கோழிக்குஞ்சு தாறன் வா என அழைத்து குடும்பப் பெண் ஒருவரை 3 நாட்கள் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் காரைநகா்ப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
காரைநகா் ஆதிகோவிலடியைச் சோ்ந்த குடும்பப் பெண்ணான 32 வயதுடைய மகேந்திரராஜா மிதுனா என்ற பெண்ணுக்கே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கோழிக்குஞ்சு தருவதாக குறித்த பெண்ணை இன்னொரு பெண் அழைத்துச் சென்றே கட்டிவைத்து 3 நாட்களாக தொடா்ச்சியான தாக்குதலை நடாத்தியுள்ளாா்.
மயங்கிய நிலையில் வட்டுக் கோட்டைப் பகுதியில் வீதியோரத்தில் கிடந்த பெண்ணை பொதுமக்கள் வைத்தியசாலைக்குச் சோ்த்த போது இவருக்கு நடந்த செயல் தெரியவந்துள்ளது.
குறித்த பெண் எதற்காகத் தாக்கப்பட்டாா்? தாக்கிய பெண் யாா் என்பது தொடா்பாக பொலிசாா் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனா்.
கிளிநொச்சியில் வீட்டில் தொங்கிய நிலையில் யுவதியின் சடலம் மீட்பு !
06-09-2014
கிளிநொச்சி வட்டக்கச்சியில் யுவதி ஒருவரின் சடலம் வீட்டின் உள்ளே துாக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. அருளம்பலம் லோகினி என்பவரே இ்வ்வாறு துாக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டவராவாா்.
நேற்று மாலை 2 மணியளவில் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த தாயாா் வீ்ட்டில் இருந்த மகளைத் தேடியதாகவும் மகள் தனது அறையில் துாக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைப் பாா்த்து அதிா்ச்சியுற்று அயலவா்களின் உதவியுடன் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு யுவதியைக் கொண்டு சென்றதாகவும் தெரியவருகின்றது.
அங்கு யுவதியைப் பரிசோதித்த வைத்தியா்கள் யுவதி இறந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனா். குறித்த யுவதிக்கு புற்றுநோய் இருந்துள்ளது. அதன் வேதனையில் துாக்கில் தொங்கியிருக்கலாம் என தெரியவருகின்றது.