ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Tuesday, March 28
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    இந்தியா

    ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்புக்கான நாட்கள் எண்ணப்படுகின்றன..

    AdminBy AdminSeptember 17, 2014No Comments4 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    வரு­மா­னத்­துக்கு அதி­க­மாக சொத்து சேர்த்­த­தாக தமி­ழக முதல்வர் ஜெய­ல­லி­தா­வுக்கு எதி­ராக தொட­ரப்­பட்ட வழக்கின் தீர்ப்பு இறு­திக்­கட்­டத்தை எட்­டி­யுள்­ளது. எதிர்­வரும் சனிக்­கி­ழமை 27ஆம் திகதி தீர்ப்பு வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

    இன்னும் ஆறு தினங்­களே எஞ்­சி­யுள்­ளன. நாட்கள் எண்­ணப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றன. கடந்த 18 வரு­டங்­க­ளாக இடம்­பெற்று வந்த இந்த வழக்கின் தீர்ப்பை அனை­வரும் ஆவ­லுடன் எதிர்­பார்த்துக் கொண்­டி­ருக்­கின்­றனர்.

    செப்­டெம்பர் 20ஆம் திகதி தமி­ழக அர­சியல் வர­லாற்றில் மட்­டு­மன்றி இந்­திய அர­சியல் வர­லாற்­றிலும் முக்­கி­யத்­துவம் வாய்ந்த ஒரு தின­மாக மாறப்போகிறது மட்­டு­மன்றி உலகத் தமி­ழர்­களும் இதனை எதிர்­பார்த்­தி­ருக்­கின்­றனர்.

    தீர்ப்பு எவ்­வாறு இருக்கும் என்­பதை எவ­ராலும் உறு­தி­ப­டக்­கூற முடியா விட்­டாலும் ஏதோ ஒன்று நடக்­கப்­போ­கி­றது என்­பது மட்டும் உண்மை! அது எவ்வாறா­ன­தாக இருக்­கப்­போ­கி­றது என்­பது அனை­வ­ரி­னதும் எதிர்­பார்ப்­பாகும்.

    ஜெய­ல­லி­தா­வுக்கு சாத­க­மற்ற தீர்ப்பு வழங்­கப்­ப­டு­மானால் அதனால் தமி­ழக அர­சி­யலில் மிகப்­பெ­ரிய மாற்­றங்கள் ஏற்­ப­டக்­கூடும்

    subramania-swamyஇந்த வழக்கு பிர­பல அர­சி­யல்­வாதி சுப்­பி­ர­ம­ணிய சுவா­மி­யினால் 21.06.1996இல் சென்னை முதன்மை நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்­டது. 01.07.1991 முதல் 30.04.1996 வரை தமி­ழக முதல்­வ­ராக ஜெய­ல­லிதா பதவி வகித்த போது தமது வரு­மா­னத்­துக்கு மேல­தி­க­மாக சொத்­துக்­களை சேர்த்­துள்­ள­தாக சுப்பி­ர­ம­ணிய சுவாமி தனது மனுவில் குறிப்­பிட்­டி­ருந்தார்.

    இந்த மனுவை விசா­ரணை செய்த நீதி­பதி அப்­போது தமி­ழக இலஞ்ச ஒழிப்­புத்­துறை டி.ஐ.ஜி.யாக இருந்த லத்­திகா சர­ணிடம் இது தொடர்­பாக விசா­ரணை செய்ய பணிப்­புரை விடுத்தார்.

    அதற்­க­மைய லத்­திகா சரண் மேற்­கொண்ட விசா­ர­ணையின் அடிப்­ப­டையில் ஜெய­லி­லதா கைது செய்­யப்­பட்­ட­துடன் சென்னை முதன்மை அமர்வு நீதி­மன்­றத்தில் வழக்கும் நடை­பெற்­றது.

