விடுதலைப்புலிகள் மற்றும் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான விவகாரத்தில் அச்சுறுத்தல் இருப்பதால் சொத்துக்குவிப்பு வழக்கு நீதிமன்றத்தை மாற்றக்கோரி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா ,அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் வரும் வரும் 20 ஆம் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தீர்ப்பளிக்க உள்ளார்.
இந்த தீர்ப்பையொட்டி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா உள்பட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில்இ விடுதலைப்புலிகள் மற்றும் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான விவகாரத்தில் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதால்இ சொத்துக்குவிப்பு வழக்கின் நீதிமன்றத்தை பரப்பன அக்ரஹாரத்துக்கு மாற்றக்கோரி முதல்வர் ஜெயலலிதாஇ பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை இன்று தாக்கல் செய்தார்.
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த.. அதிமுகவினர் ஓடஓட விரட்டியடிப்பு: கோவையில் பாஜவினர் ஆவேசம்
15-09-2014
பெ.நா.பாளையம்: கோவை அருகே துடியலூரில் மேயர் தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணம் பட்டுவாடா செய்தனர். அந்தப்பணத்தை பாஜ கவுன்சிலர் உள்ளிட்டோர் கைப்பற்றி அதிமுகவினரை ஓடஓட விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளருக்கு 18ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக மாநகராட்சி வார்டு பகுதிகளில் அதிமுக, பாஜக, கம்யூனிஸ்ட் உட்பட வேட்பாளர்களும் கட்சியினரும் பொதுமக்களிடம் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்காளர்களுக்கு ஆளுங்கட்சியினர் பணம் பட்டுவாடா செய்வதும் தீவிரமாக நடந்து வருகிறது. நேற்று கவுண்டம்பாளையம், துடியலூர், அப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் பொதுமக்களுக்கு அதிமுகவினர் பணம் பட்டுவாடா செய்து கொண்டிருந்தனர்.
யார், யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என லிஸ்ட் தயார் செய்து அதன்படி பணம் வினியோகித்துள்ளனர். இந்த தகவல் பாஜ நிர்வாகிகளுக்கு தெரிய வந்தது. உடனே மாநகராட்சி 1வது வார்டு பாஜ கவுன்சிலர் வத்சலா தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் விரைந்து வந்தனர்.
துடியலூர் முத்து நகர், சேரன் காலனி, அப்பநாயக்கன்பாளையம் பகுதிகளில் வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக அதிமுகவினர் பணம் விநியோகித்துக் கொண்டிருந்ததை கையும் களவுமாக பிடித்தனர். அதிமுகவினரிடம் இருந்து பணத்தையும் லிஸ்ட்டையும் பாஜவினர் கைப்பற்றினர்.
அப்போது பாஜவினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, அதிமுகவினரை பாஜவினர் ஓடஓட விரட்டியடித்தனர். இந்த சம்பவம் துடியலூர் பகுதியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாஜக கவுன்சிலர் வத்சலா கூறும்போது, ‘‘ஆளும் அதிமுகவினர் ஓட்டுக்காக பணத்தை வாரி இறைக்கின்றனர். இதனை தேர்தல் அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும்.
ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்கவேண்டும். தேர்தல் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் யாரும் வரவில்லை‘‘ என்றார். மேலும், கவுண்டம்பாளையம் 9வது வார்டு எம்ஜிஆர் நகர் பகுதியில் நேற்று காலை அதிமுகவினர் வீடு, வீடாக பணம் கொடுப்பதாகவும், இதில் சென்னையில் இருந்து வந்த 2 எம்எல்ஏக்கள் ஈடுபட்டிருப்பதாகவும் புகார் எழுந்தது.
இதனையடுத்து பா.ஜ.க.வை சேர்ந்த சுமார் 50 பேர் அவுசிங் யூனிட் பகுதியில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். எம்எல்ஏக்களின் கார்களை யும் அவர்கள் முற்றுகையிட்டனர்.
இதில், பா.ஜ.க. மேயர் வேட்பாளர் நந்தகுமார், கவுன்சிலர் வத்சலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தகவல் அறிந்து துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக் டர் சரவணன் விரைந்து வந்தார்.
அவரிடம் எம்எல்ஏக்களின் காருக்குள் பணம் கட்டுக்கட்டாக இருப்பதாக புகார் தெரிவித்தனர். இதைதொடர்ந்து காரை திறந்து பார்த்தபோது அதில் பணம் எதுவும் இல்லை என்பது தெரிந்தது.
எம்எல்ஏ முற்றுகை: போத்தனூர் பகுதியில் நேற்று பிரசாரம் செய்த பூந்தமல்லி தொகுதி அதிமுக எம்எல்ஏ மணிமாறனை அப்பகுதி மக்கள் அடிப் படை வசதி கேட்டு முற்று கையிட்டனர்.
கலெக்டர் பங்களாவை மார்க்சிஸ்ட் முற்றுகை
கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் பொதுமக்களுக்கு அதிமுக நிர்வாகிகள் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாகவும், அடியாட்களை வைத்து மிரட்டும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் முன்னாள் எம்.பி. பி.ஆர்.நடராஜன், மேயர் வேட்பாளர் பத்மநாபன் ஆகியோர் தலைமையில் ஏராளமான தொண்டர்கள் ரேஸ்கோர்ஸில் உள்ள கலெக்டர் பங்களாவை நேற்று முற்றுகையிட்டு மனு அளித்தனர்.