Site icon ilakkiyainfo

மனைவியை வெட்டிக் கொலைசெய்த கணவன் தூக்கிடடுத் தற்கொலை! வவுனியாவில் சம்பவம்

வவுனியா, மாகாரம்பைக் குளத்தைச் சேர்ந்த நபரொருவர் தனது மனைவியை கோடரியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துள்ளார்.

செ.ராசேந்திரன் (வயது-45) என்ற நபரே தனது மனைவியான ரா.அமுதா (வயது-38) என்பவரை வெட்டிப் படுகொலை செய்துள்ளார்.

நேற்று இரவு 11.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மனைவியை வெட்டிப் படுகொலை செய்த நபர், தனது மாமி மற்றும் மாமாவையும் கோடரியால் தாக்கியுள்ளார். அதன் பின்னரே குறித்த நபர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வே.ராமச்சந்திரன் (வயது-65), இவரது மனைவியான ரா.கிருஸ்ணவேணி (வயது-55) ஆகிய இருவரும் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குடும்பத்தகராரே இதற்கு காரணமென தெரிவித்த வவுனியா பொலிஸார், மேலதிக விசாரணைகளையும் நடத்தி வருகின்றனர்.

Exit mobile version