அது கடந்த 15 ஆம் திகதி திங்கட்கிழமை. நேரம் நண்பகல் 12 மணி இருக்கும். தலை நகரின் பிரதான பிரதேசங்களில் ஒன்றான கொள்ளுப்பிட்டி சந்தியில் பொலிஸாரின் ஒரு அதிரடி நடவடிக்கை ஆறு மணி நேரத்துக்கு மேல் நீடிக்கிறது.
என்ன என்று தெரியாது பலரும் வியப்புடன் பார்த்திருக்க ஈற்றில் பல வெளி நாட்டுப்பெண்களுடன் பொலிஸ் வாகனம் அந்த இடத்திலிருந்து செல்கின்றது.
ஆம் அது கொள்ளுப்பிட்டி சந்தியில் உள்ள ஒரு பிரபலமான நட்சத்திர ஹோட்டல். 5 மாடிகளைக் கொண்ட அந்த ஹோட்டல் வெளி நாட்டவர்க ளுக்கு தங்குமிட வசதிகளை செய்துகொடுக்கும் ஒரு இடமாகக் கூட இயங்கியது எனலாம்.
அந்த ஹோட்டலின் மூன்றாவது மாடியில் உள்ள ஒரு மசாஜ் நிலையம். அது சாதாரண மசாஜ் நிலையம் அல்ல. தாய்லாந்து பாரம்பரிய ஆயுர்வேத மசாஜ் நிலையம்.
‘ஜே மசாஜ் நிலையம்’ என்பது அதன் பெயர். உடலுக்கு உடல் (body to body )என்பது அதன் வாடிக்கையாளர்கள் இலகுவில் இடத்தை அடையாளம் காண்பதற்காக போடப்பட்டுள்ள பலகையின் வாசகம்.
அந்த ஹோட்டல் கட்டட தொகுதிக்குள் சாதா ரணமாக நுழையும் ஒருவர் நேரடியாக குறித்த மூன்றாம் மாடியில் உள்ள மசாஜ் நிலையத்துக்கு சென்றுவிட முடியாது.
அதற்கென விசேடமாக ஒதுக்கப்பட்ட அல்லது வேறுபடுத்தப்பட்ட வாயில் உண்டு. ஹோட்டல் கட்டடத்தின் கீழ் மாடியில் தனியாக உள்ள மின் தூக்கி இந்த மசாஜ் நிலை யத்துக்கு மட்டுமே ஆட்களை கொண்டு செல்லும்.
இன்னும் இந்த மசாஜ் நிலையம் தொடர்பில் கூறுவதென்றால் சாதாரண மசாஜ் நிலையம் ஒன்றில் சிகிச்சை நடவடிக்கைகள் இடம்பெறும் திறந்த அல்லது அரைவாசி திறந்த அறைகளிலி ருந்தும் இந்த மசாஜ் நிலைய சிகிச்சை அறைகள் வித்தியாசமானவை.
மூடிய குளிரூட்டப்பட்ட சொகுசு அறைகளான அவற்றில் வெளி நாட்டு மதுபான வகைகள், உணவு வகைகள் என்பன உள்ள நிலையில் அவற்றை பெறுவதற்கு வேறாக கட்டணம் செலுத்த வேண்டும்.
இதனை விட இவ்வாறான சொகுசு அறைகள் ஒவ்வொன்றிலும் தாய்லாந்து பெண்கள் ஒவ்வொருவர் தங்கவைக் கப்பட்டுள்ளதுடன் அவர்களது உடைகள் உள்ளிட்ட அனைத்தும் அந்த அறைகளிலேயே இருக்கும். பிரமாண்டமான அறைகளான அவற்றில் இணைக் கப்பட்ட சொகுசு குளியலறைகள் வேறு.
இந்த ஜே மசாஜ் நிலையத்தில் இப்படியான ஆறு அறைகள். இதனை விட வரவேற்பறை, ஓய்வெடுக்கும் அறைகள் என்பன உள்ளன. தாய்லாந்து பெண்ணொருவர் நிர்வாகியாக இருக்க இலங்கையின் அம்பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண் வரவேற்பாளர் பெண்ணாக கடமையாற்றிய நிலையிலேயே மசாஜ் நிலையம் இயங்கிக்கொண்டி ருந்தது.
