வரலாற்றுப் புகழ்மிக்க தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று காலை 7.30 மணியளவில் வசந்த மண்டப பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமாகி வெகு சிறப்பாக நடைபெற்றது.
கடந்த மாதம் 27 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 9 தினங்களும் வெகு விமர்சையாக திருவிழாக்கள் இடம்பெற்று வந்தன.
வடமாகாணத்தின் பல பிரதேசங்களில் இருந்து வருகைதந்துள்ள பல்லாயிரக்கணக்கான பக்த்தர்கள் சூழ்ந்திருக்க பத்தாவது நாளான இன்று துர்க்கையம்மன் தேரேறி மக்களுக்கு அருள்பாலித்துள்ளார்.
தேர்த் திருவிழாவில் அம்மனின் அருள் வேண்டி ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்கப்பிரதட்சணம் செய்தும், கற்பூரச் சட்டி எடுத்தும் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.