ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Sunday, May 22
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»உள்நாட்டு செய்திகள்»முறிகண்டியில் பஸ் மிதிப் பலகையிலிருந்து தவறிவிழுந்த ஒருவர் உயிரிழப்பு (வீடியோ)
    உள்நாட்டு செய்திகள்

    முறிகண்டியில் பஸ் மிதிப் பலகையிலிருந்து தவறிவிழுந்த ஒருவர் உயிரிழப்பு (வீடியோ)

    adminBy adminSeptember 15, 2014No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    முல்லைத்தீவு முறிகண்டி பகுதியில் இன்று முற்பகல் 11.45 அளவில் தனியார் பஸ்சின் மிதிப் பலகையில் இருந்து தவறிவிழுந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த பஸ்சில் பயணித்த 19 வயதான இளைஞனே முறிகண்டி கோயிலுக்கு அருகே தவறிவிழுந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

    குறித்த இளைஞன் வவுனியா கோவில் புளியங்குளம் பகுதியச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

    a

    இதேவேளை, மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    அம்பாறையில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த பஸ்சொன்று, சைக்கிளில் வீதியை கடந்துகொண்டிருந்த ஒருவர் மீது இன்று மாலை 5 மணியளவில் மோதியுள்ளது.

    பஸ் மோதியதில் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கோட்டக்கல்லாறு பகுதியைச் சேர்ந்த 65 வயதான ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

    உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

     யாழ். – கொழும்பு தனியார் சொகுசு பஸ்ஸில் 13.5 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது:சாரதி, நடத்துனர் உட்பட மூன்றுபேர் கைது
    15-09-2014

    kanchaயாழ்ப்பாணத்திலிருந்து கொழும்­புக்கு பய­ணிகள் சேவையில் ஈடு­படும் சொகுசு பஸ்­வண்­டிகள் ஊடாக கேரள கஞ்சா கடத்­தப்­படும் வர்த்­தகம் ஒன்­றினை பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­ப­டை­யினர் முறி­ய­டித்­துள்­ளனர்.

    நேற்று முன்தினம் இரவு யாழி­லி­ருந்து கொழும்பு நோக்கி பய­ணித்த அதி சொகுசு பஸ் வண்டி ஒன்­றி­லி­ருந்து 13.5 கிலோ கிராம் நிறை­யு­டைய கேரள கஞ்­சா­வினை கன­க­ராயன் குளம் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட இடத்தில் வைத்து பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­ப­டை­யினர் சுற்­றி­வ­ளைத்து சந்­தேக நபர்கள் மூவரையும் கைது செய்­த­தன் மூலம் குறித்த வர்த்­தகம் தொடர்பான தகவல்கள் வெளி­யா­கி­யுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் அலு­வ­ல­கத்தின் கடமை நேர சிரேஷ்ட அதி­காரி ஒருவர் கேச­ரிக்கு தெரி­வித்தார்.

    பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­ப­டையின் கட்­டளை அதி­கா­ரி­யான சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ஜே.கே.ஆர்.ஏ.பெரே­ரா­வுக்கு நேற்று முன் தினம் இரவு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்­ப­டையில் குறித்த திடீர் நடவ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

    தமக்கு கிடைத்த தகவ்லின் பிர­காரம் ஏ.9 வீதியில் கன­க­ராயம் குளம் பொலிஸ் பிரிவில் தற்­கா­லிக வீதி சோதனை தடை ஒன்று ஏற்­ப­டுத்­தப்­பட்டு குறித்த பஸ் வண்டி சோதைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

    இதன் போதே பஸ் வண்­டி­யி­லி­ருந்து 25 இலட்சம் ரூபா வரை பெறு­மதி கொண்­டது என கணிக்­கப்­படும் 13.5 கிலோ கேரள கஞ்சா கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது.

    அத்­துடன் பஸ் வண்­டியின் சாரதி, நடத்­துடன் மற்றும் பிறிதொரு நப­ரையும் கைது செய்த விஷேட அதி­ர­டிப்­ப­டை­யினர் அவர்­க­ளையும் கஞ்­சா­வையும் மேல­திக விசா­ரணை நடவ­டி­கை­களின் பொருட்டு கன­க­ரா­யன்­குளம் பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்­துள்­ளனர்.