இவர்கள் இருவரையும் தவிர ஆறு அறை களிலும் ஒவ்வொரு தாய்லாந்து பெண்கள். இப்படி யான நிலைமையில் தான் அந்த மசாஜ் நிலையம் பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோனின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள வலான துஷ்பிரயோக தடுப்புப் பிரிவினரால் சுற்றிவளைக்கப்படுகின்றது.
பாணந்துறை, வலான பகுதியில் அமைந்துள்ள இந்த பிரிவுக்கு நாட்டில் எப்பாகத்திலும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரம் உள்ளது. இந்த பிரிவின் பதில் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் லூஷன் சூரிய பண்டார, நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் துமிந்த பாலசூரிய ஆகி யோரின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படுகின்றது.
நீண்ட நாட்களாக அந்த இடத்தில் இயங்கிவரும் குறித்த மசாஜ் நிலையம் திடீரென கடந்த 15 ஆம் திகதி சுற்றிவளைக்கப்பட காரணங்கள் இருந்தன.
பொலிஸாரின் தகவல்களின் பிரகாரம் இந்த இடத்தில் சாதாரண மசாஜ் சிகிச்சை ஒன்று அமைக்கப்படவில்லை. மாறாக மசாஜ் நிலையம் என்ற போர்வையில் அனுமதி பெற்றுக்கொள்ளப் பட்டு, முன்னர் கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி கட்டடத் தொகுதியில் நடத்திவரப்பட்ட பிரபலமான ‘ஜீனா மேடத்தின்‘ விபசார விடுதியை ஒத்த செயற் பாடுகளே இங்கும் இடம்பெற்று வந்ததாக அறிய முடிகின்றது.
இந் நிலையிலேயே பொலிஸ் மா அதிபரின் உத் தரவுக்கு அமைய குறித்த மசாஜ் நிலையத்தினை சுற்றிவளைக்கும் பொறுப்பு துஷ்பிரயோக தடுப்புப் பிரிவினருக்கு பாரப்படுத்தப்பட்டது. சுற்றிவளைப் புக்கு முன்னர் தகவல் சேகரிப்பில் பொலிஸார் ஈடு பட்டதில் பல தகவல்கள் வெ ளிப்பட்டுள்ளன.
இந்த மசாஜ் நிலையத்தை நடத்திவந்த வர் ஒரு கொரியநாட்டவர். இந் நாட்டின் கோடீஸ்வரர் ஒரு வரும் அந்த கொரிய நாட்டு பிரஜையுடன் மசாஜ் நிலையத்தை நடத்திவருவதில் பங்காற்றுவதாக அறிய முடிகின்றது.
அந்த கோடீஸ்வரர் பிரபல அரசியல் தலைவர் ஒருவரின் பாதுகாப்பு பிரிவில் உள்ள ஒருவருடன் நெருங்கிய தொடர்பு டையவர் என்பதால் அங்கு விபசாரம் இடம்பெறு வது தெரிந்தும் பல பாதுகாப்பு தரப்பினர் சுற்றிவளைப் புக்களில் ஈடுபட்டால் எங்கு தமது நட்சத்தி ரங்கள் கழன்றுவிடுமோ என்ற அச்சத்தில் கண்டும் காணாததுபோல் இருந்துள்ளனர்.
இந்த தைரியத் திலேயே மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபசாரம் தொடர்ந்துள்ளது.
இந் நிலையில் தான் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள வலான துஷ்பிரயோக தடுப்புப் பிரிவு சுற்றிவ ளைப்புக்கான திட்டத்தை தயார் செய்தது.
தனது திட்டத்தின் பிரகாரம் வர்த்தகர் ஒருவரை தேடிக் கொள்ளும் பொலிஸார் அவரை தாய்லாந்து பெண் களின் தேவையை நாடிச் செல்பவரைப் போன்று பணத்துடன் அந்த இடத்துக்கு அனுப்புகின்றனர். எனினும் நிலைமையோ சாதாரண மசாஜ் நிலை யங்களை சுற்றி வளைப்பதைப் போன்றல்லாது கடி மனாக இருந்தது.
