மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவில் புதன்கிழமையன்று (10) 8 வயது சிறுமியொருவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி படுகொலை செய்த சம்பவத்தோடு தொடர்புடைய சந்தேகநபரை இன்று வியாழக்கிழமை (11) கைது செய்ததாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று புதன்கிழமை (10) மாலை மேற்படி சிறுமியின் தந்தையினது பலசரக்கு கடைக்கு சென்றுள்ள சந்தேக நபர் மழை பெய்வதால் குடையொன்றை கேட்டுள்ளார்.
இவ்வாறு இந்நபருடன் சென்ற சிறுமி வீடு வந்து சேராததால் சிறுமியின் குடும்பத்தினரும் அயலவர்களும் சிறுமியை தேடியுள்ளனர். சிறுமியை காணவில்லையென பொலிஸாருக்கும் அறிவித்துள்ளனர்.
உடனடியாக சிறுமி காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்படும் போது உயிரிழந்துள்ளார்.
சிறுமியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி கொலை செய்திருக்கலாமென சந்தேகிப்பதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர் காத்தான்குடியை பிறப்பிடமாக கொண்டவர் என்றும் மூன்று பிள்ளைகளின் தந்தையெனவும் காத்தான்குடி பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கடத்தப்பட்ட சிறுமியை மீட்பதற்கு ஒன்பது பொலிஸ் நிலையங்களை உள்ளடக்கி விசாரணை கொழும்பிலிருந்து சி.ஐ.டி.விரைவு; மூன்று சம்பவங்கள் குறித்தும் விசேட அவதானம்
11-09-2014
குருணாகல், வெல்லவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கனேவத்த, அம்பகொலவெவ -பன்னவ சந்திக்கு அருகில் தனது பெற்றோருடன் வசித்து வந்த
அத்துடன் விசாரணை மேற்கொள்ளும் பிரதான பணி வெல்லவ பொலிஸாரிடமிருந்து கொழும்பிலிருந்து சென்ற விஷேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் குழுவினருக்கு பாரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண கேசரிக்கு குறிப்பிட்டார்.
இந் நிலையில் நேற்று பிற்பகல் வரையில் சிறுமி தொடர்பில் சரியான தகவல் ஒன்றும் கிடைத்திராத நிலையில் சிறுமியின் பெற்றோர் உள்ளிட்ட 10 பேரிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் கேசரியிம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண சுட்டிக்காட்டினார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் பிரதான விசாரணையில் க.டந்த 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குருணாகல் பொலிஸ் வலையத்தின் பொல்கஹவெல பொலிஸ் பிரிவில் உள்ள உடவல தேவாலய வீதியில் 6வயது, நாலரை வயது சிறுமிகள் இருவரை கடத்தும் முயற்சியொன்று தோல்வியில் முடிவடைந்திருப்பதாகவும் அந்த சம்பவத்துக்கும் வெல்லவ சம்பவத்துக்கும் தொடர்புகள் உள்ளதா என புலனாய்வுப் பிரிவினர் ஆராய்ந்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கடந்த ஞாயிறன்று இரவு பொல்கஹவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடவல தேவாலய வீதியில் உள்ள கடற்படை வீரர் ஒருவரின் வீட்டுக்கு சென்றிருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரது நாலரை வயது பெண் பிள்ளையை கத்த்த முற்பட்டு அந்த வீட்டின் கதவருகே ஒழிந்து இருந்துள்ளார்.
இந் நிலையில் அந்த நபரை கடற்படை வீரரின் மனைவி கண்டு சத்தமிடவே அங்கிருந்து அந்த நபர் தப்பிச் சென்றுள்ளார். இதனை தொடர்ந்து அன்றைய தினமே அப்பகுதியில் உள்ள மற்றொரு வீட்டுக்கு சென்றுள்ள நபர் அங்கு பெற்றோருடன் உறங்கிக்கொண்டிருந்த 6 வயது பெண் பிள்ளையை கடத்திச் செறுள்ளார்.
அந்த பிள்ளை சத்தமிட்டதில் வீட்டில் இருந்து சுமார் 400 மீற்றர் தொலைவில் குறித்த சிறுவனை கைவிட்டு சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார்.
இது தொடர்பில் பொல்கஹவெல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவரும் நிலையில் சந்தேக நபருடையது என சந்தேகிக்கப்படும் பாதணி ஜோடி ஒன்றை மீட்டுள்ளனர்.
