்கொண்டே இந்தப் பொட்டை வைச்சனாங்கள்.
தமிழ் மக்களை ஏமாத்திற அரசாங்கத்தை எப்பி எதிர்த்தமோ அப்பிடித்தான் தமிழ்மக்களை ஏமாற்றின தமிழ்த்தலைவர்களையும் நாங்கள் எதிர்க்கோணும்’ எண்டு பிரபாகரன் அமிர்தலிங்கத்தையும் யோகேஸ்வரனையும் போட்டுத்தள்ளினதுக்குப் பிறகு தன்ரை சக உறுப்பினர்களுக்குச் சொல்லியிருக்கிறார்.
அப்பிடியெண்டால்…….?
வரலாறு மீண்டும் ஒருக்கால் திரும்பி வரத்தான் போகுதோ…!
இதைத்தான் ‘யானை படுத்திட்டுது. இனி எழ மாட்டாது’ எண்டு பூடகமாக ‘புலி படுத்திட்டுது. இனி எழமாட்டுது’ எண்டு தன்ரை வாயாலயே சொல்லியிருக்கிறாரோ….!
பிரபாபரனின்ரை புலி படுத்தாலும் இப்ப கூட்டமைப்புக்கு ஆதரவாக – கூட்டமைப்புக்காரன் சொல்லிறதையெல்லாம் அப்பிடியே பச்சையாக நம்பிக்கொண்டிருக்கிற பெடியள், நிச்சயமாக நாளைக்குச் சும்மா படுத்திருக்கப்போறதில்லை.
தாங்கள் நம்பியவர்களே தங்களை ஏமாத்திக்கொண்டிருக்கினம் எண்ட உண்மை கசப்பாகத் தெரியத் தொடங்க, அத்தினை கோவமும் இவையில (கூட்டமைப்புக்காரருக்கு மேல) தான் வரும்.
எடுத்ததுக்கெல்லாம் அரசாங்கத்தைக் குறைசொல்லி, குற்றம்சாட்டிப்போட்டுத் தாங்கள் மட்டும் சலுகைகளைத் தாராளமாக அனுபவிக்கிற இந்தப் போக்கிரித்தனத்தைப் பெடியள் ஒருநாளும் பொறுத்துக்கொள்ள மாட்டாங்கள்.
இப்பவே அவனவன் கூட்டமைப்புக்காறற்றை போலித்தனங்களைப் பற்றிச் சந்தியிலயும் தெருவிலயும் நிண்டு கதைக்கத்தொடங்கீட்டான்கள்.
அரசாங்கத்தைக் குற்றஞ்சாட்டிறது… இல்லாட்டிக்கு சர்வதேச சமூகத்தைத் துணைக்கு கூப்பிடுறது… இதோட இலங்கைக்கு ஆர் வருகினம் எண்டு பார்த்துக்கொண்டிருந்து…. வாற போறவையிட்ட பிலாக்கணம் வைக்கிறது…
இதுதான் தமிழ்ச் சனத்துக்குச் செய்யிற அரசியல் தொண்டோ….
முப்பது முப்பத்தைஞ்சு வருசமாகப் போரில கிடந்து துவண்ட சனங்களுக்கு எவ்வளவு காரியங்கள் செய்யக் கிடக்கு….
அரசாங்கம் றோட்டைப்போட்டுது, குளங்களைத் திருத்திச்சிது.
கட்டிடங்களைக் கட்டிக்குடுத்துது…. பள்ளிக்கூடங்கள், ஆஸ்பத்திரிகள் எல்லாத்தையும் ஒழுங்காக இயங்க வைக்கிது. மின்சாரத்தைக் குடுத்திருக்கு… சனங்களுக்கு வீடுகளைக் கூடக் கட்டிக் குடுத்திருக்கு….
இதுக்கு மேல இனிச் செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டிய பொறுப்பும் கடமையும் இவைக்கு ( தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்காரருக்கு)த் தானே இருக்கு.
இவை மாகாணசபையில ஆயிரத்தெட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றி, அதைப்பற்றிப் பேப்பரில போட்டுச் சனங்களுக்குப் பேய்க்காட்டுகினம்.
இந்தத் தீர்மானங்கள் எல்லாம் வெறும் ஏட்டுச் சுலைக்காய்தான் எண்டதைச் சனங்கள் இப்ப விளங்கத் தொடங்கீட்டினம்.
சனங்களுக்கு விசயம் விளங்கத் தொடங்கினால்….
சுத்துமாத்துக்காரருக்கு வில்லங்கம்தான்.
படுத்திருக்கிற இந்த யானைக் கூட்டம் (சனக்கூட்டம்) விழித்தெழும்பினால்….?
காதில பூவைக்கிற கூட்டமைப்புக் கூட்டத்துக்கு ஆப்புத்தான். ஆபத்துத்தான்.
வெள்ளி திசையும் கொஞ்சக்காலந்தான் தம்பி. இப்ப இவைக்கு (கூட்டமைப்புக்காரருக்கு) அந்த வெள்ளிதிசை அடிக்கலாம்.
ஆனால், இது கனகாலத்துக்கில்லை. பிறகு ஏழரைச்சனியன்…. பிடிக்கப்போகுது.
அப்பதான் ‘பொட்டம்மான் என்ற பொட்டு வைச்ச பொட்டு’வைப்பற்றித் தெரியும்.
வரலாறு ஒண்டும் பிழையாகக் கணக்குப் போடுறதில்லை…
-வடபுலத்தான்
பொட்டு என்ற பொட்டம்மான் வைச்ச பொட்டு – பகுதி-02