ஏனெனில் இந்த மசாஜ் நிலையத்தின் வேலைகள் நண்பகல் 12 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு அதிகாலை 6 மணிக்கு நிறைவடைவதும் முன் கூட்டிய பதிவுகளும் இதற்கான காரணங்களாகும்.
அவை மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபசார விடுதியை நடத்த பாதுகாப்பான வழிமுறையும் கூட என்பதனாலேயே பொலிஸார் மிக சூட்சுமமான நடவடிக்கையில் தகவல்களை திரட் டலாயினர்.
கீழ் மாடியின் மின் தூக்கியூடாக ஒருவர் மூன்றாவது மடிக்கு நுழைந்ததும் அங்கு இருப்பது வர பேற்பறை. அந்த வரபேற்பறையை கடந்து மசாஜ் அறைகளுக்கு செல்லும் வரையான ஒவ்வொரு நகர்வும் சீ.சீ.ரீ.வி.கண்காணிப்பு கமராக்கல் ஊடாக அவதானிக்கப்பட்டுக்கொண்டே இருந்துள்ளன. இது தொடர்பில் சுவர்களில் அலங்காரங்களுக்கு வைக் கப்பட்டுள்ள பூக்களில் மிக சூட்சுமமாக கமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.
இதனைவிட அங்கு வரும் வி.ஐ.பி.க்களின் கார் இலக்கங்களை மறைக்கும் விதமாக மறைவொன்றை வைக்கும் வாகன தரி்ப்பிடத்திலுள்ள காவலாளிக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எவ்வித சந்தேகங்களும் ஏற்படா வண்ணம் பொலிஸாரின் திட்டப்படி சென்ற நபருக்கு உடன டியாகவே தாய்லாந்து பெண்ணொருவர் கிடைக் கவில்லை.
ஏனெனில் அந்த அளவுக்கு அந்த பெண் களுக்கு கேள்வி இருந்தமையே காரணம். அங்கு சென்ற பொலிஸ் உபாயக் காரருக்கு வேறு ஒரு நேரம் பதிவு செய்யப்படுகின்றது. அந்த நேரம் தொலைபேசியூடாக அந்த மசாஜ் நிலைய வரவேற் பாளரால் தெரியப்படுத்தப்படும் அதன் பின்னரேயே அந்த நேரத்துக்கு 15 நிமிடங்களுக்கு முன்னர் குறித்த நபர் அந்த இடத்துக்கு செல்ல வேண்டும். இதுவே அந்த மசாஜ் அல்லது விபசார விடுதியின் பாதுகாப்பு வழிமுறை.
ஒன்றரை மணி நேரம் தாய்லாந்து பெண்ணொருவருடன் அறையில் இருக்க பதிவுக் கட்டணமாக 8500 ரூபா செலுத்த வேண்டும். அதனை தொடர்ந்தே நேரம் ஒதுக்கப்படும். இதனை விட அந்த பெண்ணிடம் செல்பவர்கள் 10 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் ரூபா வரை சந்தோஷமாக கொடுப் பார்களாம்.
இந் நிலையில் தேவையான பணத்தொகையுடன் வியாபாரியை பொலிஸ் கான்ஸ்டபிள் தனஞ்சய னுடன் சொகுசு ஜீப் ஒன்றில் பொலிஸார் அந்த இடத்துக்கு அனுப்பினர்.
15 ஆம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு இவ்வாறு இவர்கள் அந்த இடத்துக்கு அனுப்பப்பட்டனர். அனைத்து பாதுகாப்பு கெடுபிடி களையும் வெற்றிகரமாக கடந்து அன்று மாலை 5.30 மணிக்கே நேரம் ஒதுக்கப்பட் டது.
