யாழ்ப்பாணம், நாவாந்துறை பகுதியில் 8 வயது சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தாத்தாவை (தாயின் தந்தை) ஞாயிற்றுக்கிழமை (14) காலை கைது செய்ததாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சிறுமியை அவளது தாத்தா, தொடர்ந்து 9 நாட்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார்.
இனிப்பு பண்டங்களை வாங்கிக்கொடுத்து, அச்சிறுமியை துஷ்பிரயோகம் செய்த சந்தேகநபர், இவ்விடயத்தை வெளியில் சொல்லவேண்டாம் எனவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், தனது மகளில் மாற்றங்கள் இருப்பதை கண்டுகொண்ட தாய், மகளிடம் கேட்டபோது, தாத்தா தனக்கு செய்தவற்றை அச்சிறுமி கூறியுள்ளார்.
இதனையடுத்து, சிறுமியின் தந்தை சனிக்கிழமை (13), யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாட்டை பதிவு செய்தார்.
முறைப்பாட்டின் பிரகாரம் சிறுமியை வைத்திய பரிசோதனை மேற்கொண்ட போது, சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, ஞாயிற்றுக்கிழமை (14) காலை, தாத்தா கைது செய்யப்பட்டதாகவும், தொடர்ந்து சிறுவர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
பக்கது வீட்டுக்காரியுடன் சண்டை: தீயில் எரிந்த இளம் குடும்பப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
September 14th, 2014
தீயில் எரிந்த நிலையில் யாழ். போதனாவைத்தியசாலையில் கடந்த 7ஆம் திகதியிலிருந்து சிகிச்சை பெற்றுவந்த இளம் குடும்பப்பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
யாழ். கொழும்புத்துறையைச் சேர்ந்த யுவசீலன் அமிர்தா (வயது 27) என்ற ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த இளம் குடும்பப் பெண்ணுக்கும் அயல் வீட்டுப் பெண்ணுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த முரண்பாட்டினால் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பொழுது இப்பெண்ணை அயல்வீட்டுப்பெண் விரும்பத்தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இதனால் மனவிரக்தியுற்ற குறித்த பெண் தனது கணவர் வேலைமுடிந்து வீட்டிற்குச் சென்ற பொழுது அயல் வீட்டுப் பெண்ணை விசாரித்துக் கண்டிக்குமாறு கோரியுள்ளார்.
அனால் கணவன் இரவில் இவ்வாறு செய்யமுடியாது எனவும் விடிந்ததும் தான் விசாரிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இப்பெண் கணவரை அச்சுறுத்துவதற்காக தனக்குத்தானே மண்ணெண்ணெயை ஊற்றி தீமூட்டப்போவதாக எச்சரித்துள்ளார்.
இதன்பொழுது குறித்த பெண்ணால் உரசப்பட்ட தீக்குச்சி தவறுதலாக பற்றியதில் இப்பெண் தீயில் எரிந்துள்ளார்.
இந்த நிலையில் இப்பெண் கடந்த 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையில் இருந்து யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுள்ளார். ஆனால் சிகிச்சை பலலின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக யாழ். போதனாவைத்தியசாலையின் பதில் மரணவிசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
மீசாலையில் அம்புலன்ஸ் மோதி தாயும் மகளும படுகாயம்
13-09-20014
யாழ். மீசாலை பகுதியில் நோயாளர் காவு வண்டியொன்று சனிக்கிழமை (13) மோதியதில் தாயும் மகளும் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் கூறினார்கள்.
மந்துவில் மேற்கை சேர்ந்த யுவதாஸ் நிர்மலா (வயது 40), யுவதாஸ் கஜானா (வயது 08) என்பவர்களே படுகாயமடைந்துள்ளனர்.
ஏ – 9 வீதியில் துவிச்சக்கரவண்டியால் சென்றுகொண்டிருந்த வேளையில், இவர்கள் மீது நோயாளர் காவு வண்டி மோதியுள்ளது.
இதில் படுகாயமடைந்த இருவரும் முதலில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
Leave a Reply