கோலிவுட்டின் இப்போதைய ட்ரெண்டான பேய் நகைச்சுவைப் பட வரிசையில் வந்திருக்கும் படம் அரண்மனை. ரஜினியின் ஆயிரம் ஜென்மங்கள், சந்திரமுகி, கொஞ்சம் அருந்ததி என பல சாயல்கள் இந்த அரண்மனையில் தெரிந்தாலும், ஆரம்பத்திலிருந்து கடைசி வரை கலகலப்பும் மிரட்டலுமாகக் கலக்கியிருக்கிறார்கள்.
நடிப்பு: ஹன்சிகா, வினய், சந்தானம், ராய் லட்சுமி, ஆன்ட்ரியா, சுந்தர் சி, மனோபாலா, கோவை சரளா, சரவணன்
ஒளிப்பதிவு: யுகே செந்தில் குமார்
இசை: பரத்வாஜ்
பின்னணி இசை: கார்த்திக் ராஜா
பிஆர்ஓ: நிகில்
தயாரிப்பு: தினேஷ் கார்த்திக்
வெளியீடு: ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ், ரெட் ஜெயன்ட்
திரைக்கதை, இயக்கம்: சுந்தர் சி
ஒரு கிராமத்தின் மிகப்பெரிய பழைய அரண்மனை. நீண்ட காலமாக பூட்டிக் கிடக்கும் அந்த அரண்மனையை விற்க முடிவு செய்கிறார்கள் அதன் வாரிசுகளான வினய், சித்ரா லட்சுமணன், கோவை சரளா அன் கோ. அரண்மனைக்கு நானும் ஒரு வாரிசுதான் என கூறிக்கொண்டு சந்தானம் அன் கோவும் அரண்மனைக்குள் நுழைகிறது.
அரண்மனையை சுத்தப்படுத்த வரும் வேலையாட்களில் ஒருவனை முதல் நாள் இரவே போட்டுத் தள்ளுகிறது அந்த அரண்மனைக்குள் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு பேய். அடுத்தடுத்த இரவுகளில் இன்னும் சில கொலைகள்…
சில உண்மைகளைத் தெரிந்து கொள்கிறார். அந்த அரண்மனையில் பேயாக உலவுவது வேறு யாருமல்ல, வினய்யின் மனைவியான தன் தங்கை ஆன்ட்ரியாதான் என்பது அவருக்குத் தெரிகிறது.
ஆன்ட்ரியாவின் உடலில் புகுந்துள்ள பேய் ஹன்சிகா. 5 ஆண்டுகளுக்கு முன் ஹன்சிகா – வினய் காதல், ஊர் கோயில் நகைகளைக் களவாடிய கும்பல், அந்த உண்மை தெரிந்த ஹன்சிகாவைக் கொன்று அரண்மனையில் புதைத்தது என அதிரவைக்கும் உண்மைகள் அவருக்கு தெரிய வருகிறது.
வினய், வில்லன் சரவணன், தூக்கத்தில் நடக்கும் சித்ரா லட்சுமணன், அந்த சிறுமி, தண்டபாணி, சாமியார் கோட்டா சீனிவாசராவ் என அனைவருமே நிறைவாக நடித்திருக்கிறார்கள். பரத்வாஜின் இசையில் பாடல்கள் பெரிதாய் ஈர்க்கவில்லை. சொல்லப் போனால் படத்தின் வேகத்துக்கு தடையாகவே அவை உள்ளன. கார்த்திக் ராஜாவின் பின்னணி இசையில் அருந்ததியின் சாயல். இருந்தாலும் ரசிகர்களை மிரட்ட உதவியிருக்கிறது.
Aranmanai Movie Audio Launch
கோயிலெல்லாம் வேணாங்க.. அது என் நிம்மதியைக் கெடுக்கும்!- நயன்தாரா