ஒதுக்கப்பட்ட நேரத்துக்கு 15 நிமிடங்களுக்கு முன்னரேயே அங்கு சென்ற பொலிஸ் உபாயக்காரரான வர்த்தகர் 8500 ரூபாவை செலுத்தி தாய்லாந்து பெண் ஒருவருடன் அறையொன்றுக்குள் சென்றார்.
அது முதல் நடந்தவை அனைத்தும் வர்த்தகரின் உடலில் பொருத்தப்பட்ட இரகசிய கமராவில் பதிவானது. அது மசாஜ் நிலையம் அல்ல, விபசார விடுதியே என சான்று சொல்லும் ஆதாரங்கள் கமராவில் பதிவாகும் வரை காத்திருந்த வலான துஷ்பிரயோக தடுப்புப் பிரிவின் மேலதிக பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் லூஷன் சூரிய பண்டார , பொலிஸ் பரிசோதகர் துமிந்த பாலசூரிய ஆகியோர் சமிக்ஞைக்காக காலி வீதியில் காத்திருந்தனர்.
அறைக்குள் சென்ற பொலிஸ் உபாயக் காரர் கமரா பதிவுகளின் பின்னர் இரகசியமாக உதவி பொலிஸ் அத்தியட்சருக்கு தனது செல்போனில் சமிக்ஞை கொடுக்கவே பொலிஸ் குழு அந்த மசாஜ் நிலையம் இல்லை விபசார நிலையத்தை சுற்றிவளைத்தனர்.
கோட்டை நீதிவான் திலின கமகேவின் சுற்றிவ ளைப்பு உத்தரவு பத்திரத்தினையும் உடன் வைத் திருந்த பொலிஸார், அங்கு தாய்லாந்து பெண்க ளுடன் அறைகளில் இருந்தவர்கள், அந்த பெண்கள், நிர்வாகிகள் என அனைவரையும் பொலிஸ் பொறுப்பில் எடுத்தனர்.
தாய்லாந்து பெண்களை பரிபாலிக்க 50 வய தான மற்றொரு தாய்லாந்து பெண் அங்கு இருந்த நிலையில் அவருக்கு நன்றாக சிங்களமும் தெரிந் திருந்தது. அத்துடன் வரவேற்பாளர் பெண், விபசா ரத்தில் ஈடுபட்ட 6 தாய்லாந்து பெண் ஆகியோர் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டவர்களில் அடங்குவர்.
இதனை விட தாய்லாந்து பெண்களின் உடலை நாடி வந்திருந்த இரு சவூதி அரேபியர்கள், சர்வ தேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் இரு இலங்கை மாணவர்களும் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டு வாக்கு மூலம் பதியப்பட்டு கடும் எச்சரிக்கையின் பின்னர் விடுதலை செய்யப் பட்டனர்.
சவூதி அரேபிய நாட்டவர் இருவரும் இலங்கைக்கு அன்றைய தினமே வந்திருந்த நிலையில் அதில் ஒருவர் 22 முறை இலங் கைக்கு வந்து இந்த தாய்லாந்து பெண்களின் சேவையைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
மாணவர்கள் இருவரும் கொழும்பு 7 இல் உள்ள பிரபலமான வர்த்தகர் ஒருவருடைய மகன் மார் என்பதும் அவர்கள் வெளிநாடொன்றில் கல்வி பயில்வதும் தெரியவந்ததுடன் மற் றொரு கோடீஸ்வர வர்த்தகரும் அங்கு வைத்து பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டு விடுவிக்கப் பட்டவர்களில் அடங்குவார்.
எனினும் தாய்லாந்து பெண்கள் 7 பேரையும் இலங்கைப் பெண்ணையும் கைது செய்த பொலிஸார் அவர்கள் மீது விபசாரம், அதற்கு ஒத்துழைப்பு வழங்கியமை ஆகிய குற்றச்சாட்டுக் களை பதிவு செய்தனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில் அந்த தாய்லாந்து பெண்கள் அனைவரும் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்தவர்கள் என்பது தெளிவானது. எனினும் தாய்லாந்தில் இருந்து மசாஜ் பயிற்சி தொடர்பில் தாம் இலங்கைக்கு அனுப்பப்பட்டதாக முதலில் அந்த பெண்கள் பொலிஸாரிடம் குறிப்பிட்டனர். எனினும் பொலி ஸாரின் தொடர் விசாரணைகளில் அவர்கள், தாய்லாந்தில் தொழில் ரீதியிலான விபசாரிகள் என்பது தெளிவாகியுள்ளது.