    பின்னர் 2001இல் நடை­பெற்ற தேர்­தலில் ஜெய­ல­லிதா வெற்றி பெற்று மீண்டும் முதல்­வ­ரானார். இத­னை­ய­டுத்து இந்த வழக்கை வேறு மாநி­லத்­துக்கு மாற்ற வேண்­டு­மெனக் கூறி தி.மு.க. பொதுச்­செ­ய­லாளர் க. அன்­ப­ழகன் உச்ச நீதி­மன்­றத்தில் மனுத்­தாக்கல் செய்தார். அதற்­க­மைய வழக்கு பெங்­க­ளூரு தனி நீதி­மன்­றத்­துக்கு மாற்­றப்­பட்­டது.

    2004 முதல் பெங்­க­ளூரு தனி நீதி­மன்­றத்தில் நடை­பெற்று வரும் இந்த சொத்­துக்­கு­விப்பு வழக்கை ஏழு நீதி­ப­திகள் விசா­ரணை செய்து வந்த நிலையில் எட்­டா­வது நீதி­ப­தி­யாக ஜோன்­மைக்கேல் டி குன்ஹா நிய­மிக்­கப்­பட்டார்.

    அதன்­பின்­னரே வழக்கு விரை­வாக விசா­ரணை செய்­யப்­பட்டு இறு­திக்­கட்­டத்தை எட்­டி­யுள்­ளது. இந்த நிலை­யி­லேயே வழக்கின் தீர்ப்பு எதிர்­வரும் 20ஆம் திகதி வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

    இந்த வழக்கில் என்­ன­வி­த­மான தீர்ப்பு வழங்­கப்­படும்? ஜெய­ல­லி­தா­வுக்கு தண்­டனை கிடைக்­குமா? அல்­லது வழக்­கி­லி­ருந்து விடு­தலை பெறு­வாரா? என்ற கேள்வி அ.தி.மு.க. தலை­வர்­க­ளி­டமும் தொண்­டர்­க­ளி­டமும் எழுந்­துள்­ளது.

    தண்­டனை அதி­க­மா­ன­தாக இருந்தால் எதிர்­கா­லத்தில் அவர் தேர்­தலில் போட்­டி­யிட முடி­யாத நிலை ஏற்­படும் என்றும் பேசப்­ப­டு­வதால் தமி­ழகம் முழுவதும் இருக்கும் கட்­சித்­தொண்­டர்­க­ளிடம் பெரும் கலக்கம் ஏற்­பட்­டுள்­ளது.

    ஜெய­ல­லி­தா­வுக்கு தண்­டனை வழங்­கப்­ப­டு­மானால் அக்­கட்­சியின் சிரேஷ்ட அமைச்­ச­ரான ஓ.பன்­னீர்­செல்வம் முத­ல­மைச்­ச­ராக நிய­மிக்­கப்­ப­டலாம் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

    அ.தி.மு.கவைப் ­பொ­றுத்­த­வ­ரையில் அந்தக் கட்­சியில் அனைத்­துமே ஜெய­ல­லி­தாதான். அவர் பொதுச்­செ­ய­ல­ாளர் என்ற வகையில் அனைத்துப் பொறுப்­புக்­களும் தீர்­மானம் எடுக்கும் உரி­மையும் அவ­ருக்கே வழங்­கப்­பட்­டுள்­ளது. அவரை மீறி கட்­சி­யி­லுள்ள எவ­ராலும் எந்­தத்­தீர்­மா­னமும் எடுக்க முடி­யாது தன்னை ஒரு தனிப்­பெரும் சக்­தி­யாக ஜெய­ல­லிதா வெளிப்­ப­டுத்தி வரு­கிறார்.

    எனவே அ.தி.மு.க.வில் ஜெய­ல­லி­தாவை அடுத்து தீர்­மானம் எடுக்­கக்­கூ­டிய இரண்டாம் மட்­டத்­த­லை­வர்கள் எவரும் இல்லை. ஜெய­ல­லி­தாவைத் தொடர்ந்து தலைமைப் பத­வியை ஏற்­கக்­கூ­டிய ஒரு­வரை ஜெய­ல­லிதா அறி­மு­கப்­ப­டுத்­த­வில்லை வளர்த்து விடவும் இல்லை.

