உலகம் அழிவடைவது தொடர்பில் சாத்தானை திருப்திபடுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட மதச்சடங்கொன்றின் போது, தனது 5 வயது மகனின் கண்களை கரண்டியொன்றால் தோண்டியெடுத்த தாயொருவருக்கும் அவரது 5 உறவினர்களுக்கும் மெக்ஸிக்கோ நீதிமன்றமொன்று தலா 30 வருட சிறைத்தண்டை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
நெஸஹுவல்கொயொடல் நகரைச் சேர்ந்த பெர்னாண்டோ கலெப் அல்வரடோ றியொஸ் என்ற சிறுவனே தனது சொந்த தாயாரான மரியோடல் கார்மென் கார்சியா றியொஸ்ஸால் கண்களை இழந்துள்ளான்.
சிறுவனின் கண்களை தோண்டி எடுப்பதற்கு அவனது தாய்க்கு அவனது இரு மாமன்மார், தாத்தா மற்றும் பாட்டி ஆகியோர் உதவியுள்ளனர்.
இச்சடங்கானது சாத்தானை தமக்கு நெருக்கமாக்கி தம்மை பாரிய பூமியதிர்ச்சியொன்றிலிருந்து பாதுகாக்கும் என சிறுவனின் குடும்பத்தினர் நம்பியதாக கூறப்படுகின்றது.
சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அயலவர்கள், சிறுவனின் தாயையும் உறவினர்களையும் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
தற்கொலை செய்து கொள்ளும் முகமாக 11ஆவது மாடியிலிருந்து குதித்த பெண் – அதிசயிக்கத்தக்க வகையில் உயிர்பிழைப்பு
12-09-2014
தற்கொலை செய்து கொள்ளும் முகமாக மருத்துவமனையொன்றின் 11 ஆவது மாடி ஜன்னலால் குதித்த பெண்ணொருவர் கீழே நிறுத்தப்பட்டிருந்த வேனொன்றின் மீது விழுந்ததால் அதிசயிக்கத்தக்க வகையில் உயிர்தப்பிய சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
ஸெஜியாங் மாகாணத்தில் தெய்ஸொயு நகரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக விஜயம் செய்த பெண்ணே இவ்வாறு மாடியிலிருந்து குதித்து உயிர் தப்பியுள்ளார்.
வேனின் மீது விழுந்த அவருக்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டிருந்த போதும் அவரது உயிருக்கு எதுவித ஆபத்துமில்லை என கூறப்படுகிறது.
குறிப்பிட்ட வேனின் உரிமையாளரான யாங் விபரிக்கையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாயாரை பார்ப்பதற்காக வேனை மருத்துவமனையின் அருகில் நிறுத்தி விட்டு சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் அந்தப் பெண் குதித்த போது தாம் வேனில் இருக்காமல் தப்பியுள்ளதை தமது அதிர்ஷ்டமாக உணர்வதாகவும் கூறினார்.
வாயை தைத்து கைகளை சிலுவையில் அறைந்து விநோத உண்ணாவிரத போராட்டம்
12-09-2014
பராகுவேயை சேர்ந்த 3 பஸ் சாரதிகள் தாம் நீதியற்ற முறையில் தமது வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமது வாயை தைத்தும் தமது கைகளை சிலுவையில் ஆணிகளால் அறைந்தும் விநோத உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அஸன்சியன் நகரின் புறநகரப் பகுதியான சான் லொரென்ஸோவைச் சேர்ந்த எல்வியோ கிறிஸ்டல்டோ (39 வயது), எலிஜியோ மார்ரினெஸ், கிளென்மென்ட் லொவெரா ஆகியோரே குறைந்த மணித்தியால நேரத்துக்கு பணியாற்ற மறுத்தமைக்காக தாம் பணிநீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எல்வியோவும் எலிஜியோவும் தமது கைகளை சிலுவைகளில் அறைந்த அதேசமயம் கிளென்மென்ட் தனது வாயை தைத்துக்கொண்டுள்ளார்.
அவர்களுக்கு வலியை உணராமல் இருக்க வலிநீக்கி மருந்துகள் வழங்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.