இதனை விட ஒரு பெண் ஆகக்குறைந்தது நாளொன்றுக்கு 10 பேருக்கு விற்பனை செய்யப் பட்டுள்ளமையும் 60 நபர்களேனும் குறைந்தது அங்கு வந்து சென்றுள்ளமையும் தெரியவந்ததுடன் அவர்களின் சேவைக்காக பதிவு செய்திருந்தவர்கள், கடந்த நாட்களில் அங்கு வந்து சென்றவர்களின் விபரங்களையும் பொலிஸார் கைப்பற்றினர்.
இவர் களில் இலங்கை தேசிய கிரிக்கட் அணி வீரர்கள், அரசியல் பின் புலம் கொண்டவர்கள், கோடீஸ் வரர்கள், மாணவர்கள், பதுகாப்பு பிரிவினர் என பலரும் அடங்குகின்றனர்.
ஒரு நாளைக்கு இந்த நிலையம் ஊடாக 5 இலட் சத்துக்கும் மேற்பட்ட தொகை பெறப்பட்டுள்ளதுடன் மாதம் ஒன்றுக்கான வருமானம் ஒரு கோடி ரூபா வுக்கும் மேலானதாகும்.
தங்குமிடம், உணவு என்பன உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்பட்டு இந்த தாய்லாந்து விப சாரிகளுக்கு ஒரு இலட்சம் ரூபா மாத சம்பளமும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக பல இலட்சங்களை இவர்கள் வாடிக்கையாளர்களிட மிருந்து அன்பளிப்பாக பெற்றுக்கொண்டுள்ளனர்.
சம்பளத்துக்கு மேலதிகமாக குறைந்த பட்சம் ஒரு மில்லியன் ரூபாவை இவர்கள் வாடிக்கையாளர்க ளிடமிருந்து பெற்றுக்கொள்கின்றனர். தாய்லாந்தில் விபசாரம் சட்ட ரீதியாக இருந்தாலும் அங்கு இவ் வளவு வருமானம் ஈட்ட முடியாது என தெரிவித் திருக்கும் இந்த பெண்கள் இலங்கையில் ஆண்கள் அவர்களை சந்தோஷப்படுத்தும் அளவுக்கு அன்ப ளிப்புக்களை தருவதாகவும் சிலர் ஒரு இலட்சம் ரூபாவரை வழங்கிய சந்தர்ப்பங்களும் உள்ளதாக கூறுகின்றனர்.
இதனை விட பல ஆடவர்களுக்கு ஒரு பெண்னை விநியோகிக்கும் பெகேஜ் முறை யிலான சேவையும் இங்கு இருந்துள்ளதாகவும் இவ்வாறான விநியோகங்கள் இரவு 12 மணிக்கு பின்னரேயே மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் விசார ணைகளில் தெரியவந்துள்ளன.
இதற்காக அறவி டப்பட்ட கட்டணங்களும் அதிகமாகும். கோடீஸ் வரர்களின் பிள்ளைகள், அரசியல் வாதிகளின் பிள் ளைகள் என இந்த பெகேஜ் முறையை பயன்படுத்தியவர்களின் பட்டியல் நீண்டது.
இந் நிலையில் கைது செய்யப்பட்ட தாய்லாந்து பெண்களை கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் கடந்த 25 ஆம் திகதி நாடு கடத்துமாறு உத்தரவிட் டதுடன் விபசாரத்துக்கு அந்த இடத்தை வழங்கிய வரை கைது செய்து உடன் ஆஜர்படுத்துமாறு உத்த ரவு பிறப்பித்தது.