    தனக்கு நிக­ராக அல்­லது தன்­னைப்­போன்ற ஒருவர் அ.தி.மு.க. தலை­மையை ஏற்­பதை விரும்­பாத ஒரு­வ­ரா­கவே ஜெய­ல­லிதா காணப்­ப­டு­கிறார். இதைத்தான் அந்த கட்­சியின் ஸ்தாபகத் தலை­வரும் முன்னாள் முத­ல­மைச்­ச­ரு­மான எம். ஜி. ராமச்­சந்­திரன் செய்தார்.

    இரண்­டா­வது தலை­மையை வளர்க்­காத கார­ணத்­தினால் எம்.ஜி.ஆர். சுக­வீ­ன­முற்­றி­ருந்த போதும் அவர் உயி­ரி­ழந்த பின்­னரும் கட்­சியில் பாரிய குழப்­பங்கள் ஏற்­பட்­டன. எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி, ஆர்.எம். வீரப்பன், திரு­நா­வுக்­க­ரசு போன்றோர் இந்­தப்­பி­ரச்­சி­னையின் முக்­கி­ய­மா­ன­வர்­க­ளாகக் காணப்பட்­டனர்.

    நீண்­ட­தொரு போராட்­டத்தின் பின்­னரே அ.தி.மு.க.வின் தலை­மைப்­ப­த­விக்கு ஜெய­ல­லி­தாவால் வர முடிந்­தது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

    தற்­போது அமைச்சர் ஓ. பன்­னீர்­செல்வம் இரண்டாம் இடத்தில் இருப்­ப­தா­கக் ­கூறப்­பட்­டாலும் அவர் சுய­மாக தீர்­மானம் எடுக்க முடி­யா­த­வ­ரா­கவே காணப்படு­கிறார். ஏற்­க­னவே ஒரு­முறை ஜெய­ல­லிதா முதல்வர் பத­வியை தொடர முடி­யாத நிலை ஏற்­பட்ட போது ஓ. பன்­னீர்­செல்­வமே முதல்­வ­ராக பத­வி­யேற்று செயற்­பட்டு வந்­துள்ளார்.

    இந்த நிலையில் நீதி­மன்ற தீர்ப்பின் மூலம் ஜெய­ல­லிதா தொடர்ந்து முதல்வர் பத­வியில் நீடிக்க முடி­யாத நிலை ஏற்­ப­டு­மானால் அமைச்சர் ஓ. பன்­னீர்­செல்வம் முதல்­வ­ராகப் பத­வி­யேற்­கலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. எனினும் அவ­ருக்கு முதல்வர் பத­வியை வழங்க பலர் எதிர்ப்பு தெரி­விக்­கலாம் எனவும் கூறப்­ப­டு­கி­றது.

    முன்பு ஜெய­ல­லி­தா­வுக்குப் பின்னர் ஜெய­ல­லி­தாவின் தோழி­யான சசி­க­லாவின் கணவர் நட­ராஜன் கட்­சியின் தலை­மையை பெறு­வ­தற்கு திட்டமிட்டிருந்ததாக கூறப்­பட்­டது. எனினும் அவர் கட்­சி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

    நாம் எத்­த­னையோ பந்­த­யங்­க­ளைப்­பற்றி கேள்­விப்­பட்­டி­ருக்­கின்றோம். ஆனால் தமி­ழ­கத்தில் கடந்த சில தினங்­க­ளாக புது­வி­த­மாக பந்­த­யத்தில் பல்­வேறு தரப்­பி­னரும் ஈடு­பட்­டுள்­ள­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. அது ஜெய­ல­லி­தா­வுக்கு வழக்கில் தண்­டனை கிடைக்­குமா? கிடைக்­காதா? என்­ப­துதான்.

    ‘தண்­டனை கிடைக்­குமா, கிடைக்­காதா? ‘விடு­தலை ஆவாரா? அல்­லது தண்­டனை கிடைக்­குமா?” என்­றெல்லாம் பந்­தயம் கட்­டு­கின்­ற­னராம். இதில் ஆளும் கட்­சி­யி­னரும் எதிர்க்­கட்­சி­யி­னரும் கூட ஈடு­பட்­டுள்­ள­னராம்.

