பெண் ஒருவருடன் தகாத முறையில் நடந்து கொள்ள முற்பட்ட 23 வயதுடைய இளைஞரை எதிர்வரும் ஒக்டோபர் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
யாழ். கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த குறித்த குடும்ப பெண்ணை அரசடி வீதிப் பகுதியைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு அநாகரீகமான முறையில் நடந்து கொண்டுள்ளார்.
பிரபல வெளிநாட்டு ஆங்கில கற்கை நிறுவனத்தில் கடiமையாற்றும் குறித்த பெண், தனது அலுவலக கடமையினை நிறைவு செய்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் வழியில் குறித்த இளைஞர் இவ்வாறு அநாகரீகமான முறையில் நடந்து கொண்டுள்ளார்.
இது தொடர்பில் பெண் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததை தொடர்ந்து, குறித்த இளைஞர் கைதுசெய்யப்பட்டு, யாழ். பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
மேற்படி இளைஞரை இன்று வியாழக்கிழமை யாழ். நீதிவான் நீதிமன்றில் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்திய போது, பாதிக்கப்பட்ட குடும்ப பெண் இளைஞரை அடையாளம் காட்டியுள்ளார்.
அதனையடுத்து, யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி குறித்த இளைஞரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
நண்பியின் நிர்வாணப் படத்தை அனுப்பிய இலங்கையர் கைது
19-09-2014
இந்தியாவைச் சேர்ந்த தனது முன்னாள் காதலியின் நிர்வாணப் படங்களை, அவரது உறவினர்களுக்கு அனுப்பியதோடு, 10ஆயிரம் தினார் பணம் கேட்டு மிரட்டிய இலங்கையின் நீச்சல் பயிற்சியாளர் ஒருவர் துபாயில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தன்னுடனான உறவை முறித்துக் கொண்டதன் பின்னர், குறித்த இலங்கை நபரின் தொலைபேசியில் இருந்து தமது புகைப்படங்களை அழித்து விடுமாறும், இந்த விடயம் குறித்த தனது பெற்றோருக்கு கூறவேண்டாம் எனக் கோரியும் அந்த இந்தியப் பெண், 2000 தினாரை வழங்கியுள்ளார்.
எனினும் 10ஆயிரம் தினார் தரவேண்டும் என்று கோரிய குறித்த பயிற்சியாளர், முன்னாள் காதலியின் ஏழு நிர்வாணப் படங்களை அவருடைய சகோதரி மற்றும் உறவினர் ஒருவருக்கும் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தனது தொலைபேசியில் இருந்த அந்த நிர்வாணப் படங்களை பேஸ்புக் ஊடாக காதலியின் உறவினர்களுக்கு அவர் அனுப்பியுள்ளார்.
இதனையடுத்து இந்திய பெண் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் இலங்கை பயிற்சியாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து வவுனியா சென்ற பஸ் மதவாச்சியில் விபத்து; 30 பேர் காயம்
19-09-2014
கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி வந்த தனியார் பஸ் வண்டியொன்று மதவாச்சி இசென்பெஸ்ஸகல என்ற இடத்தில் நேற்று வியாழக்கிழமை அதிகாலை விபத்துக்குள்ளாகியதில் 30 பேர் காயமடைந்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் பஸ் சாரதியும் வேறு இருவரும் கடும் காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும், காயமடைந்தவர்கள் அனைவரும் மதவாச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இருந்து முல்லைத்தீவு செல்வதற்காகப் பின்னால் வந்து கொண்டிருந்த மற்றுமொரு பஸ் வண்டி, இந்த பஸ் வண்டியை முந்திச் செல்ல முற்பட்டபோது, சாரதி வாகனத்தின் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த மதகு ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகியதாக மதவாச்சி பொலிஸார் விபரம் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளாகிய பஸ் வண்டியின் சாரதியை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறிய பொலிஸார் இந்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும் கூறியுள்ளனர்.