இதற்கு முன்னர் கடந்த ஆண்டினை அண்மித்தும் இந்த இடமானது குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் சுற்றிவளைக்கப்பட்டு சுற்றுலா விசாவில் வந்து விபசாரத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் தாய்லாந்தை சேர்ந்தவர்கள். இதனைத் தொடர்ந்து மூடப்பட்ட இந்த இடம் மீண்டும் தாய்லாந்தில் இருந்து பெண்களை வரவ ழைத்து நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடவேண்டிய விடயமாகும்.
இந் நிலையில் பெரும்பாலும் இணையம் ஊடா கவே தாய்லாந்து விபசாரிகள் நாட்டுக்குள் சுற்றுலா விசாவில் வரவழைக்கப்பட்டு இம்மாதிரியான சட்ட விரோத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இந் நிலையில் இணையத்தளம் மற்றும் சமூகவலைத்தளங்கள் ஊடாக நாட்டில் உள்ள பாலியல் தொழிலா ளர்கள் தொடர்பிலான தகவல்களை திரட்டுவதற் கான விசேட வேலைத்திட்டம் ஒன்று பாலியல் நோய்கள் மற்றும் எயிட்ஸ் நோய்த்தடுப்புப் பிரி வினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் வைத்திய அதிகாரி சிசிர லியனகே தெரிவிக்கின்றார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றுக்கு அமைய 35,000 முதல் 45,000 பேர் வரை பாலியல் தொழிலாளர்கள் நாட்டில் இருப்பது இனங்காணப்பட்டதாகவும் அதேவேளை 2013 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் பாலியல் தொழிலாளர்கள் 20,000 ஆக குறைவடைந்துள்ளதையும் அவதானிக்க கூடியதாக வுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இலங்கையில் மூன்று வருடங்களுக்குள் பாலியல் தொழிலாளர்களில் குறைவு ஏற்பட்டி ருக்க வாய்ப்பு இல்லை எனவும் அதனையும் விட அதிகரித்திருக்கவே வேண்டும் எனவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டுகிறார்.
தற்போது பாலியல் தொழிலாளர்கள் சமூகவலைத்தளங்கள், இணையதளம் ஊடாக தமக்கான வாடிக்கையாளர்களை பெற்றுக் கொள்வதனாலேயே 2013 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குறைவு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது என அவர் குறிப்பிடுகின்றார்.
இதனையடுத்தே இணைய தளம் மற்றும் சமூக வலைத்தளங்களினூடாக இவர்கள் தொடர்பான தகவல்களை திரட்டுவதற் கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
இவ்வாறு தகவல்களை பெறுவதன் நோக்கம் இவர்கள் பாதுகாப்பான முறையில் பாலியல் உற வுகளை மேற்கொள்கின்றனரா, எயிட்ஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா போன்ற தகவல்களை பெற்றுக் கொண்டு அவர்களுக்கு உரிய சிகிச்சைகளையும் பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே இந்த ஆய்வு முன்னெடுக்கப்படவுள்ளது.
‘எமது இணையத்தளம், எம்மால் முன்னெடுக்கப் படவுள்ள சமூகவலைத் தளக் கணக்குகள் ஊடாக கேட்கப்படுகின்ற கேள்விகளுக்கு பதில் அளிக் கலாம். இந்த ஆய்வின் போது பாலியல் தொழி லாளர்கள் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை ஆய்வுக்காக முன்வைக்கப்படும் கேள்விகளுக்கான பதிவுகளை அளிப்பதனூடாக எமது ஆய்வுக்கு ஒத்துழைக்கலாம்.
இதுவரையில் நாம் மேற்கொண்ட ஆய்வுகளிலி ருந்து பெற்றுக் கொண்ட தகவல்களுக்கு அமைய பெண் பாலியல் தொழிலாளர்களின் தரவுகளே உள் ளன. ஆனால் நாட்டில் ஆண் பாலியல் தொழிலா ளர்களும் உள்ளனர் அவர்களும் இந்த ஆய்வுக்கு ஒத்துழைப்பதனூடாக பாலியல் மற்றும் எயிட்ஸ் நோய்கள் பரவுவதை தடுப்பதற்கான முயற்சிகளை செய்யமுடியும்’ என அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் இது தொடர்பில் மேற் கொண்ட கலந்துரையாடலில் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண இவ்வாறான ஒரு கருத்தினை முன் வைத்தார்.