    பணம், தங்க நகைகள், கார், வீடு நிலம் என பல பொருட்­களை பந்­த­ய­மாக வைத்து வரு­கின்­ற­னராம். எதற்­கெல்லாம் பந்­தயம் பிடிப்­பது என்ற அந்­தஸ்து இல்­லாமல் போயுள்­ள­தையே இது காட்­டு­கி­றது.

    27ஆம் திகதி தீர்ப்பு வழங்­கப்­ப­ட­வுள்ள நிலையில் பல்­வேறு தரப்­பி­னரும் தீர்ப்பை எதிர்­பார்த்துக் காத்­தி­ருக்­கின்­றனர். நாமும் பொறுத்­தி­ருந்து பார்ப்போம் என்­னதான் நடக்­கப்­போ­கி­ற­தென்று ?

    தமி­ழ­கத்தில் உள்­ளாட்சி மன்­றங்­க­ளுக்­கான இடைத்­தேர்தல் நடை­பெ­ற­வுள்ள நிலையில் வேட்பு மனுத்­தாக்கல் அனைத்தும் முடி­வ­டைந்து விட்­டது. இறுதி நேரத்தில் தமது கட்­சி­யைச்­ சேர்ந்த சில வேட்­பா­ளர்கள் ஆளும் கட்­சி­யினால் மிரட்­டப்­பட்டு வேட்­பு­ம­னுக்­களை வாபஸ் பெற்­றுக்­கொண்­டுள்­ள­தாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமி­ழிசை செளந்­தி­ர­ராஜன் குற்­றஞ்­சாட்­டி­யுள்ளார்.

    வேட்பு மனுவை வாபஸ் பெறாத சிலரின் போலி கையொப்­ப­மி­டப்­பட்ட கடி­தத்தை சமர்ப்­பித்து அதன் மூலம் வேட்­பு­ம­னுக்கள் வாபஸ் பெறப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

    இந்த இடைத்­தேர்­தலில் ஆளும் அ.தி.மு.க. மட்­டுமே சகல இடங்­க­ளுக்கும் வேட்பு மனுக்­களை சமர்ப்­பித்­தி­ருந்­தது. தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க. உள்­ளிட்ட எந்­த­வொரு கட்­சியும் போட்­டி­யி­டாமல் ஒதுங்கிக் கொண்­டன.

    இந்த நிலை­யி­லேயே தமி­ழக பா.ஜ.க. துணிந்து களத்தில் இறங்­கி­யது. பா.ஜ.கவுக்கு தமி­ழக எதிர்க்­கட்­சிகள் அனைத்தும் ஆத­ரவு வழங்க இணக்கம் தெரி­வித்­துள்­ளன. இதனால் ஆளும் அ.தி.மு.க. அதிர்ச்­சி­ய­டைந்­துள்­ளது.

    அ.தி.மு.கவுக்கு சவா­லாக போட்­டி­யிடும் பா.ஜ.கவின் வெற்­றியைத் தடுத்து நிறுத்­து­வதே அ.தி.மு.கவின் பிர­தான நோக்கம் என்றும் தமி­ழிசை தெரிவித்துள்ளார். இதனால் உள்­ளாட்சி இடைத்­தேர்தல் நியா­ய­மான முறையில் இடம்­பெ­றுமா என்ற சந்­தேகம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் எனவே இந்த இடைத்­தேர்­தலை நீதி­யான முறையில் நடத்­து­வ­தற்கு நீதி­மன்­றத்தை நாடப்­போ­வ­தா­கவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

    இந்த இடைத்­தேர்தல் நீதி­யா­கவும் நியா­ய­மா­கவும் நடை­பெ­றா­தென்­பதால் அதனை ஒத்­தி­வைக்­கு­மாறு நீதி­மன்­றத்­திடம் கோரிக்கை விடுக்­கப்­போ­வ­தா­கவும் தமி­ழிசை செளந்­தி­ர­ராஜன் குறிப்­பிட்­டுள்ளார்.­

