சட்டவிரோதமாக தங்கத்தை கடத்தி வந்த ஐந்து பெண்கள் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் இலங்கை வந்தவர்கள் எனவும் சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தங்கம் கடத்தப்பட்டமையும் தெரியவந்துள்ளது.
இந்த பெண்களின் உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 தங்க பிஸ்கட்டுகள் மற்றும் பயணப் பையில் மறைத்து வைத்திருந்த 8 வளையல்கள், 2 தங்கச் சங்கிலி, 2 தங்க கைப்பட்டிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இவற்றின் நிறை சுமார் மூன்று கிலோ கிராமுக்கும் அதிகம் எனவும், பெறுமதி 20 மில்லியன் ரூபா எனவும் சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் சந்தேகநபர்கள் கிரான்பாஸ் வீதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
சவுதி அரேபியாவில் சாராய பேக்டரி நடத்திய 3 பேர் பொலிசாரின் பிடியில். (வீடியோ இணைப்பு)
சவுதி அரேபியாவின் வடமேற்கு பகுதியில் கள்ளச்சாராயாம் காய்ச்சிய 3 இந்தியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக சவூதி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, ஹெய்ல் நகரத்தில் உள்ள ஒரு வீட்டில் அதிரடி சோதனை நடத்திய போலீசார், அந்த வீட்டினுள் கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழிற்சாலை நடந்து வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்ததுள்ளனர் .
குறித்த வீட்டினுள் பெரல்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த எரிச்சாராயம் மற்றும் போத்தல்களில் அடைத்து விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த கள்ளச்சாராயம், அவற்றை தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வந்த இயந்திரங்கள் மற்றும் ஏராளமான பணத்தையும் கைப்பற்றிய சவூதி போலீசார், இந்த தொழிற்சாலையை நடத்திவந்த 3 இந்தியர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.