நெடுந்தீவிலிருந்து 6 குதிரைகளை வனவள ஜீவராசிகள் திணைக்களத்தின் அனுசரணையுடன் கடற்படையினர் கடத்திச் சென்று இராணுவத்தினால் யாழ்ப்பாணத்தில் நடத்தப்படுகின்ற உல்லாச விடுதிகளில் தென்னிலங்கையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்காக ஒப்படைத்துள்ளனர் எனவும் இச்செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்து எனவும் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார்.
இக்குதிரைகள் கடத்தப்பட்டமை தொடர்பாக வடமாகாண விவசாய அமைச்சரின் கவனத்திற்குத் தெரியப்படுத்தியுள்ளோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
நெடுந்திவிற்கு போர்த்துக்கீசர், ஒல்லாந் தர், ஆங்கிலேயர் காலத்தில் குதிரைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இக் குதிரைகள் சுமார் 600 வருடங்களாக நெடுந்தீவில் அங்குள்ள தரவை நிலங்களில் இருக்கின்ற புற்களை உணவாக்கி நீர் நிலைகளில் நீரைப் பருகி வாழ்கின்றன.
இக்குதிரைகள் பெருகியுள்ள நிலையில் தற்பொழுது 503 குதிரைகள் நெடுந்தீவில் உள்ளதாக மதிப்பிட ப்பட்டுள்ளது. இந்தக் குதிரைகளைப் பராமரிப்பதற்கு ஒல்லாந்து நாட்டின் தூதுவர் அண்மையில் இப் பிரதேச செயலகத்திற்கு நிதியுதவி அளித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அப்பகுதியில் கடமையாற்றிய பொலிஸாரின் உதவியுடன் குதிரை ஒன்று கடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தது. ஆனால் மக்களின் எதிர்ப்பினால் அக்குதிரை நெடுந்தீவிற்கு மீண்டும் கொண்டுசென்று விடப்பட்டிருந்தது.
இது இவ்வாறிருக்க கடந்த சில நாட்களாக கடற்படையினர் நெடுந்தீவிலிருந்து குதிரைகளை சீகாட் என்ற படகில் கடத்தி வருவதாக மக்கள் என்னிடம் தெரியப்படு த்தினர். வனவள ஜீவராசிகள் திணைக்கள த்தின் அனுமதியுடன் அங்கிருந்து முதற்கட்டத்தில் 4 குதிரைகளும் இரண்டாவது கட்டமாக 2 குதிரைகளும் கடத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இவ்வாறு கடத்தப்படுகின்ற குதிரைகள் யாழிலுள்ள இராணுவத்தினுடைய உல்லாச விடுதிகளில் காட்சிக்காக வைத்திருப்பதுடன் தென்பகுதிச் சுற்றுலாப் பயணிகள் இக்குதிரைகளில் சவாரி செய்தும் வருகின்றமையும் தெரியவருகிறது.
குறிப்பாக இராணுவத்தினுடைய தல் சவின விடுதி, பலாலி உல்லாச விடுதிகளில் இக் குதிரைகளை வைத்திருக்கின்றனர். நெடுந்தீவிலுள்ள குதிரைகளைப் பராமரிப்பதற்கு மட்டுமே வனவள ஜீவராசிகள் திணைக்களத்திற்கு அனுமதியுண்டு. ஆனால் அக்குதிரைகளை கடற்படையினர் கடத்துவதற்கு குறித்த திணைக்கள அதிகாரிகளும் உடந்தையாகச் செயற்பட்டுள்ளனர்.
எனவே இக்குதிரைகளைப் பாதுகாக்கும் நோக்குடன் நாம் வடமாகாண விவசாய அமைச்சரிடம் முறையிட்டுள்ளோம். இத ற்கமைய இக்குதிரைகளைப் பார்வையி டுவதற்காக எதிர்வரும் வரும் வியாழக்கி ழமை நாம் நெடுந்தீவிற்குச் செல்லவுள் ளோம் என்றார்.
இதேவேளை அண்மையில் நெடுந்தீ விலுள்ள குதிரைகளின் இரத்த மாதிரிகள் பெறப்பட்டு அவை குதிரை இனத்தினைச் சேர்ந்தவைதான் என தொடர்புடையவர்கள் அறிக்கையிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
சடலத்துடன் பொதுமக்கள் இராணுவ முகாமிற்கு முன் ஆர்ப்பாட்டம்
07-09-20104
இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள வீட்டின் உரிமையாளரது இறுதிக்கிரியைகளை நடத்த அனுமதிக்குமாறு கோரி சடலத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை பொலிஸாரும் இராணுவத்தினரும் அடித்து விரட்டியுள்ளனர்.
இச்சம்பவம் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு நகரில் நேற்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாகவுள்ள தனியார் ஒருவரின் ஆதனத்தினையும் அவர் குடியிருந்த வீட்டையும் இராணுவத்தினர் கையகப்படுத்தி முகாம் அமைத்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த வீட்டின் உரிமையாளரான க.சிங்கரத்தினம் என்ற முதியவர் அந்த வீட்டினையும் ஆதனத்தினையும் தம்மிடம் ஒப்படைக்குமாறு இராணுவத்தினரிடம் தொடர்ச்சியாக கோரியிருக்கைவிடுத்து வந்துள்ளார்.
ஆனால் இராணுவம் அந்த வீட்டினையும் அவருடைய ஆதனத்தினையும் வழங்க மறுத்துள்ளது. இதனால் குறித்த வயோதிபர் தனது குடும்பத்தினருடன் வாடகை வீடொன்றில் குடியிருந்துள்ளார்.
இந்நிலையில் அந்த வயோதிபர் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார். அவருடைய சடலத்தினையாவது குறித்த வீட்டில் வைத்து இறுதிக்கிரியைகளை மேற்கொள்ள அனுமதிக்குமாறு இராணுவத்தினரிடம் உறவினர்கள் கோரியுள்ளனர். ஆனால் அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பிரதேச மக்கள் நேற்று பிற்பகல் உயிரிழந்த சிங்கரத்தினத்தின் சடலத்தினை இராணுவமுகாம் அமைக்கப்பட்டுள்ள அவருடைய வீட்டிற்கு முன்பாக வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்பொழுது அவ்விடத்திற்கு வந்த இராணுவத்தினரும் பொலிஸாரும் சடலத்தையும் தூக்கிக்கொண்டு கலைந்து செல்லுமாறு ஆர்ப்பாட்டக்காரருக்குக் கட்டளையிட்டுள்ளனர். ஆனால் அவ்வாறு கலைந்து செல்ல முடியாது என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் பொழுது பொலிஸார் அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒருவருக்கு கையால் அடித்து கலைந்து செல்லுமாறு வற்புறுத்தியுள்ளனர். இதனால் அச்சமடைந்த அம்மக்கள் அவ்விடத்திலிருந்து சடலத்தை தூக்கிக்கொண்டு நகர்ந்து சென்றுள்ளனர்.
உயிரிழந்த முதியவரின் சடலம் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது. இறுதி யுத்தத்தின் பின்னர் புதுக்குடியிருப்புப் பகுதியில் பலருடைய வீடுகளை இராணுவத்தினர் கையகப்படுத்தி முகாம் அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.