இஸ்லாமிய தீவிரவாதிகளால் பிடிக்கப்பட்ட சிரியாவின் 250 ராணுவ வீரர்கள் வரிசையாக நிற்கவைத்து சுட்டுக்கொல்லப்பட்ட அதிர்ச்சி வீடியோ ஒன்று நேற்று யூடியூப் இணையதளத்தில் வெளியானதால் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
சிரியா நாட்டிற்கு எதிராக அங்குள்ள இஸ்லாமிய அமைப்பு ஒன்று கடந்த சில மாதங்களாக போராடி வருகிறது. இந்நிலையில் பல்வேறு கட்டங்களில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 250 சிரியா ராணுவ வீரர்களை உள்ளாடை உடையுடன் ஒரு பாலைவன பகுதியில் வரிசையாக உட்கார வைத்து அவர்கள் சுட்டுக்கொல்லப்படும் அதிர்ச்சி வீடியோ ஒன்று நேற்று Reuters என்ற இணையதளம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து Raqqa என்ற இஸ்லாமிய அமைப்பு ஒன்று அந்த வீடியோவில் உள்ள 250 சிரியா ராணுவ வீரர்களின் கொலைக்கு பொறுப்பு ஏற்றுள்ளது. இதனால் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஐ.நா உள்பட உலகின் பல நாடுகள் இந்த சம்பவத்திர்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.