கொழும்பில் இ்ருந்து வரும் தனது நீண்ட நாள் காதலனைக் காண்பதற்காக காத்திருக்கும் காரிகை போல் கோச்சியின் வருகைக்காகக் காத்திருக்கின்றது யாழ்ப்பாணம்.
யாழ் புகையிரத நிலைய புனரமைப்பு பணிகள் துரிதமாக இடம்பெற்று வரும் நிலையில் அங்கு பொருத்தப்பட்டு வரும் சமிக்ஜை விளக்குகள் (Signal Lights) தற்போது சோதனையிடும் பணிகள் ஆரம்பித்துள்ளது. ஒவ்வொரு பகுதிகளாக இப்பணி இடம்பெற்று வருகின்றதை காணக்கூடியதாகவுள்ளது.
இதேவேளை எதிர்வரும் செப்ரெம்பர் 15ம் திகதி முதல் யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவையை சேவையை ஆரம்பிக்க இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் குமாரவெல்கம தெரிவித்துள்ளார்.
செப்ரெம்பர் 15ம் திகதி பரீட்சார்த்தமாக கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரை ரயில் சேவை மேற்கொள்ள இருப்பதாக குறிப்பிட்டார்.
இப்புகையிரத சேவையைினை உத்தியோகபுர்வமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் ஆரம்பிக்கப்பட்ட பின் பொதுமக்களுக்கு யாழ்ப்பாணம் செல்ல அவகாசம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை யாழ்தேவி இந்த வருட இறுதியில் காங்கேசன்துறை வரை சேவையில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.