யாழில் மனைவியைப் பிரிந்து வந்த 38 வயது வெளிநாட்டு மாப்பிளை – 19 வயதுப் பெண்ணைத் திருமணம்
யாழ் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் 19 வயதுப் பெண்ணைத் திருமணம் முடித்துள்ளார் சுவிஸ் நாட்டில் இருந்த வந்த 38 வயதாக 3 பிள்ளைகளின் தந்தை.
பல வருடங்களுக்கு முன்னர் சுவிஸ் சென்ற குறித்த நபர் தனது உறவுக்காரப் பெண் ஒருவரைத் திருமணம் செய்து சுவிஸ் அழைத்துச் சென்றுள்ளார். இவர்களுக்கு 3 குழந்தைகளும் உள்ளதாகத் தெரியவருகின்றது.
இந் நிலையில் சில மாதங்களாக இருவரும் குடும்பத்தகராறு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இதனையடுத்து கடந்த மாதம் யாழ்ப்பாணம் வந்த குறித்த குடும்பஸ்தர் தொலைபேசிக் கடை ஒன்றில் வேலைக்கு நின்ற 19 வயது யுவதி ஒருவரை தனது பேச்சில் மயக்கி காதலிப்பதாகத் தெரிவித்து ஏராளமான பணத்தையும் அந்த யுவதிக்கு செலவு செய்துள்ளார்.
அதன் பின்னர் குறித்த யுவதியின் வீட்டுக்குச் சென்ற நபர் யுவதியின் அனுசரனையுடன் பெற்றோரைச் சம்மதிக்க வைத்து பதிவுத் திருமணம் செய்துள்ளார்.
இவர் தான் வெளிநாட்டில் திருமணம் முடிவத்தவர் என்றும் தனது மனைவி தன்னை விட்டு இன்னொருவருடன் ஓடிவிட்டதாகவும் தெரிவித்தே யுவதியையும் பெற்றோரையும் ஏமாற்றி பதிவுத் திருமணம் முடித்துள்ளார்.
இவரது இந்தத் திருமணத்தைக் கேள்வியுற்ற மனைவி நேற்று இரவு தனது 3 வயதுக் கடைசிப் பிள்ளையுடன் கட்டுநாயக்காவில் இறங்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
சொந்த மனைவி இருக்கத்தக்கதாக விவாகரத்துப் பெறாது பதிவுத் திருமணம் செய்த குடும்பஸ்தர் சில வேளைகளில் கம்பி எண்ணவும் கூடும்.
பதிவுத் திருமணம் முடித்து ஒன்றாயிருக்கும் யுவதியின் வாழ்க்கையும் இனி கேள்விக்குறியே