யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் இடம்பெற்ற இருவேறு வாள்வெட்டு தாக்குதலில் இரண்டு இளைஞர்கள் படுகாயமுற்ற நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று திங்கட்கிழமை அதிகாலை ஐந்து மணியளவில் ஏழாலை சிவகுரு கடையடியிலும் ஏழாலை உத்தமன் சிலையடியிலுமே இந்த இரு சம்பவங்களும் இடம் பெற்றுள்ளன.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துணிகர செயலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
வேலைக்கு செல்வதற்காக மல்லாகம் குப்பிளான் வீதியில் சென்று கொண்டிருந்த வேளையில் சிவகுரு கடையடியில் வைத்து ஏழாலையைச் சேர்ந்த 22 வயதுடைய கே.கஜேந்திரன் என்பவர் முதுகில் கோடாரியால் கொத்தப்பட்டு படுகாயமடைந்தார்.
குறிப்பிட்ட சம்பவத்தை நடத்தி விட்டு அதே பாதையில்மோட்டார் சையிக்களில் வந்த இருவரும் உத்தமன் சிலையடியில் வைத்து மல்லாகம் சந்தியில் உள்ள தேனீர் கடையில் பணிபுரியும் குப்பிளானைச் சோந்த எம்.ரமணசீலன் வயது 27 என்பவரை வெட்டியும் கொத்தியும் உள்ளனர்.
குறித்த சம்பவத்திறக்கான காரணங்கள் உரிய முறையில் தெரியவராத போதிலும் குறிப்பிட்ட சம்பவம் ஆள் தெரியாமல் இடம்பெற்ற சம்பவம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பஸ்ஸிலிருந்து தவறி விழுந்த நடத்துனர் பலி
15-09-2014
பயணித்துக்கொண்டிருந்த பஸ்ஸிலிருந்து தவறி விழுந்த நடத்துனர் ஒருவர் பலியான சம்பவமொன்று கிளிநொச்சி, முறிகண்டி பகுதியில் இன்று திங்கட்கிழமை (15) காலை இடம்பெற்றுள்ளது.
வவுனியா, கோவில் புளியங்குளத்தைச் சேர்ந்த சந்திரன் தனுசன் (வயது 19) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த பஸ், முறிகண்டி பகுதியிலுள்ள வளைவு ஒன்றில் திருப்ப முற்பட்ட வேளையில் பஸ்ஸின் முன்வாசலில் நின்றிருந்த நடத்துனர் தவறி கீழே விழுந்துள்ளார்.
இதன்போது, பஸ்ஸின் முன் சில்லு, நடத்துனர் மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மாங்குளம் பொலிஸார் கூறினர்