இந் நிலையொலேயே வெல்லவ சம்பவம் இடம்பெற்றுள்ளது. எவ்வாறாயினும் பொல்கஹவெல சம்பவத்துக்கு மேலதிகமாக மேலும் இரு விடயங்கள் குறித்தும் விசாரணைக் குழுவினரின் கவனம் திரும்பியுள்ளதாக விசாரணைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் கேசரிக்கு குறிப்பிட்டார்.
கடத்தப்பட்டுள்ள நாலரை வயது சிறுமியின் தாய் திருஷ்டி ஒன்றினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவருக்கு சிகிச்சை வழங்க நாவலப்பிட்டி பிரதேசத்திலிருந்து மந்திரவாதி ஒருவர் அடிக்கடி வருகை தந்து சென்றதாகவும் அவர் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
அத்துடன் கடத்தல் சம்பவம் இடம்பெற்ற தினத்தின் பகல் பொழுதில் புதிதாக நபர் ஒருவர் வீட்டுக்கு வந்ததாகவும் அவர் நபர் ஒருவரின் பெயரை குறிப்பிட்டு அவரை தெரியுமா? என விசாரித்ததாகவும் அவ்வாறான ஒருவர் தொடர்பில் தமக்கு தெரியாது என தான் கூறியதாகவும் கடத்தப்பட்ட சிறுமியின் தந்தையின் வாக்கு மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த விடயம் குறித்து சிறுமியின் தந்தை வழங்கியுள்ள வாக்கு மூலத்தில் வந்த நபர் தன்னை கிரிபாய பிரதேசத்தவர் என அடியாளப்படுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் குறித்த நபரைகண்டறியும் முயற்சியிலும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
இந் நிலையில் கடத்தலில் ஈடுபட்ட நபர் ஏதேனும் மானசீக நோயினால் பாதிக்கப்பட்டவராக இருப்பாரோ என எண்ணும் பொலிஸார் கடத்தலுக்கான காரணத்தை அறியவும் சிறுமியை மீட்கவும் விஷேட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வடமேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் அபேசிரி குணவர்தன, குருணாகல் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்சரத் குமார ஆகியோரின் நேரடி கண்காணிப்பின் கீழ் குருணாகல் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜயந்த சமரகோன், உதவி பொலிஸ் அத்தியட்சர் ஏ.டப்ளியூ சில்வா ஆகியோரின் ஆலோசனையின் கீழ் வெல்லவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அனுர குணவர்தன தலைமையிலும், ரம்படகல, மஹவ, பொல்கஹவெல, குருணாகல், நாரம்மல, வாரியபொல , கொக்கரெல்ல உள்ளிட்ட பொலிஸ் நிலையங்கள் ஊடாக விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
அத்துடன் விசாரணைகளுக்காக குருணாகல் பொலிஸ் நிலையத்தின் மோப்ப நாய் ஒன்றும் பயன்படுத்தப்படும் நிலையில் தடயவியல் பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் லஹிரு கசுன் தலைமையிலான குழுவினர் தடய ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர்.
சிறுமியை கடத்த பொலித்தீன், நுளம்பு வலை என்பவற்றை வெட்ட பயன்படுத்திய சிவப்பு நிற கைப்பிடியை கொண்ட கத்தரிக்கோலை மீட்டுள்ள பொலிஸார் சிறுமியின் தாயின் இரவு நேர உடை ஒன்று வெட்டப்பட்ட நிலையில் இருந்ததாக குறிப்பிட்டனர்.
அந்த இரவு நேர உடை கடத்தப்பட்ட சிறுமி நித்திரை செய்த கட்டிலருகே ஜன்னலில் போடப்பட்டிருந்ததாகவும் அதனையே கடத்தல் காரர் வெட்டி இருக்க வேண்டும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவ தினமான நேற்று முன் தினம் அதிகாலை 2.00 மணிக்கே சிறுமி காணாமல் போனமை குறித்து பெற்றோர் அறிந்துள்ளதுடன் அன்றைய தினம் இரவு 9.30 மணியளவிலேயே தாம் நித்திரைக்கு சென்றிருந்ததாக பெற்ரோர் குறிப்பிட்டுள்ளனர்.
வீட்டின் படுக்கை அறை சுவர் கறுப்பு நிற பொலித்தீனினால் மறைக்கப்பட்டிருந்த நிலையில் அதனையும் கட்டிலுக்கு போடப்பட்டிருந்த நுளம்பு வலையினையும் வெட்டியே சிறுமி கடத்தப்பட்டிருந்தாள்.
இந் நிலையில் சிறுமி பமாரா கேசனி விஜேகோன் கடத்தப்பட்டு 42 மணித்தியாலங்கள் கடந்த நிலையிலும் அவர் கண்டு பிடிக்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.