    இந்­தி­யா­வி­லி­ருந்து கடல் மார்க்­க­மாக கடத்­தப்­படும் கேரள கஞ்சா பய­ணிகள் பிர­யாண பஸ்­வண்­டிகள் ஊடாக கொழும்­புக்கு கடத்­தப்­ப­டு­வது தொடர்பில் ஏற்­க­னவே பொலி­ஸா­ருக்கு தகவல் கிட்­சைத்­தி­ருந்த நிலை­யி­லேயே இந்த நடவ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­ட­தாக நடவ­டிக்­கை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர்  தெரி­வித்தார். சம்­பவம் தொடர்பில் மேல­திக விசா­ர­ணை­களை கன­க­ராயன் குளம் பொலிஸார் முன்­னெ­டுத்­துள்­ளனர்.

    இதே­வேளை பஸ் வண்டி சோத­னைக்கு உட்படுத்தப்பட்டு சாரதி, நடத்துனர் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு பஸ் வண்டியும் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் அதில் பயணித்த பிரயாணிகள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்ததாக தெரியவருகின்றது.

    இந்த பஸ்ஸில் பயணித்த பிரயாணி ஒருவர் கேசரிக்கு கருத்துத் தெரிவிக்கையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் நான் பயணித்த சொகுசு பஸ்ஸை 100 க்கும் மேற்பட்ட விசேட அதிரடிப்டையினரும் பொலிஸாரும் கனகராயன் குளப்பகுதியில் மறித்தனர்.

    இதில் பயணித்த 45 பயணிகளையும் அவர்கள் இறக்கியதுடன் பஸ்ஸை சோதனையிட்டனர். பஸ்ஸிலிருந்து கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டது. பஸ்ஸிலிருந்து இறக்கப்பட்ட பயணிகளை வேறு பஸ்களில் ஏற்றி அனுப்புவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் சில மணி நேரம் காத்திருந்து பின்னால் வந்த பஸ்களில் ஏறி நின்ற வண்ணமே கொழும்பு நோக்கி நாம் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது என்று தெரிவித்தார்.

    Post Views: 382

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    admin

    Related Posts

    பஸ் யன்னலில் வெளியே தலையை நீட்டிக்கொண்டு வந்த 3 வயது சிறுமிக்கு ஏற்பட்ட சோகம்!

    May 21, 2022

    கொழும்பில் பயங்கரம் – கர்ப்பிணியை கத்தியால் குத்தி வயிற்றிலிருந்த குழந்தையை கொன்ற கணவர்

    May 21, 2022

    ரயிலுடன் வேன் மோதி விபத்து: நால்வர் காயம்

    May 21, 2022

    Leave A Reply Cancel Reply

    September 2014
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930  
    « Aug   Oct »
    Advertisement
    Latest News

    21 ஆவது சட்டவரைபு நாளை அமைச்சரவைக்கு சமர்பிப்பு – அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ

    May 22, 2022

    அங்கீகாரம் பெறும் இனப்படுகொலை

    May 22, 2022

    டெங்கு காய்ச்சலால் யாழில் 11 வயது பாடசாலை மாணவன் உயிரிழப்பு

    May 22, 2022

    உலக சாம்பியன் கார்ல்சனை மீண்டும் வீழ்த்திய இளம் வீரர் பிரக்ஞானந்தா!

    May 21, 2022

    பஸ் யன்னலில் வெளியே தலையை நீட்டிக்கொண்டு வந்த 3 வயது சிறுமிக்கு ஏற்பட்ட சோகம்!

    May 21, 2022
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    • Facebook 41.6K
    • Twitter 795
    • YouTube
    Recent Posts
    • 21 ஆவது சட்டவரைபு நாளை அமைச்சரவைக்கு சமர்பிப்பு – அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ
    • அங்கீகாரம் பெறும் இனப்படுகொலை
    • டெங்கு காய்ச்சலால் யாழில் 11 வயது பாடசாலை மாணவன் உயிரிழப்பு
    • உலக சாம்பியன் கார்ல்சனை மீண்டும் வீழ்த்திய இளம் வீரர் பிரக்ஞானந்தா!
    Recent Comments
    • Yaseer on கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்: (இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே – பகுதி 16)
    • baskaran on நடிகை மீரா ஜாஸ்மின் திருமணம்! (Meera Jasmine Wedding Exclusive Video)
    • Maria on Woo Ninja
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்
    2022 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version