    தமி­ழ­கத்தில் ஆளும் அ.தி.மு.கவின் தொடர் ­தேர்தல் வெற்றி அந்­தக்­கட்­சிக்கு ஒரு மம­தையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. தற்­போது நடை­பெ­ற­வுள்ள இடைத்­தேர்­தலில் தோல்வி ஏற்­பட்­டு­வி­டக்­கூ­டாது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

    அதன் கார­ண­மாக எப்­ப­டி­யா­வது தேர்­தலில் வெற்றி பெற்று விட வேண்­டு­மென்ற நிலையில் அதற்­கான சகல வழி­மு­றை­க­ளையும் கையாள்­கி­றது. அதில் ஒரு வழிதான் வேட்­பா­ளர்­களை மிரட்டி வாபஸ் பெற வைக்கும் முறை­யென பா.ஜ.க. தலைவர் ஒருவர் தெரி­விக்­கிறார். இந்த நட­வ­டிக்கை சில வேளை அ.தி.மு.கவின் வெற்­றியை பாதிக்­கவும் கூடும் என்­பதே பொதுவான கருத்தாகும்.

    – நல்லதம்பி நெடுஞ்செழியன் –

    Post Views: 5

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    புதுச்சேரியில் வெடிகுண்டு வீசி, கத்தியால் வெட்டி கொல்லப்பட்ட பாஜக பிரமுகர், திருச்சியில் 7 பேர் சரண் – என்ன நடந்தது?

    March 27, 2023

    “கட்டிங் பிளேடு வைத்து பல்லை பிடுங்கினார்” – விசாரணை கைதிகளை ஏஎஸ்பி தாக்கிய குற்றச்சாட்டின் பின்னணி

    March 27, 2023

    ஓடிப்போய் போலீஸுக்கு சல்யூட் அடிச்ச சிறுமி.. காவல்துறை பகிர்ந்த Cute வீடியோ..!

    March 25, 2023

    Leave A Reply Cancel Reply

    September 2014
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930  
    « Aug   Oct »
    Advertisement
    Latest News

    ஜனாதிபதி தேர்தலுக்கான ரணிலின் முதலீடு

    March 27, 2023

    புதுச்சேரியில் வெடிகுண்டு வீசி, கத்தியால் வெட்டி கொல்லப்பட்ட பாஜக பிரமுகர், திருச்சியில் 7 பேர் சரண் – என்ன நடந்தது?

    March 27, 2023

    “கட்டிங் பிளேடு வைத்து பல்லை பிடுங்கினார்” – விசாரணை கைதிகளை ஏஎஸ்பி தாக்கிய குற்றச்சாட்டின் பின்னணி

    March 27, 2023

    17 வயது சிறுமியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலியின் தாயாரை வாளைக்காட்டி அச்சுறுத்திய காதலனும் அவரது நண்பனும் கைது

    March 27, 2023

    இறப்பதற்கு முன் ஆறு பேருக்கு உயிர் கொடுத்த மாணவி!

    March 27, 2023
    • விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. குற்றப்பத்திரிக்கையில் பகீர்
    • எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
    • 75வயதில் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனைபடைத்த பாட்டியம்மா ! யாழில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்!- (வீடியோ)

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • ஜனாதிபதி தேர்தலுக்கான ரணிலின் முதலீடு
    • புதுச்சேரியில் வெடிகுண்டு வீசி, கத்தியால் வெட்டி கொல்லப்பட்ட பாஜக பிரமுகர், திருச்சியில் 7 பேர் சரண் – என்ன நடந்தது?
    • “கட்டிங் பிளேடு வைத்து பல்லை பிடுங்கினார்” – விசாரணை கைதிகளை ஏஎஸ்பி தாக்கிய குற்றச்சாட்டின் பின்னணி
    • 17 வயது சிறுமியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலியின் தாயாரை வாளைக்காட்டி அச்சுறுத்திய காதலனும் அவரது நண்பனும் கைது
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. குற்றப்பத்திரிக்கையில் பகீர்
    • எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
    • 75வயதில் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனைபடைத்த பாட்டியம்மா ! யாழில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்!- (வீடியோ)
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version