‘இலங்கையின் பாலியல் தொழில் சட்டபூர்வ மான ஒருவிடயமல்ல . பருவ வயதையடைந்த ஒரு ஆணும் பெண்னும் தமது விருப்பத்தின் பேரில் உறவு கொள்வது குற்றமல்ல. இது இலங்கை சட் டத்தில் உள்ள விடயம்.
ஆனால், பாலியல் தொழிலில் யாராவது ஈடுபடுவார்களானால் அல்லது பாதையில், சந்திகளில் நின்று அழைப்பார்களானால் சட்டத்தின் பார் வையில் குற்றமாகும். எமது நாட்டில் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் சுமார் 30,000 பேர் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
சட்டத்தில் சில இடங்களில் உள்ள விடயங் களால் எமக்கு அவர்களை கைது செய்ய முடியா துள்ளது.
இதனைவிட விபசாரிகளை வெளி நாடுகளிலி ருந்தோ உள் நாட்டிலோ தருவிப்பது, போக்குவரத்து வசதிகளை செய்துகொடுப்பது, தங்குமிட வசதி களைக் கொடுப்பது, விபசாரத்துக்கு இடமளிப்பது போன்றன குற்றமாகும்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தால் உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இதேவேளை கொள்ளுப்பிட்டி சுற்றிவளைப்பின் போது இரு மாணவர்கள் அங்கு இருந்தமையை நான் ஏற்கனவே குறி்ப்பிட்டிருந்தேன்.
மாணவர்கள் பலர் இவ்வாறான விபசார சூழல்களை நாடிச் செல்வது ஆபத்தானது. இது பிற்காலத்தில் அவர்களுக்கு பல பாலியல் சார்ந்த நோய்களை ஏற்படுத்தலாம். எனவே பெற்றோர் தமது பிள்ளைகளின் நடவடிக் கைகள் புழங்கும் இடங்கள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும். என்றார்.
இந்த விடயம் இவ்வாறிருக்க இலங்கையில் பெண் பாலியல் தொழிலாளர்கள் காணப்படுகின்ற அதேவேளை இளம் சிறுவர்களுக்கான கேள்வியும் அதிகமாக உள்ளதாக ‘இலங்கையில் சிறுவர் துஷ் பிரயோகம்’ என்ற சிங்கள ஆய்வு நூல் ஒன்று குறிப்பிடுகின்றது.
குறிப்பாக கரையோரப் பிரதேசங்களில் இந்த சிறுவர்களின் சேவைகள் காணப்படுவதாகவும் இந்த சிறுவர்கள் வெளிநாட்டவருக்கு விநியோகிக்கப்படுவதாகவும், அதற்கான விளம்பரங்கள் இணையத் தளம் ஊடாக செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்படு கின்றது.
நகர்ப்புறங்களில் ‘சக் போய்ஸ்’ என்ற பெயரில் ஆண்களுக்கான பாலியல் சேவை செய்யும் இளை ஞர்களையும் கண்டு கொள்ள முடியுமாக உள்ளது என அந்நூலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக இவ்வாறான சிறுவர்களும், இளைஞர் களும் பொது மலசலகூடங்களில் தமது தொலை பேசி இலக்கங்களை குறித்து வைத்து தமது சேவை தொடர்பிலும் குறிப்பிட்டு தமது பாலியல் சேவைக் கான விளம்பரங்களை செய்வதாகவும் அந்த நூல் சுட்டிக்காட்டுகின்றது.
ஆசியாவின் ஆச்சரியமாக இலங்கையை மாற்றும் போது இவ்வாறான அனாச்சாரங்கள் தொடர்பிலும் அவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பிலும் நாம் அவதானம் செலுத்துவது முக்கியமானதாகும். இன்றேல் ஆசியாவின் நோயாளியாக இலங்கை மாறிவிடும்.
எம்.எப்.எம்.பஸீர்