ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க்கில் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர், அங்கு வருகை தந்திருந்த பலஸ்தீன் நாட்டு ஜனாதிபதி மொஹமட் அப்பாஸை சந்தித்து கலந்துரையாடினர்.
பலஸ்தீனுக்கு வழங்குவதாக ஜனாதிபதியினால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை, இந்த சந்திப்பின் போது பலஸ்தீன் ஜனாதிபதியிடம் இலங்கை ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
(இது எப்படியிருக்கு?
இப்படிதான் முன்னாள் லிபியாவின் அதிபர் முவம்மர் கடாபியுடன் மஹிந்த ராஜபக்ஷ கைகோர்த்துக் கொண்டு சினேகிதமாக இருந்தார். அதன் பிறகுதான் கடாபி காணாமல் போனார். இதே நிலைமை மொஹமட் அப்பாஸை நடக்காமல் இருந்தால் சரி.)
நடிகை கஜோல் – ஜனாதிபதி பாரியார் சந்திப்பு
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதியின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷ, நியூயோர்க்கில் வைத்து ஹிந்தி நடிகை கஜோலை சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன் புகைப்படமொன்றையும் எடுத்துக்கொண்டுள்ளார்.
நியூயோர்க்கில் இடம்பெற்ற அறப்பணி நிகழ்வொன்றிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஐ.நா.பொதுச் சபைக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ நேற்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை
சந்தித்து பேசினார். சந்திப்பின்போது இரு தம்பதியினரும் ஒன்றாக நின்று எடுத்துக்கொண்ட படம்.